என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாம்
கணினி பட்டா திருத்த முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த முகாம் நாளை நடைபெறுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-&
அரசின் சேவைகள் பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டுசெல்லும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக நாளை(2&ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் வேப்பங்குளம் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் செலுவத்தி கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் சிறுகூடல்பட்டி கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் காயாம்பட்டி கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் நாலுகோட்டை கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் எழுநூற்றி மங்களம் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் டி.நெல்முடிக்கரை கிராமத் திலும், இளையான்குடி வட்டத்தில்¢ கீழநெட்டூர் கிராமத்திலும், காளையார் கோவில் வட்டத்தில் வலனை கிராமத்திலும் கணினிபட்டா திருத்தமுகாம்கள் நடைபெற உள்ளன.
பொதுமக்கள் மேற்கண்ட வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






