search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar irrigation"

    • பெரியாறு நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கா் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கா் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கா் நிலங்களுக்கு, வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் கடந்த 7.9.2022 முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டது.

    தற்போது, தண்ணீர் திறக்கப்பட்ட ஒருமாத காலத்தில் கட்டாணிப்பட்டி முதல் கால்வாயில் 33 கண்மாய்களுக்கும், கட்டாணிப்பட்டி 2-ம் கால்வாயில் 3 கண்மாய்களுக்கும், 48-வது மடை கால்வாயில் 10 கண்மாய்களுக்கும், சீல்டு கால்வாயில் 6 கண்மாய்களுக்கும் மற்றும் லெஸ்ஸீஸ் கால்வாயில் 14 கண்மாய்க்கும் மொத்தம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 66 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

    பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று (15-ந் தேதி) முதல் 20 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 க.அடி, விநாடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாடிப்பட்டி அருகே பெரியாறு பாசன கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணியினை மாணிக்கம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாதம்பட்டி, அய்யர் கண்மாய்களில் இருந்து மாறுகால் செல்லும் தண்ணீர் வடகரை கண் மாய்க்கு செல்ல பெரியாறு பாசன கால்வாய் கீழ்புறம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் மேல்பகுதியில் உள்ள சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டதால் பெரியாறு பாசன கால்வாயில் சென்று கொண்டிருந்த தண்ணீர் அந்த உடைப்பு வழியாக கரையின் மறு பகுதியில் இருந்த வயல் வெளிகளுக்குள் புகுந்து வெளியேறி கல்ஓடை பாலம் வழியாக வடகரை கண்மாய்க்கு சென்றது.

    தகவல் அறிந்த பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் செல்லையா, மாயகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கால்வாய் அடிப்பகுதியில் பெட் அமைத்து சீர்செய்து அதன்பின் உடைப்பு விழுந்த பகுதியில் 12 மணி நேரத்தில் சிலாப்புகள் அமைத்து சரிசெய்தனர்.

    இந்த பணியினை மாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் கூறும் போது, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பாடத வகையில் கால்வாய் உடைப்பு உடனே சீரமைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு, பணிக்காக அடைக்கப்பட்ட தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டது.

    மேலும் இந்த கால்வாயில் இருபுறங்களிலும் சமூக காடுகள் திட்டத்தில் வளர்க்கப்பட்டுள்ள மூங்கில் மரங்களை வனத்துறை மூலம் அகற்றிடவும், அதன் பின் அந்த பகுதியில் சேத மடைந்துள்ள சிலாப்புகள் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×