என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேருயுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்களால் குப்பையில்லா இந்தியா தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி வள்ளல் சீதக்காதி ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கி சேதுபதி நகர் 5-வது தெரு வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பைகள், மக்காத குப்பை என 50 கிலோ எடையுள்ள குப்பைகளை மாணவர்கள் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர். இந்நிகழ்ச்சியை குற்ற பிரிவு பொருளாதார காவல் ஆய்வாளர் நந்தக்குமார், சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    • தடை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை உள்ளது.

    இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மீன்பிடி அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடலில் சூறைக்காற்று வீசுவதாலும், கடல் சீற்றம் குறையாததாலும் 2-வது நாளாக இன்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

    தடை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    • பாகம்பிரியாள் அம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரப்படுகிறது.
    • தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற் றியூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமையானது மான சிவகங்கை சமஸ்தா னம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வல்மீக நாதர் சமேத ஸ்ரீ பாகம்பி ரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து பக்தர்கள் தினமும் சாமி கும்பிட வருகின்றனர். அதிலும் முன்தினம் கோவி லில் தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள வாசுகி தீர்த்தக்கு ளத்தில் நீராடிச் சென்றால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகி றார்கள்.

    இந்நிலையில் இங்கு உள்ள தீர்த்தக்குளமான வாசுகி தீர்த்த தெப்பக் குளத்தில் தண்ணீர் அசுத்த மாகி அதிலிருந்த மீன்கள் இறந்து தெப்பக்கு ளம் மாசு ஏற்பட்டது. அதனைத்தொ டர்ந்து தேவஸ்தானம் நிர்வாகத்தின் மூலம் கெட் டுப்போன தண்ணீரை முழு மையாக வெளியேற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வரு கிறது.

    இப்பகுதியைச் சேர்ந்த குட்லக் ராஜேந்திரன் யூனி யன் சேர்மனாக இருந்த போது சுமார் 20 ஆண்டுக ளுக்கு முன் தூர்வாரப்பட் டது. அதன்பிறகு தற்போது தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

    • நாளை 429 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் கூறினர்.
    • பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை 2-ந் தேதி காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட உத்தர விடப்பட்டுள்ளது.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நட வடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தி னை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதித்திட அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜனதா எண்ணுகிறது என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    • இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற் றுமை பயண ஓராண்டு நிறைவு விழா மற்றும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற் றது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங் பெர் ணாண்டோர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராம சாமி, மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மலேசியா பாண்டியன், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பி னர்கள் ராஜராம்பாண்டி யன், தெய்வேந்திரன், ரமேஸ்பாபு, கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச் சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ.பா.ரெங்க நாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நகர் தலைவர் ஜோ.ராஜீவ்காந்தி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதா வது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் ராகுல்காந்தி எம்.பி., இந்திய ஒற்றுமை பயணத்தை துவங்கி 4,000 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணம் நாடு முழுவதிலும் பெரும் வர வேற்றை பெற்று மன வலி மையை நிருபித்து காட்டிய வர் ராகுல் காந்தி. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை ஏற்ப டுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இன்று நாட்டில் வேலை இல்லாத நிலை அதி கரித்துள்ளது.

    இளைஞர்கள் 22 சதவீதம் வேலையின்மை, பட்டதாரி கள் மத்தியில் 42 சதவீதம் வேலையின்மை என மொத் தமாக இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது. இதுவே செயல் இழந்த அரசு என்பதற்கு உதாரணம். பா.ஜ.க. ஆட்சி யில் கடந்த பத்து ஆண்டுகள் இந்திய பூமி கலவர பூமியாக மாறிவிட்டது. மணிப்பூர் மாநிலம் கடந்த 150 நாட்க ளாக பற்றி எரிகிறது. 60 ஆயிரம் பேர் உள்நாட்டில் அகதிகளாக இருந்து வரு கின்றனர். 600-க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந்துள் ளனர்.

    பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் எத்தனையே நாடு கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் மாநி லத்திற்கு மட்டும் செல்லாதது அரசியல் ஆதாயத்தை தேடு கிறார் என்பதை காட்டுகிறது.

    நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட் சிக்கு வந்துவிடலாம் என எண்ணுவதை தடுக்க வேண் டும். பா.ஜ.க. கொண்டு வந்துள்ள பெண்க ளுக்கான இட ஒதுக்கீடு சில திருத் தங்கள் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தான் நிறை வேற்றும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • ராமேசுவரத்தில் தடுப்பு வேலியை திறந்துவிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தொடர் விடு முறை காரணமாக 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பக்தர் கள் வருகை தந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி பின் னர் ராமநாதசுவாமி கோவி லுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட ஒரே நேரத்தில் பக்தர்கள் குவிந்த னர்.

    இதனால் வடக்கு ராஜ கோபுரம் பகுதியில் எங்கு பார்த்தலும் பக்தர்களாக காணப்பட்டனர். கோவி லுக்கு உள்ளேயும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இருந் தனர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு வரிசை யாக நீராட அனுமதிக்கப் பட்ட னர்.

    இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் திடீரென தடுப்பு வேலியை திறந்து விட்டதால் பெரும் கூட்டமாக கோவிலுக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப ட்டது. இதனைத் தொட ர்ந்து, அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார். அங்கிருந்த இன்ஸ் பெக்டர் முருகேசன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

    • பனை விதைகள் நடும் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • நிர்வாகிகள், உறுப்பினர்கள்‌ திரளாக கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பை யூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரி யம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாரா யணன் வழிகாட்டுதலின் படி பனை விதை நடும் விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வ நாதன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், பனைமர வாரிய ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கலா கணேசன்,

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் பி.ஜி.ஜெகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முரு கன், சாயல்குடி பேரூர் கழக செயலாளர் ஜெயபால், நகர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் குலாம் மைதீன், ஆப்பனூர் ஆறுமுக வேல், கோவிந்தராஜ், அண்ணாமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள், பனைமர தொழிலா ளர் நலவாரியம் சார்ந்தோர், மற்றும் பொதுமக்கள், தமிழ் நாடு நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டிணத்தில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் ஆலயம் திறக்கப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாட்டை பங்கு பணியாளர்கள், கிராம அருள் பணியாளர்கள், கிராம இறைமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார் பட்டினத்தில் பிரசித்தி பெற்ற புனித சவே ரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிக் கப்பட்டு ஆலயம் புனிதப்ப டுத்துதல் விழா நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

    மாலை 5.30 மணி அள வில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ், சிவகங்கை மதுரை மாவட்ட பொருளாளர் சந்தியாகு, ஆர்.எஸ்.மங்கலம் முன் னாள் வட்டார அதிபர் ஆரோக்கியசாமி அடிக ளால், தற்போதைய வட்டார பங்கு அதிபர் தேவசகாயம் ஆகியோருக்கு சவேரியார் பட்டணத்தில் உள்ள புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கை யுடன் கிராம இறைமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பான வரவேற்பு அளித் தனர்.

    இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் புடைசூழ ஆயர் உட்பட அனைத்து பங்குத் தந்தகளையும் ஊர்வ லமாக புனித சவேரியார் ஆலயம் அருகே உள்ள சவேரியார் புனித திருக் கொடி கம்பம் அமைந்துள்ள இடத்திற்கு அழைத்து வந்தனர். மாலை 6 மணி அளவில் பங்குத் தந்தைகள் சேவியர் சேஷா, பிரசாத் மற்றும் கிராம இறை மக்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் வட் டார அதிபர் ஆரோக்கிய சாமி அடிகளால் புனித சவேரியார் கொடிக்கம்பத் தின் அடியில் உள்ள கல் வெட்டை திறந்து வைத்தார்.

    சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு திருக்கொடி மரம் புனிதப்படுத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் பாளையங்கோட்டை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் புதுப்பிக் கப்பட்ட புனித சவேரியார் ஆலயத்தை திறந்து வைத்து ஆலய புனிதப்படுத்தினார்.

    பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக ஓரிக்கோட்டை சென்னை தொழிலதிபர் அமுல்ராஜ் திருப்பீடத்தை திறந்து வைத் தார். ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் தேவசகா யம் புனிதர்களின் கெவியை புனிதப்படுத்தினார். இரவு 8.30 மணியளவில் விழாவில் கலந்து கொண்ட ஆயர், பங்குதந்தைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனை வருக்கும் நன்றியும் பாராட் டும் தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு அழைப் பாளராக அருட் சகோதரி கள், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், புல்லமடை ஒன்றிய கவுன்சிலர் பிரபு, புல்லமடை ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி இளை யராஜா கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை பங்கு பணியாளர்கள், கிராம அருள் பணியாளர்கள், கிராம இறைமக்கள் சிறப் பாக செய்திருந்தனர்.

    இதில் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெருந்திர ளாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவ ருக்கும் இரவு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத் தின் பல்வேறு பகுதியில் இருந்து அணிவீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • மண்டபம் பேருராட்சி கவுன்சிலர் கூட்டம் நடந்தது.
    • சேதமான சாலைகளை சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருராட்சியில் நேற்று கவுன்சிலர் கூட்டம் நடந்தது. பேருராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணை தலைவர் நம்புராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் இளவரசி வரவேற்றார். வார்டுகளில் முறையாக குடிநீர் சப்ளை செய்தல், சாலை அமைத்தல், பட்டா மாற்றி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் சம்பத், பூவேந்திரன், வாசிம் அக்ரம், சாதிக்பாட்சா, முகமது மீரா சாகிப் ஆகியோர் பேசினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் ராஜா தெரிவித்தார். முடிவில் கிளார்க் முனியசாமி நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் நடந்த நகரசபை கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலருடன், தி.மு.க. வாக்குவாதம் செய்தது.
    • தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர சபை கூட்டம் தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் குமார் பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேச முயன்றார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காதர் பிச்சை, ரமேஷ் கண்ணன், ஸ்டாலின் உள்பட அனைவரும் எழுந்து குமார் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நகராட்சியை கண்டித்து பா.ஜ.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்களை குமார், விமர்சித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு குமார் மறுப்பு தெரிவித்ததால் மற்ற கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் ஆர்.கே.கார்மேகம் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.

    • முதுகுளத்தூர் அருகே வெறிேநாய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் கீரனூர் கால்நடை மருந்தகம் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நல்லூர் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நல்லூர், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநாய் கடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கீரனூர் கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார்பட்டணத்தில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் ஆலய புனிதப்படுத்துதல் விழா நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் ஆலயம் புனிதப்படுத்துதல் விழா இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    அதன்படி புனித திருக்கொடி மரம், புனிதர்களின் கெபி ஆகிய வையும் புனிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்படுகி றது. 5.30 மணிக்கு புதிய திருக்கொடி மரத்தை சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் சந்தியாகு புனிதப்படுத்தி பிரார்த்தனை செய்கிறார். 6 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை திறந்து வைத்து புனிதப்படுத்தி சிறப்பு திருப்பலி நடத்துகிறார். 8 மணிக்கு நன்றியுரையும், பாராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருப்பீடத்தை ஓரிக்கோட்டை தொழி லதிபர் அமல்ராஜ் திறந்து வைக்கிறார். புனிதர்களின் கெபியை ஆர்.எஸ்.மங்கலம் பங்கு பணியாளர் வட்டார அதிபர் தேவ சகாயம் புனிதப்படுத்துகிறார். விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

    ×