search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    • சிவகங்கை மாவட்டத்தில் நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கூட்டுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 91 விற்பனையா ளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 12 கட்டுநர்கள் (பேக்கர்) பணி யிடங்க ளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.drbsvg.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதா ரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJDB என்ற யூ-டியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக்கட்ட ணங்கள் செலுத்த தேவையான சலான்களை மேற்கண்ட இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.drbsvg22@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய அலைபேசி எண் 70942 55260 வாயிலாகவும் சிவகங்கை மாவட்ட ஆன்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×