என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரக்கோணம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

    அரக்கோணம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது38), இவரது மனைவி கிருஷ்ணவேணி (37) அம்மனூர் பகுதியில் இருவரும் பாஸ்புட் கடை நடத்தி வந்தனர்.

    கடையை விரிவாக்கம் செய்வதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணவேணி வீட்டினுள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணவேணி வராததால் பாபு வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தற்கொலை செய்து கொண்ட மனைவியின் பக்கத்திலேயே பாபுவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அரக்கோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×