search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல்
    X
    மின்னல்

    அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலி

    அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நகரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது30) மற்றும் பொன்வேல் (35). இவர்களுக்கு சொந்தமான பசுக்கள் நேற்று அருகில் இருந்த விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

    பலத்த மழை பெய்ததால் பசுக்களை அழைத்து வருவதற்காக பஞ்சாட்சரமும், பொன்வேலும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தக்கோலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×