என் மலர்tooltip icon

    சேலம்

    • அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது.
    • 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    சேலம்:

    அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தை பயன்படுத்தி வருகிற ஜூன் 14-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க லாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து ெகாள்ளலாம்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    • கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது.
    • அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேருவதற்கான விண்ணப்பபதிவு நிறைவு பெற்ற நிலையில், சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் அதற்கு விண்ணப்ப பதிவு மேற்கொண்டு இருந்தனர்.

    இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில், 25 ஆயிரத்து 253 மாணவிகள் உள்பட 40 ஆயிரத்து 287 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    இந்த 40 ஆயிரத்து 287 பேரில், 10 ஆயிரத்து 918 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன் பெற இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள்.

    2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது

    முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று தொடங்கிய 2-ம் கட்ட கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்க ளால், அவர்களது கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவு களை மாணவ- மாணவி கள் தேர்வு செய்தனர்.

    வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை இந்த கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இந்த 2 கட்டங்களாக நடத்தப்படும் கலந்தாய்வில் சேர்க்கை பெறும் மாணவ-மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார்.
    • புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    மேட்டூர்:

    தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவலர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பாளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாகராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.

    • ஜி.எஸ்.டி.-ல் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரெயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, சேதுசமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம், சென்னை துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னை அருகில் கடற்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.

    இதுபோல் பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்புகள் கொண்டு வந்து இருக்கிறீர்கள்? என்பது தான் என்னுடைய கேள்வி. ஆகவே எந்த திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டு இருப்பதை பற்றியும் நான் கேட்கவில்லை.

    இன்றைக்கு ஜி.எஸ்.டி.-ல் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த ஜி.எஸ்.டி. நிதியில் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக கொடுத்து இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை. ரொம்ப குறைவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அதிகமாக கொடுக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்து கேட்டேன்.

    அதுபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1200 கோடி மதிப்பில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி இதை பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார்.

    அதன் பிறகு அமித் ஷா பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது என சொன்னார்கள் தவிர இதுவரைக்கும் எந்த பணியும் நடக்கவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. அதை எல்லாம் மூடி மறைத்து பேசிவிட்டு அமித் ஷா சென்றுள்ளாரே தவிர நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் தரவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அன்றைக்கு தேவையேபடவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிகளவில் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. அவர்கள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆகவே இது பற்றி கேள்விகள் கேட்பது பொறுப்புள்ள மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சரின் சாதனை திட்டங்கள் எனது வீட்டின் சுவற்றிலும் கட்சியினரால் எழுதப்பட்டுள்ளது.
    • அனைத்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    சேலம்:

    சேலம் ஒன்றியம் அய்யம்பெருமாம்பட்டி பழையூர் பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 65).

    இவர் நேற்று காலை முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்வில், சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கருப்பூர் அரசு விழாவிற்கு சென்ற முதலமைச்சர் காரை நிறுத்தி, கண்ணம்மா வைத்திருந்த மனுவை வாங்கினார்.

    அந்த மனுவில், 45 ஆண்டு காலமாக நான் தி.மு.க.வில் இருக்கிறேன். மேலும் தங்களை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் தங்களை சந்திப்பதுடன் அருகில் நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்பது எனது 45 ஆண்டு கால கனவாக உள்ளது என்று கூறியிருந்தார்.

    அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்பூரில் விழா முடிந்து, மீண்டும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு திரும்பியதும், மனு அளித்த கண்ணம்மாவை அழைத்து வரும்படி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.விடம் கூறினார்.

    உடனே, சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், கண்ணமாளை, முதலமைச்சரிடம் அழைத்து சென்றார். பின்னர் முதலமைச்சர் அருகில் நின்று கண்ணம்மாள் போட்டோ எடுத்துக் கொண்டார்.

    இதில் மகிழ்ச்சி அடைந்த கண்ணம்மாள் கூறியதாவது, கடந்த 45 ஆண்டு காலமாக தி.மு.க.வில் தொண்டனாக உள்ளேன். முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று மனு கொடுத்த 6 மணி நேரத்தில் எனக்கு முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது பெருமகிழ்ச்சியை கொடுத்ததுடன் திக்கு முக்காடிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இருந்தாலும், முதலமைச்சரை சந்திக்க போகிறோமே என்று பதட்டமாக இருந்தது. மனதை தேற்றிக்கொண்ட நான், முதலமைச்சரை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

    மேலும் முதலமைச்சரின் சாதனை திட்டங்கள் எனது வீட்டின் சுவற்றிலும் கட்சியினரால் எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது சாதனைகளை நானும் மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறேன்.

    என்றைக்கும் தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன். அனைத்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். எனது குடும்பத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையினை திறந்து வைத்தார்.
    • மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாகவும், சமத்துவபுரத்தைச் சீரமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக சேலம் வந்தார். நேற்று அவர் சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையினை திறந்து வைத்தார். தொடர்ந்து சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மாலையில் அவர் மேட்டூருக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் 1998-ம் ஆண்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    இந்த சமத்துவபுரத்தில் ரூ.47 லட்சம் செலவில் 94 வீடுகளுக்கு வெள்ளை அடித்தல் மற்றும் சிறு பழுது நீக்கப் பணிகளும், ரூ.44.20 இலட்சம் செலவில் சாலை வசதி, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, சமத்துவபுர வளைவு ஆகிய இதர பொது கட்டமைப் புகளுக்கான பழுது நீக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

    ஆய்வின்போது சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்களிடம் அங்குள்ள சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர்.

    அப்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதுகுறித்து டுவிட்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டேன். 1998-ஆம் ஆண்டு கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள்-சாலைகள் உள்ளிட்டவற்றில் பழுது நீக்கிச் சீரமைக்கும் பணிக்குக் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம். தற்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் பற்றிக் கேட்டறிந்தேன்.

    அப்போது அங்கிருந்த மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாகவும், சமத்துவபுரத்தைச் சீரமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர். அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நாடெங்கும் பரவி, நாடே சமத்துவபுரமாகிட வேண்டும் என்ற கலைஞரின் கனவு என் எண்ணங்களில் ஓடியது. கலைஞர் நூற்றாண்டில் அவரது லட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, இன்னும் அறியாமையில் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமத்துவச் சமுதாயம் அமைத்திட உழைப்போம்."

    இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    • நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது.
    • பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

    மேட்டூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணை மதகுகளை திறந்து வைத்து பூக்கள் தூவி டெல்டா குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேட்டூர் அணை கட்டப்பட்டது பற்றிய அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க அரசு, மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த வருடத்தில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். இதுவரை இல்லாத ஒரு சாதனையாக மிக குறுகிய காலத்தில் 1.5 லட்சம் வேளாண் மின் இணைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இப்படி எண்ணற்ற திட்டங்களை வேளாண் துறை மூலமாக நிறைவேற்றி வருகிறோம். அதுபோல் 3-வது ஆண்டாக மேட்டூர் அணையை குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் நாள் திறந்து வைக்க நான் வந்து இருக்கிறேன். குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது. அது கடைமடை வரை காவிரி நீர் சென்றடைய வேண்டும். அதற்கும் நாம் திட்டமிட்டோம். அதற்காக, கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.62 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    காவிரி நதிநீரை பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு ரூ.61 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை நெல்சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

    இதன் காரணமாக காவிரி நதி நீர் கடைமடை வரைக்கும் சென்று கடந்த 2021-ம் ஆண்டு குறுவை பருவத்தில் 4.9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல் கடந்த 2022-ல் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தினால் 19 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது மே.24-ந்தேதி அன்று மேட்டூர் அணையை திறக்க நம்முடைய அரசு ஆணையிட்டது. 19 நாட்களுக்கு முன்னதாகவே அணை திறந்தாலும் அதற்கு முன்கூட்டியே அனைத்து கால்வாய்களும் தூர்வாருவதற்கு நீர்வளத்துறை ரூ.80 கோடி மதிப்பீட்டில் அரசு ஆணையினை உரிய காலத்தில் வெளியிட்டு அந்த பணிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

    அனைத்து தரப்பு உழவர்களும் அப்போது மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்கான பாராட்டும் தெரிவித்தார்கள்.

    கடந்த ஆண்டும் காவிரி நதி நீரை பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தில் ரூ.61 கோடியே 12 லட்சம் செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை பருவத்திற்கு தேவைப்படும் குறைந்த வயதுடைய நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர் கடன் போன்ற இழப்பீடுகளும் டெல்டா மாவட்டத்தினுடைய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டன. இதன் விளைவாக கடந்த ஆண்டு குறுவை சாகுபடி கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சாதனையாக 5.36 லட்சம் ஏக்கரை கடந்து, 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

    நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது. மேலும் சென்ற ஆண்டில் மேட்டூர் அணை நீரை மிகவும் கவனமாக பயன்படுத்தியதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 103.35 அடியாக உள்ளது. எனவே மேட்டூர் அணையினை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி திறப்பதற்கு நம்முடைய அரசு முடிவு எடுத்தது.

    நீர்வளத்துறை கடந்த 2 ஆண்டுகளில் டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் எல்லாம் மேற்கொண்டது. இதற்காக நடப்பாண்டில் 90 கோடி ரூபாய் அரசு அதற்காக அனுமதி அளித்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்.

    இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது என அமித்ஷா பட்டியல் போட்டு இருக்கிறார். நான் சேலத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் இது பற்றி தெளிவாக பேசி இருக்கிறேன். அதாவது பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது எந்த சிறப்பு திட்டங்களும் இந்த 9 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி இருந்த தி.மு.க. அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்ன? என்ன? தனி சிறப்புகள் எல்லாம் திட்டங்களாக வந்தது என பட்டியல் போட்டு நான் காட்டி இருக்கிறேன். அதை ஒரு வேளை அவர் படிக்கவில்லையா? அல்லது அதை படித்து யாராவது அதைப்பற்றி எடுத்துச் சொல்லவில்லையா? என எனக்கு சந்தேகம்.

    பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷா பேசியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை. அவர் வெளிப்படையாக சொன்னார் என்றால் அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்ல முடியும்.

    இருந்தாலும் தமிழர் பிரதமராக ஆக்க போகிறேன் என சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரதமர் மோடி மேல் என்ன கோபம் என தெரியவில்லை. 2024-ல் பா.ஜ.க.வினுடைய பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தமிழிசை, முருகன் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 727 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16-ந் தேதி கல்லணைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 331 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் 12-ந் தேதியான இன்று தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

    இதற்காக மேட்டூர் அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அணை திறக்கப்பட்டதும் அணையிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரை பூக்கள் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்களும், பொதுமக்களும், அதிகாரிகளும் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் பூக்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    முதலில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதையொட்டி காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கும் பயன் அளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், 7 கதவணை மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது.

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் 4,773.13 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.90 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக 1934-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் மாதம் 12-ந் தேதி இதுவரை 18 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12-ந் தேதிக்கு முன்பாக 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 19-வது முறையாக ஜூன் மாதம் 12-ந் தேதி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 727 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 103.35 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16-ந் தேதி கல்லணைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மேட்டூர் வருகையை ஒட்டி அணையின் வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் குழுவினர் அணையில் முழுமையாக சோதனை நடத்தினர். முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் அணைக்கு நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அணை பகுதி மட்டுமில்லாமல் நகர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டிருந்தது.

    • ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளின் வந்த வண்ணம் உள்ளனர்.
    • படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர்.


     



    ஏற்காடு:

    கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடை யும் நிலையில், ஏற்காட்டில் ஏராள மான சுற்றுலா பயணி

    கள் தங்கள் குடும்பங்களுடன் குவிந்ததால் களைகட்டியது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால், சீதோ ஷண நிலை குளுமையாக மாறியுள்ளது.

    இதை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில், பள்ளி களுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் விடுமுறையின் இறுதி ஞாயிற்று கிழமையான இன்று வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரிபூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், பொட்டானிக்கல் கார்டன், லேடிசீட், போன்ற இவர்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர்.

    மேலும் இங்குள்ள படகு இல்லத்தில், குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



     


    • கியூட் நுழைவுத்தேர்வு 21-ந்தேதி தொடங்கியது.
    • 5 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்தது.

    சேலம்:

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) சார்பில் பொதுபல்கலைக்கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    அதன்படி நடப்பாண் டுக்கான தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21-ந்தேதி தொடங்கியது.

    இந்த தேர்வுக்கு 14.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 5 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்தது.

    இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் பங்கேற்று எழுதினர். சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • இந்த சாக்கடை நீரால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலை ஓரங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து அண்ணா பூங்கா சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில மாதங்களுக்கு பிரதான சாலையான, அண்ணா பூங்கா சாலையின் ஓரத்தில் இருந்த நடைபாதை கடைகளை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர், சாலையின் இருபுறமும் நடைபாதை அமைத்தனர்.

    அப்போது, சாக்கடை, மழை நீர் செல்ல சரியான வழி அமைக்காததால்

    மழை பெய்யும் நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. மேலும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகளும் தண்ணீரில் தத்தளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

    மழை செல்லும் வழியை நடைபாதை அமைக்கும் போது அடைத்து விட்டதால், இங்கு தேங்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

    உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழைநீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • கோவில் திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடத்துவதில், கிராம மக்கள் முன்னோர்களின் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.
    • வாழப்பாடி பகுதியில் கோவில் விழாவிற்கு காளையுடன் சென்று வீடு வீடாக வரி வசூல் செய்த நிகழ்வு நடைபெற்றது.

    வாழப்பாடி:

    கோவில் திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடத்துவதில், கிராம மக்கள் முன்னோர்களின் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் மாரியம்மன், காளியம்மன், சென்றாயப்பெருமாள், செல்லியம்மன் கோவில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டத்திற்கு, கோயில் காளைகள் மற்றும் குதிரைகளை அலங்கரித்து தாரை, தப்பட்டை உறுமி மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று, பொதுமக்களிடம் வரி வசூல் செய்யும் பாரம்பரிய பழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும், தேர்த்திருவிழா நடத்தும் செலவிற்கு பணம் வசூல் செய்வதற்கும் கோவில் காளையை அலங்கரித்து வீடுகள் தோறும் அழைத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி வரி தண்டல் செய்து வருகின்றனர்.

    கோவில் காளையுடன் அண்டை கிராமமான வாழப்பாடிக்கு சென்ற மன்னாயக்கன்பட்டி கோயில் நிர்வாகிகள், வாழப்பாடி ஊர் பெரியதனக்காரர்க ளுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், காளையைத் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமும் வரி வசூல் செய்தனர்.

    தேர்த்திருவிழா செலவுக்கு பணம் கொடுப்பது மட்டுமின்றி, காளைக்கு தீவனம் கொடுத்தும், வரி வசூல் செய்பவர்களுக்கு குளிர்பானங்கள், தேநீர், இனிப்பு, பலகாரங்கள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்பும் உபசரிப்பும் அளித்தனர். 

    ×