என் மலர்
நீங்கள் தேடியது "சுப்ரமணியசாமி கோவில்"
- செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சக்திவேலும், ஆறுமுக சாமியும் மயில் வாகன ஊர்வலம் நடந்தது.
சிறப்பு அபிஷேகம்
நாளை முதல் தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை தினமும் அபிஷேகம், அலங்காரத்தில் ஆறுமுகப் பெருமான் காமதேனு வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 17-ந் தேதி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆறுமுகப்பெருமான் ரிஷப வாகன ஊர்வலம் நடக்கிறது.
தொடர்ந்து பகல் 1 மணியளவில் நவவீரர்கள் தேர்ந்தெடுத்தல் சூரன்படைக்கு வீரர்கள் சேர்த்தல் நடக்கிறது. பின்னர் 18-ந் தேதி காலை 6 மணியளவில் மகாகந்த சஷ்டி பாராயணம் 36 முறை நடைபெற்று அன்னதானம் நடைபெறும். காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சூரசம்காரம்
மதியம் 3 மணிக்கு ஆறுமுகப்பெருமானுக்கு அம்பிகை சக்தி வேல் அருளல் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணியளவில் சூரசம்காரம் நடக்கிறது.பின்னர் மாலை 6மணியளவில் சேவல் ெகாடி, மயில் வாகனத்துடன் ஆறுமுகப் பெருமான் காட்சி அளித்தல், புஷ்ப மாரி பொழிதல், தீபாராதனை நடக்கிறது.
இரவு 7 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வெள்ளை யானையில் ஆறுமுக சாமி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.
திருக்கல்யாணம்
19-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் உலா நடக்கிறது. இரவில் வான வேடிக்கை, மேள வாத்தியம் நடக்கிறது.
தொடர்ந்து 20-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் மதியம் 12 மணிக்கு த்வஜ அவரோஹணம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது.






