search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. கவுன்சிலருடன் தி.மு.க. வாக்குவாதம்
    X

    பா.ஜ.க. கவுன்சிலருடன் தி.மு.க. வாக்குவாதம்

    • ராமநாதபுரத்தில் நடந்த நகரசபை கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலருடன், தி.மு.க. வாக்குவாதம் செய்தது.
    • தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர சபை கூட்டம் தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் குமார் பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேச முயன்றார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காதர் பிச்சை, ரமேஷ் கண்ணன், ஸ்டாலின் உள்பட அனைவரும் எழுந்து குமார் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நகராட்சியை கண்டித்து பா.ஜ.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்களை குமார், விமர்சித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு குமார் மறுப்பு தெரிவித்ததால் மற்ற கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் ஆர்.கே.கார்மேகம் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.

    Next Story
    ×