என் மலர்
ராமநாதபுரம்
- மக்கள் திட்டப்பணிகளை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. துணைத்தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் நகர்மன்றத்தலைவர் செஹனாஸ் ஆபிதா வாழ்த்து தெரிவித்தார். துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கூட்டத்தில் பேசிய தலைவர், கீழக்கரை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவ டைந்துள்ளது. மக்கள் கோரி க்கைகளை நிறைவேற்ற எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், கீழக்கரை பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று ஆதரவு தந்து கீழக்கரை மக்களுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் குறைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்படுவதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கீழக்கரை நகராட்சிக் குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, கீழக்கரை வட்டாட்சியர் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
நகர் பகுதியில் மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து வாசிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் தேவையான பணிகள் குறித்து விளக்கி பேசினர்.
கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள நகர்மன்ற தலைவர் அறிவுரை வழங்கினார்.
கவுன்சிலர் சுகைபு:- கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு தனி நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும். நகராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு அரசு மருத்துவமனையில் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.
கவுன்சிலர் முகம்மது காசிம்:- 14-வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்காத நிலை உள்ளது. உடனடியாக மக்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் வீடு வீடாகச்சென்று வரி வசூல் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
சப்ராஸ் நவாஸ்: ஏர்வாடி முக்கு ரோட்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் முழுமையாக எரியவில்லை. பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
பாதுஷா:- கீழக்கரை நகராட்சியில் நீண்ட காலமாக வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மேற்பார்வை யாளர்கள் சம்பாசிவம், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவ லர்கள் தமிழ்ச் செல்வன், உதயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
- ராமநாதபுரம் மையத்தில் மேஜைப்பந்து பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 'விளையாடு இந்தியா" திட்ட நிதியுதவியில் தொ டக்க நிலை மேஜைப்பந்து பயிற்சிக்கா ன விளையாடு இந்தியா மாவட்ட மையம் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளை யாட்ட ரங்கில் அமைக்கப்பட உள்ளது. இதில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்க ளுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்க தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட மேஜைப்பந்து வீரர்-வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுக ளாகவும், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இது நிரந்தரப்பணி அல்ல. தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தர பணியோ கோர இயலாது. கேலோ இந்தியா மாவட்ட மையங்களில் ஆர்வமுள்ள கடந்த சாம்பியன் விளையாட்டு வீரர்களை பயிற்சியாளர்களாக பணிபுரியுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பத்தை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டு 3.3.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.தகுதி வாய்ந்த வி ண்ணப்பதா ரர்களுக்கு நேர்முகத் தேர்வு ராமநா தபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் கல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.
இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவு தேர்பவனி ஆகியவை நடக்கிறது.
4-ந்தேதி காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 19 நாட்டுப் படகுகளில் 1,960 ஆண்களும், 379 பெண்களும், 38 ஆண் குழந்தைகளும், 31 பெண் குழந்தைகளும் கச்சத்தீவு செல்கின்றனர்.
மொத்தம் 2 ஆயிரத்து 408 பேர் பதிவு செய்துள்ளனர். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் அனைத்தும் நாளை மறுநாள் (3-ந்தேதி) காலை 8 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படுகின்றன. திருவிழாவுக்கு செல்ல ஏற்கனவே பதிவு செய்தவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி வைக்கிறார்கள்.
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படகுகள் பழுதின்றி உள்ளதா? சட்டவிரோத பொருட்கள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். அதிகாரிகளின் இந்த ஆய்வு மற்றும் சோதனை நாளையும் தொடர்ந்து நடக்கிறது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 4-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதேபோல் வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கீழக்கரையில் ரத்ததான முகாம் நடந்தது.
- கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்தம் பெற்றுக் கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் ரத்தத்தை கொடையாக வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினர்.
கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ், ரோட்டரி சங்கத் தலைவர் கபீர், சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனர் சாலிக் ஹுசைன், ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் சுந்தரம், ரத்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜாவுல்ஹக், அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு கவுரவ ஆலோசகர் சேக் அப்துல் காதர், செயலர் தாஜுல் அமீன், தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் இப்த்திகர், கவுன்சிலர்கள் நசூருதீன், ஷேக் உசேன், மீரான் அலி, சமூக ஆர்வலர் அஜிகர், என்.டி.எப். மாநில நிர்வாகி முகமது பருஸ், மாவட்ட தலைவர் அப்துல் நசீர், வி.சி.க.தொகுதி செயலாளர் அற்புதகுமார், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அபுதாஹிர், மக்கள் டீம் காதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம், கீழக்கரையில் திடீரென மழை பெய்தது.
- வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பகுதியில் அனைவரும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை சில நாட்கள் மட்டும் லேசாக பெய்த நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது.
வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் மட்டும் நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் நன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து இடைவிடாமல் 2மணி நேரம் மழை பெய்ய தொடங்கியது. சில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையாகவும், பல பகுதிகளில் இடை விடாமலும் பெய்தது.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மழையின்றி பனியின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீராதாரத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
காலம் தாழ்ந்து பெய்த மழையால் நெல் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ள பகுதிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் மிளகாய், மல்லி போன்றவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் குளிர்ந்த நிலை நிலவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.
- புதிய பஸ்நிலையம் கட்ட முதல் தவணையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி ஆகும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சில் மாதாந்திர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் அண்ணா சிலை அருகே கருணாநிதி நினைவு கொடிக்கம்பம் அமைக்க தலைவர் கொண்டு வந்த தீர்மானத் திற்கு பா.ஜ.க. கவுன்சிலர் குமார் எதிர்ப்பு தெரி வித்தார். நகர் மன்ற தலை வரின் விளக்கத்திற்கு பின் மற்ற கவுன்சிலர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் குமார்: ராம நாதபுரம் நகரில் பாதாள சாக்கடை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க பல கோடி ரூபாயில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இதனை கண்காணிக்க தனியாக பொறியாளர், அலுவலர்கள் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன்: தற்போது தான் ராமநாதபுரம் சிறப்பு நகராட்சிக்குரிய அரசு உத்தரவு வந்துள்ளது இதன்படி புதிதாக அலுவ லர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்ட பராமரிப்பிற்கு தனியாக பொறியாளர் நியமிக்க வேண்டும்.
ராஜாராம் பாண்டியன் (காங்) : முகவை ஊரணியில் வேலை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். நகராட்சி நிர்வாகம் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.
கமிஷனர்: பாதாள சாக்கடை குழாயை மாற்றி புதிய குழாய் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போது முகவை ஊரணியில் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் மணிகண்டன் (காங்) : காவிரி குடிநீர் முழுமையாக வராததால் எனது வார்டில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அல்லி கண்மாய் சுடுகாட்டில் போதுமான வசதிகள் இல்லை. ஓய்வு எடுக்க இடம் இல்லாததால் தகனம் செய்ய வரும் மக்கள் அவதிப்படு கின்றனர்.
தலைவர்: அல்லி கண்மாய் சுடுகாட்டில் ஓய்ெவடுக்கும் இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குடிநீரை பொறுத்தவரை ராமநாதபுரத்திற்கு 33 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் 25 லட்சம் லிட்டர் தான் வருகிறது. அதனை வைத்து சப்ளை செய்து வருகிறோம். விரைவில் 55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் ராமநாதபுரத்தில் புதிய பஸ்நிலையம் கட்ட ரூ.20 கோடியில் பணிகளை தொடங்க அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி யாக இருந்தாலும் முதல் கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு சந்தை கடை பகுதியையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
- இதன் மூலம் பணத்தை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திரிகா புட் கிளை நிறுவனமாக செயல்பட்ட டி.எப்.எல்., மியூச்சுவல் (புட் பிளஸ்) நிறுவனத்தை சென்னையை சேர்ந்த ராமன், இந்திரா, புவனா நடத்தினர். கலப்படமற்ற உணவு பொருள் தயாரிப்புடன் சிறுசேமிப்பு திட்டத்தையும் தொடங்கினர்.
பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தனர். முதிர்வு காலத்திற்கு பிறகும் தொகை வழங்காமல் நிர்வாகத்தினர் அலைக்கழித்தனர். இதையடுத்து பரமக்குடியை சேர்ந்த நாகலட்சுமியின் புகாரின்பேரில் 2018ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 2022 நவம்பர் 24-ந்தேதி முதல் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தில் இதுவரை 496 பேர் ரூ.1.22 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
மேலும் வேறு எவரேனும் முதலீடு செய்து பாதிக்கப்பட்டிருந்தால் ராமநாதபுரம் நேருநகர் 4-வது தெருவில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் ஆஜராகி புகார் செய்யலாம். இதன் மூலம் பணத்தை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக வீரர்களுக்கான தேர்வு போட்டி ராமநாதபுரத்தில் தொடங்கியது.
- 25 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழக அணியில் விளையாட உள்ளனர் என்றார்.
ராமநாதபுரம்
தென் மாநில ஆக்கி போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு போட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலு மாணிக்கம் செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் தொடங்கியது. இதுகுறித்து ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநிலங்களுக்கு இடையேயான 18 வயது பிரிவில் முதலாவது ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 19-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமானை சேர்ந்த 240 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர். இவர்களில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழக அணியில் விளையாட உள்ளனர் என்றார். ஆக்கி சங்க தலைவர் மதுரம் அரவிந்தராஜ், முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாநில தடகள சங்க இணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- மதரசா நிர்வாகி முகம்மது சுஹைல் நன்றி கூறினார்.
கீழக்கரை
கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 12-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடற்கரை பள்ளி வளாகத்தில் தாளாளர் அஹமது சுஹைல் தலைமையில் நடந்தது.
சிறப்பு பேச்சாளராக வாவ் அகாடெமி நிறுவனர் உஸ்தாத் அலி பேசினார். இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான சாலிஹ் ஹுசைன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சம்சுல் சுல்தான் கபீர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து இணையதள முகவரியை தொடங்கி வைத்தார்.
கீழக்கரை அல் பைய்யினா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், சின்னகடை தெரு அல் மதரஸத்துல் அஸ்ஹரியாவில் மாணவர்களுக்கான சிறப்பு தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. யூடியூப் மூலம் நடந்த பொதுமக்களுக்கான கேள்வி பதில் போட்டிக்கான குலுக்களும் நடைபெற்று பரிசு வழங்கினர்.
இதில் மதரஸாவின் முதல்வர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி, கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கின், அல் பைய்யினா கல்வி குழும தாளாளர் ஜாபிர் சுலைமான், நிர்வாகிகள் அஜ்மல் கான், கல்யாண தம்பி, பாசீல் அக்ரம் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை மதரசா நிர்வாகிகள் சைபுல்லாஹ், அசிம் ரஹ்மான், சுகைல், காதர், பர்ஹான், ஸப்வான், அய்மன், ரித்வான் ஆகியோர் செய்திருந்தனர். மதரசா நிர்வாகி முகம்மது சுஹைல் நன்றி கூறினார்.
- மக்கள் குறைதீர்க்கும் நாளில் 258 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு அளிக்கப்பட்டது.
- ரூ.6,200 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மாணவிகளுக்கு வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 258 மனுக்களை பெற்று மனு தாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
இந்த கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் வசித்து, மரணமடைந்த 9 இலங்கைத்தமிழரின் வாரிசுதாரர்களிடம் ஈமச்சடங்கிற்கான உதவித் தொகையாக தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரத்துக்கான காசோலை களையும், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், குருவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிற மாணவிகள் பாக்யஸ்ரீ, காவியா ஆகியோருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி ஆகிய பணிகளுக்கான கனவிற்கு உரம் ஊட்டும் விதத்தில் படிப்பதற்கு ஏதுவாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் ரூ.6,200 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராணய சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் குருசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சாயல்குடி அருகே மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.
- விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் உள்ள வி.வி.எஸ்.எம்.நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா முன்னிலை வகித்தனர். தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அங்காள ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் 3 பேருக்கு சிறப்பு பரிசுகளை சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பாலமுருகன், சத்தியதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
- ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
- அரசுப் பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமநாதபுரம்
ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் அரசுப் பொதுத் தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.
தலைமை குருக்கள் மோகன் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இந்த பூஜையில் ராமநாதபுரம், ரகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகள் ஆலயத்தின் தலைமை குருக்கள் மோகன் ஆலோசனையில் வல்லபை அய்யப்பன் கோவில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.






