என் மலர்
உள்ளூர் செய்திகள்

தபால் நிலையத்தில் குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள்.
புதிய ஆதார் அட்டை விண்ணப்பிக்க குழந்தைகளுடன் திரண்ட பெண்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தபால் நிலையத்தில் புதிய ஆதார் அட்டை விண்ணப்பிக்க குழந்தைகளுடன் பெண்கள் திரண்டு வந்தனர்.
சிவகங்கை
தமிழக அரசு ஆதார் கார்டில் பெயர், முகவரி திருத்தங்கள் செய்யவும் புகைப்பட மாற்றம் மற்றும் ஆதார் கார்டில் செல்போன் நம்பர் இணைப்பு போன்றவற்றை பொதுமக்கள் மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக தலைமை தபால் நிலையங்களில் ஆதார் மையங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தலைமை தபால் நிலையத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு இன்று காலை புதிய ஆதார் கார்டு எடுக்கவும், ஆதார் கார்டில் திருத்தம் செய்யவும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் திரண்டனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்ததால் ஆதார் மைய ஊழியர்கள் முன்னுரிமையில் முதலில் வந்த 50 நபர்களுக்கு மட்டும் இன்று ஆதார் கார்டு விண்ணப்பித்தும், திருத்தம் செய்தும் கொடுத்தனர். மற்றவர்களை நாளை வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆதார் மையத்தில் நாள்தோறும் ஏராளமானோர் வருவதால் அங்குள்ள ஊழியர்கள் திணறி வருகிறார்கள். எனவே தேவகோட்டை சுற்றுவட்டார மையத்தில் ஆதார் சேவை மையங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story






