search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bagampriyal amman"

    • பாகம்பிரியாள் அம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரப்படுகிறது.
    • தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற் றியூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமையானது மான சிவகங்கை சமஸ்தா னம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வல்மீக நாதர் சமேத ஸ்ரீ பாகம்பி ரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து பக்தர்கள் தினமும் சாமி கும்பிட வருகின்றனர். அதிலும் முன்தினம் கோவி லில் தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள வாசுகி தீர்த்தக்கு ளத்தில் நீராடிச் சென்றால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகி றார்கள்.

    இந்நிலையில் இங்கு உள்ள தீர்த்தக்குளமான வாசுகி தீர்த்த தெப்பக் குளத்தில் தண்ணீர் அசுத்த மாகி அதிலிருந்த மீன்கள் இறந்து தெப்பக்கு ளம் மாசு ஏற்பட்டது. அதனைத்தொ டர்ந்து தேவஸ்தானம் நிர்வாகத்தின் மூலம் கெட் டுப்போன தண்ணீரை முழு மையாக வெளியேற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வரு கிறது.

    இப்பகுதியைச் சேர்ந்த குட்லக் ராஜேந்திரன் யூனி யன் சேர்மனாக இருந்த போது சுமார் 20 ஆண்டுக ளுக்கு முன் தூர்வாரப்பட் டது. அதன்பிறகு தற்போது தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

    • தூத்துக்குடியில் மிகவும் பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி மகாகணபதி ஹோமத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
    • ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனத்தில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மிகவும் பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி மகாகணபதி ஹோமத்துடன் கொடி ஏற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம் மற்றும் பல்வேறு வாகனத்தில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    ஐப்பசி திருக்கல்யாண உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சனிக்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது,

    நேற்று இரவு அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் ரதவீதிகளில் வலம் வந்து காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் தமிழ் செல்வி மற்றும் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், கோவில் முன்னாள் அறங்காவலர்கள் கோட்டு ராஜா,கந்தசாமி,சோமசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×