என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP councillor"
- ராமநாதபுரத்தில் நடந்த நகரசபை கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலருடன், தி.மு.க. வாக்குவாதம் செய்தது.
- தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர சபை கூட்டம் தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் குமார் பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேச முயன்றார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காதர் பிச்சை, ரமேஷ் கண்ணன், ஸ்டாலின் உள்பட அனைவரும் எழுந்து குமார் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நகராட்சியை கண்டித்து பா.ஜ.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்களை குமார், விமர்சித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு குமார் மறுப்பு தெரிவித்ததால் மற்ற கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் ஆர்.கே.கார்மேகம் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் கேசரி (40) நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கேசரியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கேசரியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேசரி துணை முதல்-மந்திரி கேஷவ் பிரசாத் மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்கோபால் நந்திக்கு நெருங்கிய நண்பர் என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேசரி குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முன் பகையின் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கேசரி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPcouncillor
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்