என் மலர்
ராமநாதபுரம்
- ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார்பட்டணத்தில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் ஆலய புனிதப்படுத்துதல் விழா நடக்கிறது.
- விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.மங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் ஆலயம் புனிதப்படுத்துதல் விழா இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
அதன்படி புனித திருக்கொடி மரம், புனிதர்களின் கெபி ஆகிய வையும் புனிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்படுகி றது. 5.30 மணிக்கு புதிய திருக்கொடி மரத்தை சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் சந்தியாகு புனிதப்படுத்தி பிரார்த்தனை செய்கிறார். 6 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை திறந்து வைத்து புனிதப்படுத்தி சிறப்பு திருப்பலி நடத்துகிறார். 8 மணிக்கு நன்றியுரையும், பாராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருப்பீடத்தை ஓரிக்கோட்டை தொழி லதிபர் அமல்ராஜ் திறந்து வைக்கிறார். புனிதர்களின் கெபியை ஆர்.எஸ்.மங்கலம் பங்கு பணியாளர் வட்டார அதிபர் தேவ சகாயம் புனிதப்படுத்துகிறார். விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
- மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- பயனாளிகளுக்கு, கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் உயர்சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை வழங்கிய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனை உள்ளிட்ட மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும், 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான அட்டையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 காப்பீட்டு திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகே சன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மேலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புல்லாணி யூனியன் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அதனை தொடர்ந்து 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
தொடக்கத்தில் ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வரவேற்று கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கூறினார்.
இந்த கூட்டத்திற்கு கீழக்கரை மின்வாரி யத்துறையில் இருந்தும் கல்வித்துறையில் இருந்தும் எந்த ஒரு அதிகாரியும் கலந்து கொள்வதில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
மக்களின் நிறைகுறைகளை கூட்டத்தில் தெரி விப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. மேலும் முறையாக தகவல் கொடுத்தும் ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணிக்கும் கீழக்கரை மின்வாரியத்துறை அதிகாரிகள் மீதும் கல்வித்துறை அதிகா ரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுமாறு அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நோய் பரவுதல் ஏற்படாமல் இருக்கவும், கொசு தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும் ஒன்றிய குழு உறுப்பினர் தெரிவித்தார்.
அதற்கு சுகாதார ஆய்வாளர் பதிலளித்து கடுமையாக பேசினார்.
உடனே துணைத் தலைவர் இடைமறித்து கொசு தொல்லைக்கு மருந்து அடிப்பதும்,நோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததற்கு ஏன் இவ்வளவு கடுமையாக பேசுகிறீர்கள் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
நோய் பரவலை தடுக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்ைக வைத்தனர். கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் முறையாக பதில் சொல்ல வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ராமேசுவரம் தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
- கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து வாரத்தின் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்த பணியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதலே ராமேசுவரம் தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இரவும் இதே நிலை நீடித்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டினர். இன்று காலையும் ராமேசுவரம் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசியது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசியது.
இதையடுத்து இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை.
திடீர் தடை காரணமாக இன்று ராமேசுவரம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
திடீர் தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
- பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது.
ராமேசுவரம்:
இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் அறியப்படுகிறது.
பரிகாரம் செய்வதற்காகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதனால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை எப்போதும் இருக்கும்.
இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதிகளில் நீண்ட வரிசைகளில் நின்று தரிசனம் செய்தனர்.
பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது. மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பேய்க்கரும்பு, அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை, ராமர்பாதம், கோதண்டராமர் கோவில் ஆகிய பகுதிளிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர்ச்சியாக தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
ராமேசுவரத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
- மத்திய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
- இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச்சேர்ந்த பிற்ப டுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாண விகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மேற்படி 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-வது தளம்,சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்:044-29515942, மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail,com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023 க்குள் மற்றும் புதியது விண் ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம்.
- மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம்.
ராமநாதபுரம்
வறட்சி, வெள்ளம், தொடர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு ஏற்படுவதை விவசாயிகளுக்கு ஈடு செய்யும் வகையில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது.
இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கான அறிவிப்பை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டார்.
அதில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பிரிமியமாக ஏக்கருக்கு ரூ.361.50 செலுத்த வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டால் இழப் பீடாக ஏக்கருக்கு ரூ.24,100 வழங்கப்படும். நவம்பவர் 15-ந் தேதி வரை விவ சாயிகள் பதிவு மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நெற்பயிர் போன்று சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கும் நவம்பவர் 15-ந் தேதி வரை இன்சூரன்ஸ் செய்யலாம்.
கம்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கு நவம்பர் 30-ந் தேதி வரையும், நிலக்கடலை, சூரியகாந்திக்கு டிசம்பர் 30-ந் தேதி வரையும், பருத்திக்கு 2024 ஜனவரி 31-ந் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் முன் மொழிவு படிவம், பதிவு படிவம், ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடி அடங்கல், வங்கி சேமிப்பு புத்தகம் ஆகிய வற்றுடன் பதிவு மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வாகனத்தில் 40 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,236 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மினிலாரி, இரண்டு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக தங்கக்கட்டிகள், பீடி இலைகள், மஞ்சள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதும் அதனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
இந்தநிலையில் தமிழக கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, கடற்படையினர் தலைமன்னார், நெடுந்தீவு முதல் புத்தளம் கடற்பகுதி மற்றும் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், புத்தளம் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற வாகனத்தை நிறுத்திய கடற்படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,236 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி கைப்பற்றப்பட்டதோடு இரண்டு பேரை கைது செய்தனர். இந்த பீடி இலைகள் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து படகு மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த இலங்கை படகில் மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மினிலாரி, இரண்டு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக தொடர்ந்து கஞ்சா, பீடி இலைகள் கடத்தப்படுவதாகவும் இதற்கு பதிலாக தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் பெற்று செல்லுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
- மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சி போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டனர்.
- முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் பாராட்டினர்.
கீழக்கரை
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவி லான கலா உற்சவம் கலை நிகழ்ச்சி போட்டிகள் மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி கள் பங்கேற்றன. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அல் ஆஷிப் ரைஹான் (11-ம் வகுப்பு) வாய்பாட்டிசை பாரம்பரிய நாட்டுப்புற பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்று மாநில அளவில் பங்கு பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் பாராட்டினர்.
- தெருவிளக்கு, சாலை-கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாயல்குடி
சாயல்குடி பேரூராட்சி யில் கவுன்சில் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலை வர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பேரூராட்சி கூட்டத்தில் துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், மகளிர் உரிமைத் தொகை வழங்கிய முதல்- அமைச்ச ருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பேரூராட்சி தலைவர் மாரி யப்பன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாயல்குடி பகுதியில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடை களை பிடித்து உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பேரூராட்சி உறுப்பினர் காமராஜ், சாயல்குடி பேரூ ராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் புதிய மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரணி பகுதியில் நடைபாதை அமைக்க விரைந்து பணிகள் மேற்கொ ள்ள வேண்டும் என பேசினார்.
துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வி.வி. ஆர் .நகர் பேருந்து நிறுத்தத்தில் விபத்து ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் மாணிக்கவேல், சீனி ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.
பேரூராட்சி உறுப்பினர் அழகர் வேல் பாண்டியன், 8-வது வார்டில் 6-வது தெருவில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் இந்திராணி, 12-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் கோவிந்தன், சாயல்குடி பேரூராட்சி 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். இதேபோல் பேரூராட்சி உறுப்பினர்கள் மாணிக்க வள்ளி பால் பாண்டியன், ஆபிதா அனிபா அண்ணா, இந்திரா செல்லத்துரை , சண்முகத் தாய் சுப்பிரமணியன், அமுதா, குமரையா உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மலட்டாறு-குண்டாற்றை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பறையன்குளம் கிராமத்தில் உள்ள மலட்டாறு அணை கட்டு கால்வாயிலிருந்து பிரியும் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வாருவது தொடர்பாக தன்னார் வலர்கள், ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் சபை மற்றும் மெகா பவுண்டேசன் சார்பா க முடிவு செய்யப் பட்டது. முன்னதாக விவசாயிகளுக்கு தண்ணீ ரின் தேவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இதற்கு பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆதரவு கிடைத்த பிறகு நீர்நிலைகளை தூர்வார ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாய சபை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சங்கரத்தேவன் கால்வாய்க ளை தூர்வருவது தொடர்பாக உடனடியாக மாவட்ட கலெக்டர் பொது பணி துறைக்கு பரிந்துரை செய்தார். இதேபோல் முதுகுளத்தூர் குண்டாற்ைற தூர்வாருவது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் நீர்நிலைகளை சீரமைக்க மதுரை பொதுப்பணித்துறை அலுவலத்தில் நிர்வாக பொறியாளரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
பலகட்ட போராட் டத்திற்கு பிறகு ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாய சபை, தன்னார்வ லர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்த அதிகாரிகள் தலைமை பொ றியாளரின் அறிவுறுத்த லின்படி நிர்வாகப் பொறி யாளர் கலைச்செல்வி, முதுகுளத்தூர் உட்கோட்ட அலுவலர் ஜெயசுதா, உதவி பொறியாளர் தினேஷ் ஆகியோர் தலைமையில் கொண்ட குழுவினர் பறையன்குளம் கிராமத்தில் உள்ள சங்கரத்தேவன் கால்வாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தலைமை பொறி யாளருக்கு சமர்பிக்கப் பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் விவசாய பணிகளை பல கிராமங்களில் தொடங்கி இருப்பதால் கால்வாய்களை தூர்வார அனுமதி கிடைத்தால் பல்வேறு கிராமங்கள் பயனடையும், பல்லாயிரம் ஏக்கர் விவசாயம் செழிப்பாக இருக்கும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தாமதம் செய்யாமல் உடனே கால்வாயை தூர்வார அனுமதி கிடைத்தால் உடனே தன்னார்வலர் அமைப்பு களுடன் இணைந்து உடனே பணிகளை ஆரம்பித்து விடுவோம் எனவும் ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாய சபையின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் மனோஷ் கூறியுள்ளார்.
- விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் கல்விக்கடன் பெற வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
- கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனை வோர், மாணவர்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். முகாமில் 26 பயனாளி களுக்கு ரூ.5 கோடியை 11 லட்சத்து 28ஆயிரத்து 600 ரூபாய்க்கான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மாணவ-மாணவிகள் கட்டாயம் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் இப்பகுதியில் 12ம் வகுப்பு வரை நன்றாக படிக்கிறார்கள். அதன் பின் பொருளாதார நிலையை மனதில் வைத்து உயர் கல்விக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.பொதுவாக கல்வி ஒன்று தான் நிலையான சொத்து அதை எந்த நிலையிலும் மாணவப் பருவத்தில் தவற விடக்கூடாது.
வங்கிகள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களை 100 சதவீதம் ஏற்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அவர்கள் கல்விக்கடன் பெற்று பயனடைய உரிய உதவிகள் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளை பொருத்தவரை கடன் வாங்கினால் திரும்பி செலுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மனப்பான்மையை கொண்ட வர்கள். அவர்களின் மனநிலையை மேன்மையடைய செய்யும் வகையில் அவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஷர்மிளா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மையப் பொறி யாளர் பிரதீப், தாட்கோ மேலாளர் தியாகராஜன், தமிழ்நாடு தொழில் முத லீட்டாளர் கழக மேலாளர் ராஜா மற்றும் அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட மலர் கலந்து கொண்டனர்.






