search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி சொத்துக்களை மீட்க நடவடிக்கை
    X

    காரைக்குடியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. 

    நகராட்சி சொத்துக்களை மீட்க நடவடிக்கை

    • நகராட்சி சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் உறுதியளித்துள்ளார்.
    • காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    குணசேகரன் (துணைத்தலைவர்) :- சூடாமணிபுரம், தேவஸ்தான பகுதி, அண்ணாநகர், சேர்வார் ஊரணி பகுதிக ளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்க ளுக்கு வரி போட வேண்டும்.

    அன்னை மைக்கேல் (தி.மு.க. கவுன்சிலர்) :- காரைக்குடியில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி வாங்குவதில் புரோக்கர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் அவப்பெயர் ஏற்படுகிறது. சாலையோர மீன் கடைகளால் சுகா தாரக்கேடு நிலவுகிறது. நல்லதண்ணீர் ஊரணி அருகே ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

    குருபாலு (அ.தி.மு.க. கவுன்சிலர்) :- அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். சாலை அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர்.

    கூட்டத்தில் இறுதியாக தலைவர் முத்துதுரை பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ. 10 கோடியும், தெருவிளக்கு அமைக்க ரூ. 3 கோடியும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.

    கடந்த ஆட்சியில் நகராட்சியின் இழந்த சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதே முதல் கடமை.

    ஊரகத்துறையில் சாதனை புரிந்து ஜனாதிபதி விருது பெற்ற அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் பொறியாளர் கோவிந்தராஜ், நகரமைப்பு அலுவலர் மாலதி, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×