search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருவிளக்கு, சாலை-கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை
    X

    கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    தெருவிளக்கு, சாலை-கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை

    • தெருவிளக்கு, சாலை-கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சாயல்குடி

    சாயல்குடி பேரூராட்சி யில் கவுன்சில் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலை வர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பேரூராட்சி கூட்டத்தில் துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், மகளிர் உரிமைத் தொகை வழங்கிய முதல்- அமைச்ச ருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பேரூராட்சி தலைவர் மாரி யப்பன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சாயல்குடி பகுதியில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடை களை பிடித்து உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பேரூராட்சி உறுப்பினர் காமராஜ், சாயல்குடி பேரூ ராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் புதிய மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரணி பகுதியில் நடைபாதை அமைக்க விரைந்து பணிகள் மேற்கொ ள்ள வேண்டும் என பேசினார்.

    துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வி.வி. ஆர் .நகர் பேருந்து நிறுத்தத்தில் விபத்து ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் மாணிக்கவேல், சீனி ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.

    பேரூராட்சி உறுப்பினர் அழகர் வேல் பாண்டியன், 8-வது வார்டில் 6-வது தெருவில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் இந்திராணி, 12-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் கோவிந்தன், சாயல்குடி பேரூராட்சி 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். இதேபோல் பேரூராட்சி உறுப்பினர்கள் மாணிக்க வள்ளி பால் பாண்டியன், ஆபிதா அனிபா அண்ணா, இந்திரா செல்லத்துரை , சண்முகத் தாய் சுப்பிரமணியன், அமுதா, குமரையா உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்.

    Next Story
    ×