search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stressing"

    • அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • விவசாயிகள் முழுமையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான் குடி ஆகிய பகுதிகளில் வேளாண்துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ்துளை கிணறு ஏற்படுத் துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடைகோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழு மையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) முரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ரவிசங்கர், தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசின் பயனுள்ள திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விவசாயி களுக்கு அரசின் திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கி வருகிறது. வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ் துளை கிணறு ஏற்படுத்துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்க ளின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கப்பட்டு வரு கிறது.

    அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளில் வசிக்கும் விவசாய பெருங்குடி மக்க ளுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில் துறை ரீதியாக சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் உரிய களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது. அதனை, விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதா ரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×