search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In colleges"

    • கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது.
    • அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேருவதற்கான விண்ணப்பபதிவு நிறைவு பெற்ற நிலையில், சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் அதற்கு விண்ணப்ப பதிவு மேற்கொண்டு இருந்தனர்.

    இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில், 25 ஆயிரத்து 253 மாணவிகள் உள்பட 40 ஆயிரத்து 287 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    இந்த 40 ஆயிரத்து 287 பேரில், 10 ஆயிரத்து 918 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன் பெற இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள்.

    2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது

    முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று தொடங்கிய 2-ம் கட்ட கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்க ளால், அவர்களது கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவு களை மாணவ- மாணவி கள் தேர்வு செய்தனர்.

    வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை இந்த கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இந்த 2 கட்டங்களாக நடத்தப்படும் கலந்தாய்வில் சேர்க்கை பெறும் மாணவ-மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

    சேலம்:

    தமிழக உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

    இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    ×