என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.
தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க. 10 வார்டுகளிலும், தி.மு.க. 5 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 வார்டுகளிலும், அ.ம.மு.க. 5 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு மட்டும் எந்தக் கட்சி பெரும்பான்மையை பெறும் என்பதில் இழுபறி நிலவுகிறது.
இந்நிலையில் சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள், வெற்றி பெற்ற கையோடு தி.மு.க.வில் இணைந்தனர்.
22வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன், 4வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் சேது நாச்சியார், 19வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் பாக்கியலட்சுமி, 23வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் ராஜபாண்டி ஆகிய 4 பேரும் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்கள் 4 பேரையும் சால்வை அணிவித்து அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் அதிகாரிகள் வார்டுகளை மறுவரையறை செய்ததில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வார்டு தனித்தனியாக ஒதுக்கப்பட்டதால் குழப்பம் நிலவி வருகிறது.
குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு ஒருவருக்கு 3-வது வார்டு இன்னொருவருக்கு 4-வது வார்டு இன்னொருவருக்கு 6-வது வார்டு என ஒதுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கானாடுகாத்தான் பேரூராட்சியில் 3, 5 வார்டுகளிலும் உள்ள குழப்பத்தால் பாலையூர் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. பழையூர் பகுதியில் ஏற்கனவே 1, 2 என 2 வார்டுகள் இருந்தன.ஆனால் அதிகாரிகள் சமீபத்தில் வார்டுகளை மறுவரையறை செய்தபோது 2-வது வார்டை 2-ஆக பிரித்து 3, 5-வது வார்டுகளில் சேர்த்தனர். இதையடுத்து பழையூர் பகுதி மக்கள் வார்டை ஏற்கனவே இருந்தபடி சீரமைத்து தர வேண்டும் இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக போவதாக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
நடவடிக்கை இல்லாத நிலையில் பழையூர் பகுதியைச் சேர்ந்த பழைய 2-வது வார்டு மக்கள் திடீரென தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தற்போது பாலையூர் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால், அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.






