என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புதுத் தெருவைச் சேர்ந்தவர் உமர் பாருக் (வயது 38), பெயிண்டர். இவர் சாத்திக் கோட்டை அருகே தனியார் மருத்துவமனை பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உமர் பாருக் பரிதாபமாக இறந்தார். அவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதால் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதில் உமர் பாரூக்கை கொலை செய்ததாக சின்னக் கோடகுடியைச் சேர்ந்த விமல் (வயது 24), பிரவீன் (20), கைக்குடியைச் சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் (26), நல்லாங்குடி செல்வ குமார் (24), பல்லாகுளம் தர்மர் (24), தேரளப்பு கார்த்திக் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலைக்கான காரணம் குறித்து கைதானவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-
உமர்பாரூக் மணல் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது அங்கு வழிப்பறி வழக்கில் கைதாகி விமல் இருந்தார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு விடுதலையாகி வந்த அவர்கள் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் கிடைத்த பொருட்களை உமர் பாருக்கிடம் மற்றவர்கள் கொடுத்ததாகவும் அது குறித்து கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்காததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் வேதனையில் இருந்த முதியவர், டாமின் நினைவாக மானாமதுரையில் சிலை ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு, மாலை, ஆடை அணிவித்து வழிபாடு செய்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
இதுகுறித்து முதியவர் முத்து கூறுகையில், " என் பசங்களைவிட என் நாய் மீது அதிகம் பாசம் கொண்டேன். 2010-ம் ஆண்டு முதல் என்னுடன் இருந்தது. 2021-ல் இறந்துவிட்டது. என் தாத்தா, பாட்டி, தந்தை என அனைவரும் நாய் பிரியர்கள்" என்றார்.
மேலும் முத்துவின் மகன் மனோஜ் குமார் கூறியதாவது:-
இறந்த டாம் நாய்க்கு ரூ.80 ஆயிரம் செலவில் இந்த பளிங்கு சிலை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாய்க்கு கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம். புனித நாட்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னதானம் செய்து சிலைக்கு மாலை அணிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. போட்டோ ஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி- திருமணமான 20 நாளில் பரிதாபம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புது தெருவை சேர்ந்தவர் பிரான்மலை. இவரது மகன் உமர்பாரூக் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி ரிஸ்வானா பர்வீன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
உமர்பாரூக் பெயிண்டிங் மற்றும் கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மணல் கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். அதன் பிறகு வழக்கம்போல் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
நேற்று உமர்பாரூக் வீட்டில் இருந்து மாலை 3 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார். இரவு 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உமர்பாரூக்கை தேடினர்.
இந்த நிலையில் சாத்திக்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை பின்புறம் அவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த உமர்பாரூக்கை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தினர்.
உமர்பாரூக்கை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் இருந்தபோது உமர்பாரூக்குக்கு அங்கு ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் இருந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் இந்த பழக்கம் நீடித்துள்ளது. எனவே அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சரகத்தில் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசார் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர். பல இடங்களுக்கும் ரோந்து செல்ல போலீசார் இல்லாததால் குற்றச்செயல்கள் தொடர்வதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையை தடுக்க போலீசார் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






