என் மலர்
சிவகங்கை
- மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
- அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வின் பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. அரசை அகற்றிவிட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங்கட்சியை எதிர்த்து பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தவும், பல திட்டங்களை வகுக்கவும் ஒரு வலுவான தலைவராக அவர் திகழ்கிறார். அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் வழியிலே அவரின் மேலான ஆலோசனையை கேட்டு நாம் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அமோகமாக வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமர செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர் செயலாளர் ராஜா, மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டிபன், சிவாஜி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, சேவியர், ஸ்ரீதர், செல்வ மணி, பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்்ப்பதி வேட்டில் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற, 9-ம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார்் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை நேரடியாக மனுதாரா்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
தொடா்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாராரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.
எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடா்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ள வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சங்கராபுரம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு கிராவல் மண் திருடுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
- மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ். நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை14-வது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ரூ.33 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேவையான கிராவல் மண்ணை ஒப்பந்ததாரர் குவாரிகளில் வாங்கா மல் கே.கே.நகரில் கட்டப்பட்டு ள்ள குடிநீர்தொட்டி பணியில் மிஞ்சிய மண்ணை இரவு நேரங்களில திருட்டுத்தனமாக அள்ளி வந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி கவுன்சிலர் கணபதி மற்றும் அந்தப்பகுதி மக்கள் சாலைப்பணியை நடக்க விடாமல் நிறுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மருங்கிப்பட்டி ரமேஷ் என்பவர் கூறுகையில், அரசுக்கு சொந்தமான கிராவல் மண்ணை திருடுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் இருபுறமும் எந்திரங்களால் மண்ணை வெட்டி ஓரங்கள் அமைக்கின்றனர்.
33 அடி சாலையில் 3 மீட்டர் மட்டுமே சாலை போடப்படுகிறது.ஓரங்களில் பள்ளமாக மண்ணை வெட்டி பயன்படுத்துவதால் சாலை குறுகிய சாலையாக மாறிவிடுகிறது.
மேலும் வீடுகளுக்கும், பிளாட்டுகளுக்கும் முன்புறம் கால்வாய் போல் ஆகிவிடுகிறது. சாலை பணிக்கு தேவையான மண்ணை ஒப்பந்ததாரர் விலைக்கு வாங்கி அதனை பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தலையிட்டு கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில், பொதுமக்கள் தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் எச்ச ரிக்கை விடுத்துள்ளோம்.சாலையின் இருபுறமும் தோண்டிய மண்ணை பரப்பிவிட்டு சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன். மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- நகராட்சி சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் உறுதியளித்துள்ளார்.
- காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது.
காரைக்குடி
காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
குணசேகரன் (துணைத்தலைவர்) :- சூடாமணிபுரம், தேவஸ்தான பகுதி, அண்ணாநகர், சேர்வார் ஊரணி பகுதிக ளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்க ளுக்கு வரி போட வேண்டும்.
அன்னை மைக்கேல் (தி.மு.க. கவுன்சிலர்) :- காரைக்குடியில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி வாங்குவதில் புரோக்கர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் அவப்பெயர் ஏற்படுகிறது. சாலையோர மீன் கடைகளால் சுகா தாரக்கேடு நிலவுகிறது. நல்லதண்ணீர் ஊரணி அருகே ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.
குருபாலு (அ.தி.மு.க. கவுன்சிலர்) :- அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். சாலை அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும்.
கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர்.
கூட்டத்தில் இறுதியாக தலைவர் முத்துதுரை பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ. 10 கோடியும், தெருவிளக்கு அமைக்க ரூ. 3 கோடியும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.
கடந்த ஆட்சியில் நகராட்சியின் இழந்த சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதே முதல் கடமை.
ஊரகத்துறையில் சாதனை புரிந்து ஜனாதிபதி விருது பெற்ற அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசி னார்.
கூட்டத்தில் பொறியாளர் கோவிந்தராஜ், நகரமைப்பு அலுவலர் மாலதி, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்புவனம் அருகே பொட்டபாளையத்தில் 187 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பொட்டபாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி அரசின் பல்வேறு துறை சார்பில் 187 பயனாளிகளுக்கு ரூ. 42.07 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் இடங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அதில் மருத்துவ முகாம்கள், கால்நடை முகாம்கள், வேளாண் பொருட்கள் சார்ந்த கண்காட்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் தொடர்பு முகாமை நடத்திட அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் அருகே தடையை மீறி கோவில் வாசலில் கிராம மக்கள் பொங்கல் வைத்தனர்.
- தற்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பூங்குன்ற நாடு என அழைக்கப்படும் 24 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட மகிபா பாலன்பட்டியில் பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி செவ்வாயன்று காவனூர் கிராம மக்கள் ஒன்றுகூடி ஆற்றின் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து வந்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.இந்த ஆண்டும் காவனூர் கிராம மக்கள் விழா நடத்த ஏற்பாடு செய்தனர். இதில் சிலரை ஒதுக்கிவைத்துவிட்டு பொங்கல் திருவிழா நடத்துவதாகவும், தங்களையும் சேர்த்து விழா நடத்த வேண்டும் என்றும் சிலர் எழுப்பிய பிரச்சினையால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவில் விழாவை நடத்த வேண்டும், இல்லை என்றால் விழாவை நடத்தக் கூடாது என்று வட்டாட்சியர் தலைமையில் கடந்த 30-ந் தேதி நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதில் இரு தரப்பினரும் சமாதானம் ஆகாததால் பொங்கல் திருவிழாவை நடத்த தடை விதித்து திருப்பத்தூர் தாசில்தார் உத்தரவிட்டார்.
புரட்டாசி 2-வது செவ்வாய்கிழமையன்று விழா நடத்த கிராமத்தினர் முடிவு செய்த நிலையில், தடை கோரி எதிர்தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தடை உத்தரவை மீறி புரட்டாசி 4-வது செவ்வாய்க்கிழமையான நேற்று 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து வாசலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், நேர்த்திக்கடனாக சேவலை பலியிட்டும் விழா கொண்டாடினர்.
தடையை மீறி பொங்கல் வைக்க முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்ததால், கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.
தற்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கிராம மக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி, சேவல் வெட்டி வழிபாடு நடத்திய பின்பு காவனூர் கிராமத்திற்கு நடந்து சென்றனர்.
- ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
- பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட பாணபரன் மற்றும் படமாத்தூர் கண்மாய்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 யூனியன் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்துவது மட்டுமின்றி, நீர்வள ஆதாரங்களை சீரமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், வரத்துக்கால்வாய் சீரமைத்தல், சங்கன் பிட் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட 43 ஊராட்சிகளில் 88 தொகுப்புக்களில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் தொடர்பாக சிவக ங்கை யூனியனுக்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி, கரும்பாவூர் கிராமத்தில் ரூ.8.56 லட்சம் மதிப்பீட்டில் பாணபரன் கண்மாய் சங்கன் பிட் மற்றும் படமாத்தூர் கிராமத்தில் ரூ.7.67 லட்சம் மதிப்பீட்டில் படமாத்தூர் கண்மாய் சங்கன் பிட் ஆகியவைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேட்டறிந்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) விசாலாட்சி, உதவிப்பொறியாளர்கள் கிருஷ்ணகுமாரி, தேவிசங்கர், சையது இப்ராகிம், ஒன்றியப்பணி மேற்பார்வையாளர் (ஓவர்சியர்) செந்தில்நாதன், சாலை ஆய்வாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம், ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுமதி சரவணன் (பில்லூர்), மங்களம் (படமாத்தூர்) ஆகியோர் உடனிருந்தனர்.
- பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 142 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள 3 கட்டிங்களில் ஒன்று பழுதடைந்துள்ளது. அங்கு யாரும் உள்ளே செல்லாதபடி எச்ச ரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அருகே உள்ள மற்ற 2 கட்டிடங்களிலும் 8-ம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலண்டு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் பள்ளியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் அந்த கட்டிட அறைகளை திறந்தபோது ஆசிரியர் இருக்கைக்கு மேலே இருந்த மேற்கூரை இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ ஆகி யோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அந்தப்ப குதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளி கட்டிடம் கட்டி சில ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தரமில்லாமல் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் போன்ற அனைத்தும் கட்டிடங்களும் உள்ளது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்கும் போது பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே வரும் காலங்களில் தரமான கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர். பள்ளி கட்டிடத்தின் நிலைமை மோசமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.
- வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள்அவதிப்படுகின்றனர்.
- இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் செல்லும் வழியில் உள்ளது சாத்தமங்கலம். இந்த கிராமத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் மற்றும் விஷ பூச்சிகள் புகுந்து விடும் என்ற பயத்தில் உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.
தேங்கிய மழை நீரால் கொசுதொந்தரவும் அதிகமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தேங்கிய மழைநீரை கடந்து செல்லும் போது சிரமத்துக்கு உள்ளாவதாகவும் கூறினர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அடிக்கடி மழை பெய்யும் போதெல்லாம் இந்த நிலை ஏற்படுகிறது. மழைநீர் வடியவும் நீண்ட நாட்கள் ஆகிவிடுகிறது. தற்போது தொடர்மழையினால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் ஊரை விட்டு காலி செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
- திருப்புவனம் அருகே, நாளை மக்கள் தொடா்பு முகாம் நடக்கிறது.
- சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்..
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை உள்வட்டம், பொட்டபாளையம் கிராம பஞ்சாயத்து அலுவலக அருகில் நாளை (12-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் அரசுத்துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே நோக்கம் ஆகும்.
பொட்டபாளையம் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் இந்த மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்.
- பாலத்தில் கார் மோதியதால் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.
- மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஆசிரியராக பணி வருபவர் ஜான் பெஸ்டர்ட். இவர் சிவகங்கையில் இருந்து பள்ளிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் ஆசிரியர் ஜான் பெஸ்டர்ட் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த திருக்கோஷ்டியூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகம், காவலர் வீரபாண்டியன் ஆகியோர் காயமடைந்த ஆசிரியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென இறந்து விட்டார்.
- வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே காராம்பட்டியை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மனைவி (வயது58). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா (56) என்பவர் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென இறந்து விட்டார். இதற்கு லட்சுமி செய்வினை வைத்தது தான் காரணம் என்று கூறி, கருப்பையா லட்சுமியிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த ஆண்டிச்சி என்பவரும் வந்தார். அவர்கள் காராம்பட்டி கண்மாய் கரையில் வந்தபோது கருப்பையா அங்கு வந்தார்.
அவர் லட்சுமியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கருப்பையா கடப்பாரையால் லட்சுமியை அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை தடுக்க முயன்ற ஆண்டிச்சியையும் கருப்பையா தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆண்டிச்சி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகங்கை தாலுகா போலீசார் கொலை செய்யப்பட்ட லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.






