என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    ஆற்காடு:

    ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
    அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நகரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது30) மற்றும் பொன்வேல் (35). இவர்களுக்கு சொந்தமான பசுக்கள் நேற்று அருகில் இருந்த விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

    பலத்த மழை பெய்ததால் பசுக்களை அழைத்து வருவதற்காக பஞ்சாட்சரமும், பொன்வேலும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தக்கோலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் தன் மீதும் தீ வைத்துக்கொண்டார். காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பெருவளையம் தாந்தோனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). தொழிலாளி. நேற்று முன்தினம் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்தவர் தன் மனைவி அலமேலுவின் (45) நடத்தையில் சந்தேகப்பட்டு ஏதோ பேசவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வந்த பெட்ரோலை மனைவி மீதும் தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார்.

    வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டே வெளியே வந்தவரை ஊர் பொதுமக்கள் பார்த்து அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அலமேலுவையும் அவர்கள் மீட்டு இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து அலமேலுவின் மகள் ரூபாஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    ராணிப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன்கள் தங்க செல்வன், சேட்டு (வயது28).

    இவர்கள் சத்திரம்புதூரிலிருந்து சிலோன் காலனிக்கு செல்லும் சாலையோரம் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    தங்க செல்வன், சேட்டு அவர்களது மனைவிகளும் வயலுக்கு சென்று விட்டனர். அங்கிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர்.

    முன்பக்க கதவை திறந்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பார்த்த போது 4 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.17 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் நகை பணத்தை திருடிவிட்டு தடயங்களை மறைக்க பீரோவில் இருந்து பின் வாசல் வரை மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து சேட்டு சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயங்களை சேகரித்தனர்.

    இச்சம்பவம் குறித்து சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானம் ஏரியில் ஆண் பிணம் மிதந்த இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (40) கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது38), இவரது மனைவி கிருஷ்ணவேணி (37) அம்மனூர் பகுதியில் இருவரும் பாஸ்புட் கடை நடத்தி வந்தனர்.

    கடையை விரிவாக்கம் செய்வதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணவேணி வீட்டினுள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணவேணி வராததால் பாபு வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தற்கொலை செய்து கொண்ட மனைவியின் பக்கத்திலேயே பாபுவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அரக்கோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணம் ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 17 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், அதிமுக, அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதியன்று ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய ஒன்றியங்களுக்கும் 9-ம் தேதி அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஆகிய நான்கு ஒன்றியங்களும் என 7 ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். இதில் 13 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர்.

    இதில் அரக்கோணம் ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 17 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், அதிமுக, அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆற்காடு ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் சுயச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர் பதிவுகளில் திமுக 5 இடத்திலும், அதிமுக, பாமக, காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 8 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், அதிமுக 4 இடத்திலும், சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக10 இடங்களிலும், பாமக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். திமிரி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதிவுகளுக்கு திமுக 13 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வாலாஜா ஒன்றியத்தில் 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக 14 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், பாமக, காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஆக மொத்தம் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 80 இடத்திலும் அதிமுக 16 இடங்களிலும் பாமக 17 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும், அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களிலும் சுயட்சை 8 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
    ஆற்காடு ஒன்றிய பகுதிகளில் 21 வயதில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக பெண் கவுன்சிலரை கட்சியினர் பாராட்டினர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த இளவழகன் மகள் தீபிகா (வயது 21) பி.சி.ஏ. படித்துள்ளார்.

    பட்டதாரியான இவர் தி.மு.க.வில் ஆற்காடு ஒன்றிய 2-வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு பதவிக்கு போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டது.

    இதில் இளம் வேட்பாளர் தீபா 2,344 வாக்குபெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக சுயேச்சை வேட்பாளர் லதா 1144 வாக்குகள் பெற்றார். 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தீபிகா வெற்றிபெற்றார். அ.தி.மு.க. பின்னுக்குத்தள்ளப்பட்டது.

    ஒன்றிய பகுதிகளில் 21 வயதில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தீபிகாவை கட்சியினர் பாராட்டினர். 

    திமிரியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி பார்த்திகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 28). இவர் திமிரி பஜாரில் செல்போன் உதிரிப்பாகங்கள் மற்றும் கிப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு இரவு ஜீவா வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் காலை கடையைத் திறக்க வந்தபோது, முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஜீவா திமிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர் அருகே இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். அவரது மனைவி ஈஸ்வரி (வயது 30). இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொண்டபாளையம் போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ‌ஊராட்சி ஒன்றியங்களில்2 கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் ஆற்காடு ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரி, திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் ஓச்சேரி சப்தகிரி பொறியியல் கல்லூரி, நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குகள் எத்திராஜம்மாள் முதலியாண்டாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய 7 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகிறது.

    இம்மையங்களில் சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சோளிங்கர் மையத்தில் வாக்குப் பெட்டிகளை சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு செல்ல தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டு மழை பாதிப்பு இல்லாமல் செல்ல தகரங்கள் அமைத்து தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும் வாக்குச்சீட்டு எண்ணிக்கையின் போது தனித்தனியாக பிரித்து போடுவதற்கு பெட்டிகள் அமைக்கவும், பதாகைகள் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டார். பின்னர் மையம் மற்றும் பாதுகாப்பு அறை வாக்கு எண்ணும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் நெமிலி காவேரிப்பாக்கம் மையங்களில் வாக்குச்சீட்டுகளை எண்ணிக்கையின் போது தனித்தனியாக பிரித்து போடுவதற்கு பெட்டிகள் அமைத்து தயார்படுத்த பட்டுள்ளதை பார்வையிட்டு கேட்டறிந்தார். பெட்டிகளை சரியாக ஒவ்வொரு வார்டு பதவிகளுக்கும் தவறு இல்லாமல் மேஜையில் வைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

    முறையான அறிவிப்புகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக ஒலிபெருக்கிகளை மையங்களில் தேவையான இடங்களில் அமைக்கவும் கேட்டுக்கொண்டார்.

    வாக்கு எண்ணும் பணியில் 2811 பணியாளர்கள் 7 மையங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வாக்கு எண்ணும் பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மேலும் மையம் முழுவதும் 652 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போதிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், தாசில்தார்கள் பழனிராஜன், ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ஓட்டுப்பெட்டிகள் வைத்துள்ள அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
    ×