என் மலர்
செய்திகள்

கொலை
அரக்கோணம் அருகே மர சட்டத்தால் அடித்து பெண் கொலை- 3 பேர் கைது
அரக்கோணம் அருகே மர சட்டத்தால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரின் மனைவி புஷ்பா இவர்களின் மகன் ரமேஷ் இவருடைய மனைவி ரேவதி.
ரமேஷுக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 14ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷின் தாயார் புஷ்பா மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் கூவம் பகுதியில் வசித்து வரும் ரேவதியின் தந்தை நீலமேகம் அண்ணன் சதீஷ்குமார் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தற்காலத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நாகவேட்டில் வீட்டிலுள்ள ரேவதி பார்ப்பதற்காக வந்தனர்.
அவர்கள் வந்த நேரத்தில் ரேவதிக்கும் புஷ்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை கண்ட சதீஷ்குமார் எதற்காக எனது தங்கையிடம் தகராறு செய்கிறாய்? என கேட்டு புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அங்கு கிடந்த ஒரு மர சட்டத்தை எடுத்து புஷ்பாவை சரமாரியாக தாக்கினார்.
அதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புஷ்ப பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சதீஸ்குமார் நண்பர்கள் பாலாஜி தஷ்ணாமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரின் மனைவி புஷ்பா இவர்களின் மகன் ரமேஷ் இவருடைய மனைவி ரேவதி.
ரமேஷுக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 14ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷின் தாயார் புஷ்பா மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் கூவம் பகுதியில் வசித்து வரும் ரேவதியின் தந்தை நீலமேகம் அண்ணன் சதீஷ்குமார் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தற்காலத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நாகவேட்டில் வீட்டிலுள்ள ரேவதி பார்ப்பதற்காக வந்தனர்.
அவர்கள் வந்த நேரத்தில் ரேவதிக்கும் புஷ்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை கண்ட சதீஷ்குமார் எதற்காக எனது தங்கையிடம் தகராறு செய்கிறாய்? என கேட்டு புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அங்கு கிடந்த ஒரு மர சட்டத்தை எடுத்து புஷ்பாவை சரமாரியாக தாக்கினார்.
அதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புஷ்ப பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சதீஸ்குமார் நண்பர்கள் பாலாஜி தஷ்ணாமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story






