என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டை தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மை என்பது. ஒட்டு மொத்த தமிழகத்தின் சமூக நீதிக்கும் இது குறித்த உயர்நீதி மன்றத் தீர்ப்பு உலை வைத்திருக்கிறது என்பது தான்.

    வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10.50 சதவீத இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள 7 வினாக்களையும், அவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் விவரித்துள்ள அம்சங்களையும், எந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைத்தாலும், அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது என்பது தான் உண்மை.

    சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான்.

    அதற்காக நாம் இழந்தவை 21 உயிர்கள் உட்பட ஏராளம்; நாம் செய்த தியாகங்கள் ஏராளம், ஏராளம். தென்னிந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 பிரிவுகளாகவும், கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகத்தான் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த அமைப்பும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவைப் போராடிப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் இட ஒதுக்கீட்டை கிடைக்கச் செய்ததும் நாம் தான். வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். தமிழகத்தில் சமூகநீதியின் முன்னோடி நாம் தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

    சமூகநீதியை பாதுகாப்பதற்காக அடுத்தக்கட்ட சட்டம் மற்றும் அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் நமக்கு வந்திருக்கிறது. அதற்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை.

    எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் தான் உள்ளன. கடந்த காலங்களைப் போலவே தமிழகத்தின் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியையும் நாம் தான் நிலைநிறுத்தப் போகிறோம். தமிழ்நாட்டில் நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால் தான் இது சாத்தியமாகும். அதனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்

    நெமிலி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி கிராமம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சத்தியராஜ் (வயது 31). நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி எழிலரசி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சத்தியராஜ் எனது தந்தை இறந்து விட்டார், நானும் போகிறேன் என்று கூறிவிட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை தாளிட்டு கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலரசி கதவை தட்டியும் திறக்காததால் தனது தந்தையை போன் செய்து வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது சத்தியராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் சத்யராஜின் மனைவி எழிலரசி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 327 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2506- ஆக உயர்ந்துள்ளது. 944 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 970- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1258 பேர் உயிரிழந்துள்ளனர். 326 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி என்ற காமேஷ் (வயது 25). இவர் வீட்டிலிருந்து 3 நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் இருந்த புதர் பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு காமேஷ் பிணமாக கிடந்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இவரது தந்தை ரவி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். தாயாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அண்ணனுக்கும் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தில் உள்ள அனைவருமே பாதிப்பில் இருப்பதை எண்ணி கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் காமேஷ் இருந்து வந்ததாகவும் அதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாவில் கூட்டுறவு அங்கன்வாடியில் ரூ.54 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்ளது. இந்த சிறப்பு அங்காடி கட்டுப்பாட்டில் 10 ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன.இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ரூ.54 ஆயிரத்து 690 பணம் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி பூட்டை உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்றது கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கிளை மேலாளர் மோகனவேல் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர் செல்வி தடயங்களை சேகரித்து சென்றனர்.

    சோளிங்கர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த பனவட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 50), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூங்காவனம் மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட், லாலாபேட்டை, அம்மூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை செயற் பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
    அரக்கோணம் அருகே மர சட்டத்தால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரின் மனைவி புஷ்பா‌ இவர்களின் மகன் ரமேஷ் இவருடைய மனைவி ரேவதி.

    ரமேஷுக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 14ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ரமேஷின் தாயார் புஷ்பா மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் கூவம் பகுதியில் வசித்து வரும் ரேவதியின் தந்தை நீலமேகம் அண்ணன் சதீஷ்குமார் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தற்காலத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நாகவேட்டில் வீட்டிலுள்ள ரேவதி பார்ப்பதற்காக வந்தனர்.

    அவர்கள் வந்த நேரத்தில் ரேவதிக்கும் புஷ்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை கண்ட சதீஷ்குமார் எதற்காக எனது தங்கையிடம் தகராறு செய்கிறாய்? என கேட்டு புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அங்கு கிடந்த ஒரு மர சட்டத்தை எடுத்து புஷ்பாவை சரமாரியாக தாக்கினார்.

    அதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புஷ்ப பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக சதீஸ்குமார் நண்பர்கள் பாலாஜி தஷ்ணாமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணம் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் அருண் (32). கட்டிடத் தொழிலாளி.

    இவர், கடந்த 22-ந்தேதி வீட்டுக்கு வராத நிலையில் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் பிணமாக கிடந்தார். அருணுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் மதுபோதையில் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டது.

    இதற்கிடையில், அருண் சில நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார் என்ற குரல் பதிவு வாட்ஸ்அப்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் அருணின் தந்தை கோவிந்தராஜ் புகார் அளித்தார்.

    அதன்பேரில், அருணின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மோசூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

    அப்போது அவர் முன் விரோத பகை காரணமாக மோசூரைச் சேர்ந்த நண்பர் மாயாண்டி (35) மற்றும் அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்த நண்பர் தரணி (35) ஆகியோருடன் சேர்ந்து அருணை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, மாயாண்டி மற்றும் தரணியை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் கடந்த 22-ந்தேதி இரவு ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் இருந்த அருணை கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    நெமிலி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ளறனர்.
    நெமிலி:

    நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் காணாமல் போவதாக நெமிலி போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் தனிப்படை போலீசார் நெமிலி கீழ்வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் வெளிதாங்கிபுரம் மேல் காலனியை சேர்ந்த மாதவன் (வயது 21) என்பதும், அவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை நெமிலியை சேர்ந்த சுந்தரேசன் மற்றும் புதுப்பட்டு அருகே கங்காதரநல்லூரை சேர்ந்த வாசுதேவன் ஆகியோருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது பிரச்சினைக்கு தீர்வு காணவும், காவல் துறைக்கு பொதுமக்கள் யோசனை கூறவும் சிந்திப்போம்- சிறப்போம் என்ற புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிமுகம் செய்து வைத்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், அதற்கு தீர்வு காணும் வகையிலும், சமூக காவல் நடைமுறையை மேம்படுத்தவும் சிந்திப்போம்- சிறப்போம் என்ற புதிய திட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.

    தமிழகத்திலேயே முதன் முதலாக செயல் படுத்தப் பட்டுள்ள இந்த திட்டம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூகத்தில் அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், குற்றங்கள், சூதாட்டம், போதைப் பொருட்கள் விற்பனை, விபத்து, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைத் திருமணம், போக்குவரத்து நெரிசல், சாராயம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாடு, மூத்த குடிமக்கள் நலன், மற்றும் சமூகத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிந்திக்கவும், அதற்கு தீர்வு காண அவர்களை ஊக்குவிக்கவும் சிந்திப்போம்-சிறப்போம் என்ற புதிய செயல்முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள், யோசனைகள் வழங்கவும் அவர்கள் சமூகம் சார்ந்து சிந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதின் மூலம் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதோடு, சமூக சிந்தனையாளர்களை அங்கீகரிக்கவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினை, அதற்குண்டான தீர்வு, அவர்கள் முன்வைக்கும் திட்டம் குறித்த விளக்கத்தினை எழுத்து மூலமாகவோ, தட்டச்சு செய்தோ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், இத்திட்டத்திற்கான பொறுப்பு அலுவலரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் முகாம் உதவியாளருமான ஜீ.வி.சிலம்பரசனிடம் நேரடியாக வழங்கலாம்.

    sprptcamp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் சந்தேகங்களுக்கு 7845457095 என்ற எண்ணில் அழைத்தும் உதவி பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்பட போலீசார் கலந்துகொண்டனர்.
    ஆற்காடு, அரக்கோணத்தில் இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    ஆற்காடு:

    கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி ஆற்காடு பஸ் நிலையத்தில் இந்துமுன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் ஜெகன், மணிகண்டன், பா.ஜ.க. நகர தலைவர் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம் சுவால்பேட்டை சுந்தர விநாயகர் கோவில் அருகே இந்துமுன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன், திலிப் குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் பாபாஸ் பாபு, அரக்கோணம் ஒன்றிய பா.ஜ.க. விவசாய அணி தலைவர் ஷியாம் குமார் ரெட்டி, மாவட்ட பட்டியல் அணி துணை தலைவர் இன்பா, முன்னாள் நகர தலைவர் லியோவேலு, கிருஷ்ணமூர்த்தி, அன்னையர் முன்னணி ரோஜா, ஸ்ரீதேவி தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×