என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாவை டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.
    • ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்-லெட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் மு.நிவேதிதாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வேல் மகாராஜன்-சுந்தரி ஆகியோரின் மகன் டாக்டர் வே.முருகனுக்கும் மதுரை கருப்பாயூரணி எம்.பி. மகாலில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்

    டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்து பேசும்போது, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பதினெட்டாம்ப டியான் குடும்பத்தினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசிகள். அவர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். இந்த திருமணத்தை நடத்தி வைத்த தில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் என்றார்.

    பின்னர் அவர் அ.ம.மு.க. பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    திருமண விழாவில் முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராமையா தேவர். வக்கீல்புலிகேசி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்டாக்டர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி வெள்ளத்துரை, கமுதி வி.கே.ஜி. முத்துராமலிங்கம், புளியங்குடி முத்துராம லிங்கம், செல்வநாயகபுரம் முருகன், வெங்கலகுறிச்சி சேதுபதி, முதுகுளத்தூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் கடல் தொலைவில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை மக்கள் பங்கு கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழாவை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து 362 பெண்கள், 65 சிறுவர், சிறுமியர் என மொத்தம் 2,193 பேர் 59 விசைப்படகுகள், 11 நாட்டு படகுகளில் கச்சத்தீவுக்கு வந்தனர்.

    நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது இருநாட்டு மக்களும் பங்குபெற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து 14 இடங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் சிலுவையை ஏந்தி ஆராதணை பாடல்களை பாடி வந்தனர். இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றி கொண்டார்கள். இரவு தேவாலயம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2-வது நாளான இன்று காலை யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இருநாட்டு மக்கள் பங்கு பெற்ற திருப்பலியில் தமிழ், சிங்கள மொழியில் ஆராதனை பாடல்கள் பாடப்பட்டது.

    தொடர்ந்து உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. அதன்பின்னர் கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்திருந்தது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதார நிலையம்-வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
    • பனைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பவுசியா பானு மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை பரமக்குடி அலுவலகங்கள் மூலம் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமை தாங்கி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் வளரிளம் பருவத்தின ருக்கான சுகாதார சேவை களை மேம்படுத்தும் வகையில், வளரிளம் பருவத்தினருக்கான மாதிரி சிகிச்சை மையம் மற்றும் மேலாண்மை மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் 13 இடங்களில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு கட்டி டங்களை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அஜித் பிரபு குமார், பரமக்குடி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரதாப் குமார், ராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் தவுபீக் அலி, வேதாளை ஊராட்சி மன்றத்தலைவர் சையது அல்லா பிச்சை, பனைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பவுசியா பானு மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருந்து வரும் மின் கம்பங்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பாவது:-

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மக்கள் அதிகம் நடமாடக்கூடிய முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு இருந்த மின் கம்பத்ைத அகற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும். கீழக்கரை முக்கு ரோட்டில் ஒரு மின்கம்பம் சாய்ந்து கொண்டு இருக்கிறது. அந்த மின்கம்பத்தில் மின்சாரம் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் கீழக்கரையில் தெருக்களில் ஆங்காங்கே மின்சார வயர்கள் பொதுமக்கள் தொடும் அளவிற்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அவைகளை உயரத்தில் கட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனு கொடுக்கும் நிகழ்வில் நகர செயலாளர் காதர், துணைத்தலைவர்கள் சுல்தான், சிக்கந்தர், ரீகான் செயற்குழு உறுப்பினர்கள் ஜலீல், ராஜா, சித்திக், அஸ்ரப் மற்றும் தாஜூல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 4,348 மாற்றுத்திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டையை கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக் டர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4.348 மாற்றுத் திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளது குறைகள் தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்க்கிழமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்சி முகமை முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 10 வரை ராமநா தபுரம் மாவட்டத்தி லுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவல கத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற அட்டையினை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் மிக முக்கியமானது என்றால் தீர்த்த கிணறுகள்தான். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடிய பின்னர்தான் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் 6-வது தீர்த்தமாக உள்ள சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீருக்குள் ராட்சத மோட்டார் வைத்து குழாய் வழியாக கடலில் கலக்கும் வகையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவிலின் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதாலும், சகதிகள் அதிகம் உள்ளதாலும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது என்றார்.

    இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கூறும்போது, பொதுவாக கோவிலில் உள்ள தெப்பக்குளமாக இருந்தாலும் கண்மாய், ஊருணிகளாக இருந்தாலும் மழை சீசன் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் தூர்வாரப்படும். அப்படி தூர்வாரும் பட்சத்தில் மழை சீசனில் பெய்யும் தண்ணீரால் அந்த தெப்பக்குளம், ஊருணி, கண்மாயில் தண்ணீர் வரத்து இன்னும் அதிகமாக இருக்கும்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு பருவமழை சீசனில் பெய்த மழையால் ராமேசுவரம் கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் ஓரளவு தண்ணீருடன் காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணி நடக்கிறது. தூர்வாரும் பணி சிறப்பானதாக இருந்தாலும் அது செய்வதற்கான நேரம் இது கிடையாது.

    ஆகவே சரியான திட்டமிடல் இல்லாமல் இதுபோன்று பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

    • கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.
    • கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.

    ராமேசுவரம்:

    இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.

    இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடக்கும். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி கச்சத்தீவு திருவிழா எளிமையாக நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து மறை மாவட்ட பாதிரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கச்சத்தீவு திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இருநாட்டு மறைமாவட்ட பாதிரியார்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது.

    கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க விரும்புவோர் விபரங்களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சேகரித்தது. அதன்படி கச்சத்தீவு திருவிழாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 408 பேர் செல்ல பதிவு செய்திருந்தனர்.

    கச்சத்தீவு திருவிழா இன்று (3-ந் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி ராமேசுவரத்தில் இருந்து பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் புறப்பட்டு சென்றனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. 60 விசைப்படகுகள், 12 நாட்டு படகுகள் என மொத்தம் 72 படகுகளில் 2408 பேர் இன்று காலை முதல் கச்சத்தீவுக்கு சென்றனர்.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பக்தர்களின் கச்சத்தீவு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

    மது பாட்டில்கள், பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு இந்திய பணம் மற்றும் திண்பண்டங்கள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.

    ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டன. படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு செல்லும் என தெரிவிக்கிறது.

    கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை எமலிபால் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.

    அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் வருகிற 5-ந் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழ் மொழி யின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன் பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணி சென்று, நிறைவாக நகரின் முக்கிய பகுதியான அரண்மனை பகுதியை வந்தடைந்தன.

    அப்போது கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை பாதுகாக்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் வணிகர்கள் தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழ் மொழியில் வைத்திட வேண்டும், என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் விசை உழுவை எந்திரம் வழங்கப்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்களுக்கு பவர் டில்லர் (விசை உழுவை எந்திரம்) மானியத்தில் வழங்கப்பட உள்ளது. பவர் டில்லர் எந்திரம் வழங்க தமிழக அரசால் ரூ.38.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இயந்திரம் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகள், மகளிர் மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயி களுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ.85,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் பொதுஇன விவசாயிகளுக்கு 36 எண்களும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 9 எண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் ரூ.1,19,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

    பெரிய விவசாயிகளை போல சிறு, குறு மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளும், இதர விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், நிலவரைபடம், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் உரிய வருவாய் துறையின் மூலம் பெறப்பட்ட சாதிச்சான்றிதழ் நகல் ஆகிய விபரங்களுடன் ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), ராமநாதபுரம் அலுவலகத்திலும், பரமக்குடி, நயினார்கோயில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பரமக்குடி அலுவலகத்திலும் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-ம் தளத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 35-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
    • முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 35-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி தலைமை வகித்து கல்லூரி கொடியை ஏற்றினார்.

    ராமநாதபுரம் மாவட்ட கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி தேசியக்கொடியையும், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ரோஷி பெர்னான்டோ, தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவி ஜெய்னம்பு பாத்திமா ஆகியோர் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினர்.

    கல்லூரி முதல்வர் சுமையா முன்னிலை வகித்தார். இதில் மாணவிகளின் அணிவகுப்பு நடந்து. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி, ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    முடிவில் மாணவி நூரூர் ருஸ்லா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுமையா, சீதக்காதி அறக்கட்டளையின் துணை பொது மேலாளர் சேக் தாவூத் கான் ஆலோசனையின் பேரில் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
    • அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா, கீழக்கரை நகர்மன்ற துணை தலைவரும், நகர் இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான் தலைமையில் நடந்தது.

    அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 500 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர். கீழக்கரை நகர் தி.மு.க. நிர்வாகிகள் கென்னடி, முனீஸ்வரன், பாண்டியம்மாள், மணிகண்டன், இளைஞர் அணி நிர்வாகிகள் எபன், சுபியான், பயாஸ், நயீம், முகேஷ், காளிதாஸ், சரவணன் நகர் மன்ற உறுப்பினர் ராணி, சூரிய கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவுசானல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • இதில் சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர்.

    கீழக்கரை

    பாளையங்கோட்டை திரு இருதய சபை சகோதரர்களால் நடத்தப்படும் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது விளையாட்டு விழா நடந்தது. உடற்கல்வி இயக்குநர் சுகந்தராஜ் வரவேற்றார். கல்லூரிச் செயலர் மரியசூசை அடைக்கலம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முதல்வர் ஹேமலதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை திரு இருதய சபையின் ஆஞ்சலோ மாநில அதிபர் பாக்கியநாதன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    முத்துப்பேட்டை ஆஞ்சலோ இல்லத் தலைவர் அந்தோணி சகாயராஜ் வாழ்த்துரை வழங்கினார். இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர். மாணவர்களின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகள், மாணவர்களின் மனிதக் கோபுரம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியச் செயலாளர் ஜெனிட்டா நன்றி கூறினார். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் தமிமுல் சுல்த்தானா, கணினி அறிவியல் துறை மாணவி நம்பு கமலி, ஆங்கிலத்துறை மாணவி பிரதிபா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    ×