search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்
    X

    ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து தேங்கி நிற்கும் காட்சி.

    ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்

    • ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • இந்த சாக்கடை நீரால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலை ஓரங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து அண்ணா பூங்கா சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில மாதங்களுக்கு பிரதான சாலையான, அண்ணா பூங்கா சாலையின் ஓரத்தில் இருந்த நடைபாதை கடைகளை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர், சாலையின் இருபுறமும் நடைபாதை அமைத்தனர்.

    அப்போது, சாக்கடை, மழை நீர் செல்ல சரியான வழி அமைக்காததால்

    மழை பெய்யும் நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. மேலும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகளும் தண்ணீரில் தத்தளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

    மழை செல்லும் வழியை நடைபாதை அமைக்கும் போது அடைத்து விட்டதால், இங்கு தேங்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

    உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழைநீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×