என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அழகப்பா கல்வி குழும முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது..
    • முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது.

    காரைக்குடி

    அழகப்பா கல்வி அறக்கட்டளை மற்றும் உலகளாவிய அழகப்பா முன்னாள் மாணவர் கூட்டமைப்பு இணைந்து 75-வது வருட கொண்டாட்டத்தின் நிகழ்வாக அழகப்பா முன்னாள் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை பாவ்நகர் விளையாட்டு அரங்கில் நடத்தியது.

    அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன் வழிகாட்டுதலின்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போட்டியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    36 அணிகள் கலந்து கொண்டன. இதன் பரிசளிப்பு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தலைமை தாங்கினார்.காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது. 2-ம் பரிசு ரூ. 5ஆயிரம் மற்றும் கேடயத்தை அழகப்பா கலை கல்லூரி அணியும், 3-ம் பரிசு ரூ. 2,500 மற்றும் கேடயத்தை பாண்டியன் மெமோரியல் அணியும் வென்றன.

    சிறந்த பேட்ஸ்மேனாக கானாடுகாத்தான் சேவாக் அணியின் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக பாண்டியன் மெமோரியல் அணியின் தினேஷ், தொடர் நாயகனாக அழகப்பா கலை கல்லூரி அணியின் பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள் செய்திருந்தனர். கல்வி குழும மேலாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.

    • கிராண்ட் மாஸ்டரான பிரனேசுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 17). இவர் புதுவயல் வித்யாகிரி மெட்ரிகுலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் சுவீடனில் நடந்த உலக செஸ் போட்டியில் பங்கேற்று 9 க்கு 8 புள்ளி பெற்று இந்தியாவின் 79 மற்றும் தமிழகத்தின் 28-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.

    இந்த நிலையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று முதல் முறையாக காரைக்குடிக்கு வந்த மாணவன் பிரனேசுக்கு காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் வித்யாகிரி பள்ளி தலைவர் நருவிழி கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    சக மாணவர்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடந்தது.
    • வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று 100 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 628 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து, பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டந்தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறிவுரை பெறப்பட்டுள்ளது.

    அதன்படி 2-வது கண்காட்சி இன்றையதினம் தொடங்கப்பட்டு, மாநில விரிவாக்க திட்ட ங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மரபியல் பண்முகத்தன்மை கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்ப ரியமிக்க உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படுத்து தல், விவசாய விஞ்ஞா னிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞா னிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல நிகழ்வுகள் நடைபெறு கிறது.

    விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உரிய ரகங்களை காட்சிப்பொருளாக வழங்கி, கண்காட்சியில் பங்கு கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்கி தங்கள் வாழவாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி, வேளாண் இணை இயக்குநர் தனபாலன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை மாறன். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரசுவதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மதிவாணன், ஆரோக்கிய சாந்தாமேரி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்தது.

    மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பயிற்சி மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 13-ந் தேதி வரை நீடிக்கப்பட்டு 2-ம் கட்டமாக நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

    மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான கம்மியர் மோட்டர் வாகனம், நில அளவையாளர், மின்சாரப் பணியாளர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சேரலாம்.

    மாணவர்கள் 13-ந்தேதி வரை மானாமதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் வளாகம், பாப்பாமடையில் நேரில் வருகை தந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வரும்போது தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.

    பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்ததும் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    மேலும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 9865554672 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது.
    • வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆறு பூர்வீக பாசனபகுதிஆகும். பல ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்று தண்ணீரைகொண்டு முப்போக விவசாயம் செய்துஉள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் பல ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கடும் வறட்சியும் கண்டு உள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

    மானாமதுரை வைகை ஆற்று பகுதிக்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு. காசியில் கங்கை நதி எப்படி உள்ளதோ அதேபோல் மேற்கில் இருந்து பாய்ந்து வரும் வைகை ஆறு வடக்கு தெற்கு பகுதியாக செல்லும் அமைப்பு மானாமதுரை வைகை ஆற்றுக்கு உள்ளது.

    இதேபோல் பல நூறுஆண்டுகாலமாக மானாமதுரை அருகே உள்ள திருப்புவனம் வைகைஆற்று கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். அங்கு வரும் பக்தர்கள் ஆறு வறண்டு தண்ணீர் இல்லாமல் இருப்பதைகண்டு மணம் வருந்தி செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி கடந்த 2 ஆண்டுகாலமாக வற்றாத ஜீவநதியாக மானாமதுரை வைகை ஆறு பாய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மானாமதுரையை சுற்றி ஏராளமான கண்மாய்கள் உள்ளன. அவகைளும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதைத் தொடர்ந்து விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது. கூடுதல் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமித்துத்து நிலத்தடி நீரை அதிகபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    வைகைஆறுமுழுவதும் நாணல் செடி, சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். ஆற்றில் இருந்து கால்வாய்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள மதகுகளை புதுபிக்க வேண்டும். வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    வற்றாத ஜீவநதியாக செல்லும் கங்கை நதிக்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் வகையில் வேகவதி எனும் வைகை நதிக்கும் ஆரத்தி எடுத்தும், புஷ்கரணி விழா நடத்தியும் வைகை நதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    • தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.3.32 கோடியில் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    • உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தலா ரூ.47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பஞ்சா யத்திலும் சூரிய உலர்த்தி, கடலைமிட்டாய், பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு ஆகிய 6 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி நடைபெற உள்ளது.

    உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் எந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்ப ளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரைக் கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை மாவட்ட த்தில், சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளை வயல் திட்டப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும் "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, நிபந்தனை களுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகு திகளில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை. எனது மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும்.

    பயனாளிகள் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 11, 12-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மதிப்பிற்கான கேட்பு காசோலையை The Executive Engineer TNUu DB PIU - I Sivaganga என்ற பெயரில் எடுத்து பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை புளியால் சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தேவகோட்டை அருகே உள்ள சடையன்காடு, தேவகோட்டை பிரிவு சாலை, உடப்பன் பட்டி, கன்னங்கோட்டை, மாரிச் சான்பட்டி, தளக்காவயல், மாவிடுத்திக்கோட்டை, புளியால் போன்ற இடங்களில் சாலையில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    ஒரே மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த சாலையில் சுங்கவரி வசூல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் பாரதி உலா பேச்சரங்கம் நடந்தது.
    • விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய 9-ம் ஆண்டு பாரதி உலா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். இதில் "பாரதி பேச்சு, பாரதத்தின் மூச்சு" என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் பேச்சரங்கம் நடந்தது.

    திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிச ளித்து சிறப்புரையாற்றி னார். கல்லூரி இயக்குனர் கோபால், உரத்த சிந்தனை சங்க பொதுச்செயலாளர் உதயம்ராம் சிறப்புரை வழங்கினர்.

    விழாவில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன. மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • கலெக்டர் நேரடி ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
    • கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பில்லுர் ஊராட்சி அலுபிள்ளை தாங்கி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம் சம்பா நெல் சாகு படி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாராக உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவில் மழை இல்லை.

    கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை பகுதியில் 2 நாட்களாக பெய்த மழையால் இங்கு பயிரிடப்பட்ட 300ஏக்கர் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரிலும், சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்து உள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ள நிலையில், தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி உள்ளது.

    இது குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம், கடந்த டிசம்பர் 26-ந் தேதி புகார் தெரிவித்தோம். அவர் உடனடியாக நடவடிக்கை கள் எடுக்கவும் உத்தரவு விட்டார்.

    மேலும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அதனை போட்டோ எடுத்து சென்றனர். ஆனால் அதன் பின் அதிகாரிகள் நடவடிக்கை கள் எடுக்கவில்லை.

    எனவே இந்தப்பகுதியில் கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    • இளையத்தங்குடியில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடந்தது.
    • விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழசேவல்பட்டி அருகே உள்ள இளையத்தகுடியில் கைலாசநாதர் நித்திய கல்யாணி சமேத கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா இன்று நடந்தது.

    முன்னதாக கைலாச நாதர் நாதருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து நடராஜர் தேரிலும் சிவகாமி அம்பாள், சுந்தரர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளினர். அதன்பின் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கினர். இளையத் தங்குடியில் உள்ள முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது.

    தேர் திருவிழாவை காண இளையதங்குடி மற்றும் அதனை சுற்றிஉள்ள 28 கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், நகரத்தார்கள், ஊர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி மகிழ்ச்சியோடு தேரை வலம் பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையாத் தங்குடி கைலாசநாதர் கோவில் தேவஸ்தானம் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    கடந்த எட்டாம் நூற்றாண்டில் இருந்து இக்கோவிலில் தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×