search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி
    X

    ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி

    • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு பன்னீர் முழுக்கரும்பு, 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேசன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற கடந்த 3-ந்தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. இன்று காலை ராமநாதபுரம் வசந்த நகர், ஏ.வி.எம். மெட்ரிக்குலேசன் பள்ளி அருகில் உள்ள கே.கே.சாலை ரேசன் கடையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட பொது மேலாளர் சக்தி சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், தாசில்தார் தமீம்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 776 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 403 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அந்தந்த ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக டோக்கன் வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் அறிவிப்பாக தெரிவிக்கப்படும்.

    குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான பச்சரிசி மற்றும் சர்க்கரையை பெற கட்டாயம் துணிப்பை கொண்டு வர வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுச் செல்லலாம்.

    பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×