என் மலர்
செய்திகள்

தற்கொலை
அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி என்ற காமேஷ் (வயது 25). இவர் வீட்டிலிருந்து 3 நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் இருந்த புதர் பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு காமேஷ் பிணமாக கிடந்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இவரது தந்தை ரவி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். தாயாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அண்ணனுக்கும் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தில் உள்ள அனைவருமே பாதிப்பில் இருப்பதை எண்ணி கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் காமேஷ் இருந்து வந்ததாகவும் அதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






