search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடக்கழிவு"

    • சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
    • துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சிக்காக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து திடக்கழிவு செய்யும் முறையையும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்தும் பயிற்சி மேற்கொண்டனர்.

    மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • பாபநாசம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடந்தது.
    • பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடைபெற்றது.

    பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயகுமார், முத்து மேரி மைக்கேல் ராஜ், ஜாஃபர் அலி, புஷ்பா சக்திவேல், கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலட்சுமி, கோட்டையம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன.
    • குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையின் மையப்பகு தியில் காமராஜர் மா ர்க்கெட் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை புதுப்பித்து பல்வேறு வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதனால் இங்கிருந்த கடைகள் தஞ்சை மாதாக்கேட்டை சாலை காவேரி நகருக்கு தற்காலிமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தன.இந்த நிலையில்பணிகள் அனைத்தும் முடிவடை ந்ததால் முறைப்படி இன்று காமராஜர் மார்க்கெட் திறக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து காணொளி வழியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார், மண்டல குழு தலைவர் மேத்தா , மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.20 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், திடக்கழிவுகளை கையாளும் வசதி, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, மின் வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

    திடக்கழிவு விழிப்புணர்வு பேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார்.
    மானாமதுரை

    சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரை  சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளை யான்குடி  பேரூராட்சியில்  உள்ள தெருக்களில் வீடு, வீடாக திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்க  குடியிருப்பு தாரர்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

    பேரூராட்சிதலைவர் செய்யதுஜமிமா தலைமை யில் மன்ற  உறுப்பினர்கள்,  செயல் அலுவலர் கோபிநாத்  மற்றும் சுகாதர  ஆய்வாளர்  அலுவலக பணியாளர்கள்   ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு   பரிசுகள் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மேலும் பிளாஸ்டிக்கை ஒழித்து  முதல்வரின் மஞ்சப்பை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து  வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர முயற்சி செய்வோம் என்று விழிப்புணர்வு பிரசாரம்  செய்யப்பட்டது.

    தொடர்ந்து மக்களி டையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்தி  பிளாஸ்டிக்கை ஒழித்து மண்வளத்தை  பாதுகாக்க வேண்டும் எனபேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார். 
    ×