search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டபம் பேரூராட்சி கூட்டம்
    X

    மண்டபம் பேரூராட்சி கூட்டம்

    • மண்டபம் பேருராட்சி கவுன்சிலர் கூட்டம் நடந்தது.
    • சேதமான சாலைகளை சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருராட்சியில் நேற்று கவுன்சிலர் கூட்டம் நடந்தது. பேருராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணை தலைவர் நம்புராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் இளவரசி வரவேற்றார். வார்டுகளில் முறையாக குடிநீர் சப்ளை செய்தல், சாலை அமைத்தல், பட்டா மாற்றி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் சம்பத், பூவேந்திரன், வாசிம் அக்ரம், சாதிக்பாட்சா, முகமது மீரா சாகிப் ஆகியோர் பேசினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் ராஜா தெரிவித்தார். முடிவில் கிளார்க் முனியசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×