என் மலர்
சேலம்
- மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
- 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே மல்லூர் நகர், பனமரத்துப் பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி, இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
- ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
- போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ(வயது 33) விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வேலம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில், ராஜூ அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதுடன் ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் காயமடைந்த ராஜூ மயங்கி விழுந்தார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர், தனது உறவினர் மகன் ராமன் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனடியாக ராமன் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவை மீட்டு, காரில் ஏற்றிச்சென்று வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக காரிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் கரியகோவில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராஜூவை துப்பாக்கியில் சுட்ட நபரை வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது.
- சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது.
சேலம்:
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளியையொட்டி கூடுதல் மதுபானங்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதியும், தீபாவளி நாளான 12ம் தேதியும் மனுபானங்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 நாளில் ரூ.467 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. சேலம் மண்டலத்தை பொறுத்தமட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் சுமார் 900 டாஸ்மாக் மது பான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளியையொட்டிய 2 நாட்களிலும் பிராந்தி வகைகள், பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவு வாங்கிச் சென்றனர். இதனால், சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது. 2நாளிலும் சேர்த்து, ரூ.86.40 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
- இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிந்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 415 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 297 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று 59.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 60.70 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
- பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே காலை 6 மணி முதல் 7 மணி வ ரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து சேலம் புறநகர் பகுதிகளில் அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 19 பேர் மீதும், மாநகரில் 2 பேர் மீதும் என மொத்தம் 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
- தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
- அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சுக்ரு (28).
அரிவாள் வெட்டு
இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் நவீன், ரூபன் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் நவீன், ரூபன் ஆகிய இருவரையும் அன்னதா னப்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஷ்ணு (வயது 18). இவர் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.
- தமிழ் என்கிற தமிழரசன் என்பவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசன் தாக்கியதில் விஷ்ணுக்கு காது கிழிந்து ரத்தம் கொட்டியது.
சேலம்:
சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் காசீம். இவரது மகன் விஷ்ணு (வயது 18). இவர் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் என்கிற தமிழரசன் என்பவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசன் தாக்கியதில் விஷ்ணுக்கு காது கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தினர். அதில் தமிழரசன் ரவுடி என்பதும், ஒரு கொலை வழக்கில் ஜெயிலில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான தமிழரசனை போலீசார் தேடி வருகின்றனர்.
- துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாப் பேட்டை காந்தி மைதானம், பொன்னம் மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேட்டுப்பட்டி
இதேபோல் மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்ன கவுண்டபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரியகவுண்டபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கருப்பூர்
கருப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலா புரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிபட்டி செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளம நாயக்கன்பட்டி, ஆனைக் கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமி நாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக் கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்கு சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
- தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார்.
- இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் குகை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தாமரைச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சக்திவேலும், ஆறுமுக சாமியும் மயில் வாகன ஊர்வலம் நடந்தது.
சிறப்பு அபிஷேகம்
நாளை முதல் தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை தினமும் அபிஷேகம், அலங்காரத்தில் ஆறுமுகப் பெருமான் காமதேனு வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 17-ந் தேதி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆறுமுகப்பெருமான் ரிஷப வாகன ஊர்வலம் நடக்கிறது.
தொடர்ந்து பகல் 1 மணியளவில் நவவீரர்கள் தேர்ந்தெடுத்தல் சூரன்படைக்கு வீரர்கள் சேர்த்தல் நடக்கிறது. பின்னர் 18-ந் தேதி காலை 6 மணியளவில் மகாகந்த சஷ்டி பாராயணம் 36 முறை நடைபெற்று அன்னதானம் நடைபெறும். காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சூரசம்காரம்
மதியம் 3 மணிக்கு ஆறுமுகப்பெருமானுக்கு அம்பிகை சக்தி வேல் அருளல் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணியளவில் சூரசம்காரம் நடக்கிறது.பின்னர் மாலை 6மணியளவில் சேவல் ெகாடி, மயில் வாகனத்துடன் ஆறுமுகப் பெருமான் காட்சி அளித்தல், புஷ்ப மாரி பொழிதல், தீபாராதனை நடக்கிறது.
இரவு 7 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வெள்ளை யானையில் ஆறுமுக சாமி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.
திருக்கல்யாணம்
19-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் உலா நடக்கிறது. இரவில் வான வேடிக்கை, மேள வாத்தியம் நடக்கிறது.
தொடர்ந்து 20-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் மதியம் 12 மணிக்கு த்வஜ அவரோஹணம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது.
- தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






