search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு முட்டியது"

    • சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 15 மண்டலங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
    • மாடு பிடிபட்ட 3 நாட்களுக்குள் உரிமையாளர் வரவில்லை என்றால் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 வீதம் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன. மாடுகளின் கொம்புகளில் இருசக்கர வாகனத்தின் முகப்பு பகுதி உரசி விபத்துக்குள்ளாகின்றனர்.

    கடந்த வாரம் அரும்பாக்கத்தில் சாலையில் தாயுடன் நடந்து சென்ற பள்ளி சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சமூக வலைதளத்தில் இந்த காட்சி பரபரப்பாக வைரலாகி பொதுமக்களை பதற வைத்தது.

    இதையடுத்து மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை சாலைகளில் விடாமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மாநகராட்சி எச்சரித்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 15 மண்டலங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் பிடிபட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். அடுத்தடுத்து 3 முறை பிடிபட்டால் புளு கிராசிடம் ஒப்படைக்கப்படும்.

    மாடு பிடிபட்ட 3 நாட்களுக்குள் உரிமையாளர் வரவில்லை என்றால் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 வீதம் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். இதுபற்றி மாநகராட்சி கால்நடை மருத்துவர் கூறும்போது, 'சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். 2 வாரத்தில் 284 மாடுகள் பிடிபட்டன. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் மாட்டின் உரிமையாளர் விவரங்களை போலீசாரிடம் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எச்சரித்து அனுப்புவதோடு தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றார்.

    மாநகராட்சி நடவடிக்கை தீவிரமாக இருந்தாலும் சென்னையில் பல இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. கிராமப் புறங்களில் திரிவது போல நகரத்தில் மாடுகள் கட்ட விழ்க்கப்பட்டு சாலையில் விடப்படுவதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சூளைமேடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன.

    அத்துமீறும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாடுகள் மேய்வதற்கு நகரப் பகுதியில் இடம் குறைவு. மாடு வளர்ப்பவர்கள் பொறுப்பு இல்லாமல் மாடுகளை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவர்களின் அலட்சியத்தால் அசம்பாவிதங்கள் நேர்ந்து விடுகிறது.

    விதிகளை மீறி சுற்றித்திரியும் மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய அதன் உரிமையாளர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தால்தான் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். சட்டங்களும், விதிகளும் கடுமையானால் தான் உரிமையாளர்களுக்கு பொறுப்பு வரும். அதுவரையில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவிக்கின்றனர்.

    • மேய்ப்பவர் இன்றி தனியாக மாடுகளை திரிய விடக்கூடாது.
    • பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சாலையில் மாடு முட்டி பள்ளி சிறுமி படுகாயமடைந்ததையடுத்து, இதுபோல் இனி எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது என்று சிறுமியின் தாத்தா வலியுறுத்தி உள்ளார்.

    இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும்.

    மேய்ப்பவர் இன்றி தனியாக மாடுகளை திரிய விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாடுகளை வளர்க்க தேவையான அளவு இடம் இல்லாமல் தெருவை நம்பி வளர்க்கப்படும் மாட்டை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அரும்பாக்கத்தில் சிறுமியை முட்டி தூக்கிய மாடுகளின் உரிமையாளரான விக்கி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மாடுகளுக்கு மட்டும் அபராதமாக 5 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை சூளைமேடு காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர் சித்திக் அலி. இவரது மனைவி அர்சின் பானு. இவர்களுக்கு 9 வயதில் ஆயிஷா என்ற மகளும் 5 வயதில் மகனும் உள்ளனர்.

    இருவரும் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். ஆயிஷா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மகளையும் மகனையும் அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலையில் அர்சின் பானு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    4-ம் வகுப்பு மாணவியான ஆயிஷா தாயின் முன்னால் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சென்று கொண்டிருந்த 2 மாடுகளில் ஒன்று திடீரென திரும்பி முட்டி தூக்கியது. இதனால் பயந்துபோன சிறுமி கூச்சல் போட்டார். ஆனால் மாடு விடாமல் முட்டித் தள்ளிக்கொண்டே இருந்தது.

    தரையில் போட்டு புரட்டி எடுத்தது. இதனைப் பார்த்த தாயும், தம்பியும் அதிர்ச்சியில் உறைந்து போய் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினார்கள். அப்போது அங்கிருந்த சிலர் மாட்டை கம்பு மற்றும் கற்களால் தாக்கி விரட்டினர்.

    இருப்பினும் மாடு சிறுமியை துவம்சம் செய்ததை நிறுத்தவில்லை. கடும் போராட்டத்துக்கு பிறகே சிறுமியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாட்டிடம் இருந்து மீட்டனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் சிறுமியின் முகம், கை, கால்களில் சிராய்ப்பு, காயங்கள் ஏற்பட்டன. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளார்.

    இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாடு முட்டிய சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    அனைவரும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    காயம் அடைந்த சிறுமியை அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    அரும்பாக்கம் சம்பவத்துக்கு பிறகு மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை உடனடியாக பிடிப்பதற்கு உத்தரவிட்டு 25 மாடுகள் பிடிக்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதியில் மாடுகளை வளர்ப்பவர்கள் வீடுகளில் கட்டி வைத்தே அதனை வளர்க்க வேண்டும். தெருக்களில் சுற்றித் திரியவிட்டால் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இப்படி பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இனி மாடுகளை தெருக்களில் சுற்றித் திரிய விடமாட்டோம் என்று பாண்டு பத்திரம் எழுதி வாங்கிய பிறகே திருப்பி கொடுக்கிறோம். அதே நேரத்தில் அவர்களிடம் ஒப்படைக்கும் வரையில் மாநகராட்சி பராமரிக்கும்.

    ஒவ்வொரு நாளுக்கும் தினமும் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டு மாடுகளை அழைத்துச் செல்பவர்கள் மீண்டும் மீண்டும் தெருக்களில் மாடுகளை அவிழ்த்து விட்டால் அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாடுகளை வளர்ப்பவர்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அங்கு மாடு வளர்க்க இடம் இல்லை என்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட மாடுகளை கோ சாலையில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

    ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து தனியாக அடைத்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து அபராதமும் விதித்து உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு 1,259 மாடுகளும், 2022-ம் ஆண்டு 7,278 மாடுகளும் பிடிபட்டிருந்தன. இந்த ஆண்டு இதுவரையில் 2,809 மாடுகள் பிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்த மாடுகளுக்கு மட்டும் அபராதமாக 5 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அரும்பாக்கத்தில் சிறுமியை முட்டி தூக்கிய மாடுகளின் உரிமையாளரான விக்கி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 289 ஐ.பி.சி. (அச்சுறுத்தும் வகையில் மாடுகளை ரோட்டில் சுற்ற விடுதல், 337 ஐ.பி.சி. (காயம் ஏற்படுத்துதல்) ஆகிய 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இச்சட்டப் பிரிவுகள் ஜாமீனில் செல்லக்கூடிய பிரிவுகள் என்பதால் அவர் கைதாகி விடுதலையாகி உள்ளார்.

    ஆனால் அரும்பாக்கம் சம்பவம் போல் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • மக்கள் நெருக்கம் மிகுந்த அனைத்து தெருக்களிலும், மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடித்துவிட்டு தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி மாடு முட்டி கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை இணையதளத்தில் பார்க்கின்றபோது நெஞ்சம் பதை பதைக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி பூரண குணமடைந்து விரைந்து இல்லம் திரும்ப வேண்டும். உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் நெருக்கம் மிகுந்த அனைத்து தெருக்களிலும், மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், புரசைவாக்கம், பெரம்பூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நாய்கள் மற்றும் மாடுகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நாய்கள் அங்குமிங்கும் குறுக்கே செல்வதன் காரணமாக பல விபத்துகள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சிலர் நாய்க் கடிக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மாடுகள் தெருக்களில் சுற்றித் திரிவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லையெனில், மனிதர்கள் படுகாயமடைவதும், உயிரிழப்பதும் தொடர் கதையாகிவிடும்.

    எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப் படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாட்டுக்கு வேறு ஏதேனும் வெறி பிடித்த நோய் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சாலையில் மாடு முட்டி பள்ளி சிறுமி படுகாயமடைந்ததையடுத்து, இதுபோல் இனி எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது என்று சிறுமியின் தாத்தா வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். தலையில் 4 தையல் போடப்பட்டுள்ளது. உடம்பில் காயங்கள் உள்ளது. சிறுமி அதிர்ச்சியில் உள்ளார். கண் சிவந்து காணப்படுகிறது என்று கூறினார்.

    சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 மாடுகளும் பிடிக்கப்பட்டு அதற்கென உரிய மாட்டு தொழுவத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு வேறு ஏதேனும் வெறி பிடித்த நோய் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கால்நடை பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்படும்.

    மாடுகளை வளர்க்க தேவையான அளவு இடம் இல்லாமல் தெருவை நம்பி வளர்க்கப்படும் மாட்டை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி சென்று திரும்பிய குழந்தை வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது.
    • பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித்தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள்.

    பள்ளி சென்று திரும்பிய குழந்தை வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் தூக்கி வீசியது.
    • மாடு முட்டி தாக்கியதில் சிறுமிக்கு பல இடங்களில் ரத்த காயம், சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

    அண்ணாநகர்:

    சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவியது. நெஞ்சை பதற வைக்கும் அந்த காட்சி அனைவரையும் சில நிமிடங்கள் உறைய வைத்து விடுகின்றன.

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஹர் சின்பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா (9). எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகள் 2-ம் வகுப்பு படிக்கிறார். இரண்டு மகள்களையும் பானு தினமும் பள்ளிக்கு நடந்து சென்று விடுவதும், பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்தும் வருவது வழக்கம்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு பானு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி இளங்கோ தெரு வழியாக சென்றபோது மாடுகள் ரோட்டில் சென்று கொண்டிருந்தன.

    அப்போது ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் தூக்கி வீசியது. தாயின் கையை பிடித்தவாறு சென்ற சிறுமியை சற்றும் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் மாடு தூக்கி வீசியதில் பானு அதிர்ச்சி அடைந்தார். தூக்கி வீசிய சிறுமியை மாடு விடாமல் குத்தி தரையில் அழுத்தியது.

    பானுவின் கண்முன்னே மாடு தனது மகளை தாக்கியதை தொடர்ந்து சாலையில் கிடந்த கற்களை கொண்டு மாட்டின்மீது வீசி தாக்கினார். இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டவாறு மாட்டின்மீது கற்களை வீசி அதனை விரட்ட முயற்சித்தனர்.

    ஆனாலும் மாடு சிறுமியை விடவில்லை. தொடர்ந்து கொம்பால் குத்திக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ஒருவர் கட்டையால் மாட்டை அடித்து விரட்டினார். அதன்பிறகே மாட்டின் பிடியில் இருந்து சிறுமி தப்பினார்.

    மயங்கி கிடந்த சிறுமியின் முகத்தின் மீது தண்ணீர் தெளித்தனர். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை பானு கொண்டு போய் சேர்த்தார். மாடு முட்டி தாக்கியதில் சிறுமிக்கு பல இடங்களில் ரத்த காயம், சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

    சாலையில் நடந்து சென்ற சிறுமியை தாக்கிய சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். மாட்டின் உரிமையாளர் அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக் (26) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமி தாக்கிய மாட்டை மாநகராட்சி ஊழியர் கொண்டு சென்றார்.

    சென்னையில் பொது இடங்களில், மாடுகள் இஷ்டத்திற்கு அலைந்து திரிகின்றன. அதனை உரிமையாளர்கள் கட்டுப்படுத்துவது இல்லை. சாலை விபத்தையும், இதுபோன்ற விபரீதத்தையும் அவ்வப்போது ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதத்தொகை கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    ×