search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேருக்கு"

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

     சேலம்:

    சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சுக்ரு (28).

    அரிவாள் வெட்டு

    இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் நவீன், ரூபன் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விசாரணை

    இது குறித்த புகாரின்பேரில் நவீன், ரூபன் ஆகிய இருவரையும் அன்னதா னப்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் முற்றிலும் குறைந்திருந்தது.

    இந்தநிலையில் மீண்டும் தற்போது கொரோன ா பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பொறுவோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா தொற் று மேலும் அதிகரிக்க வாயப்பு உள்ளதால் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முக கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×