search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை
    X

    ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை

    • கீழக்கரையில் ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருந்து வரும் மின் கம்பங்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பாவது:-

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மக்கள் அதிகம் நடமாடக்கூடிய முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு இருந்த மின் கம்பத்ைத அகற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும். கீழக்கரை முக்கு ரோட்டில் ஒரு மின்கம்பம் சாய்ந்து கொண்டு இருக்கிறது. அந்த மின்கம்பத்தில் மின்சாரம் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் கீழக்கரையில் தெருக்களில் ஆங்காங்கே மின்சார வயர்கள் பொதுமக்கள் தொடும் அளவிற்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அவைகளை உயரத்தில் கட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனு கொடுக்கும் நிகழ்வில் நகர செயலாளர் காதர், துணைத்தலைவர்கள் சுல்தான், சிக்கந்தர், ரீகான் செயற்குழு உறுப்பினர்கள் ஜலீல், ராஜா, சித்திக், அஸ்ரப் மற்றும் தாஜூல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×