என் மலர்
நீங்கள் தேடியது "2 பேருக்கு"
- ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 6 பேர் கொரோனா பாதி ப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது. கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்ட த்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 933 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 6 பேர் கொரோனா பாதி ப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
- அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சுக்ரு (28).
அரிவாள் வெட்டு
இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் நவீன், ரூபன் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் நவீன், ரூபன் ஆகிய இருவரையும் அன்னதா னப்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் முற்றிலும் குறைந்திருந்தது.
இந்தநிலையில் மீண்டும் தற்போது கொரோன ா பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பொறுவோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா தொற் று மேலும் அதிகரிக்க வாயப்பு உள்ளதால் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முக கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- வனச்சரகர் தினேஷ் தலைமையில் வன பகுதியில் சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
- வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 2பேருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திக்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கோட்டமாளம் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் (55) என்பவரை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதாக கூறி அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வனச்சரக அலுவகத்திக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து வனச்சரகர் தினேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்து றையினர் ஆய்வு மேற்கொ ண்டனர். ஆய்வில் மாடு மேய்த்த திம்மையன் என்பவரை கரடி தாக்கவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து திம்மையன், நாராயணன் ஆகிய 2 பேரும் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






