search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ploughing"

    • பருவமழையை எதிர்பார்த்து உழவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    அபிராமம்

    வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவ மழை சரியாக பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலா ளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ராம நாதபுரம் மாவட்டத்திலும் போதிய மழை பெய்யும் என நம்பிக்கை வைத்துள் ளன. இதன் காரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் தற்போது இருந்தே உழவு பணிகளில் ஆர்வமாக உள்ளனர். நிலத்தை சீர் செய்து விதை விதைப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கர்ணன் என்பவர் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை இல்லததால் நெல் பயிர் பொதி பருவத்தில் நெல் விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் போதிய மழை இருக்கும் என்று விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம்.

    அதிலும் குறிப்பாக நெல், மிளகாய் பயிர்களை பயிர்செய்வ தற்காக விவசாய நிலங்களில் உழவு பணியை தொடங்கி உள்ளோம் என்றார்.

    • குருவை சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் ராமன் கோட்டகம் பகுதியில் குருவை சாகுபடி பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது உழவு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி தினக்கூலி விவசாயிகள், பெண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி பேசினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், கோவிலாங்குளம், சம்பகுளம், முதல்நாடு, கே.வேப்பங்குளம், குண்டுகுளம், தரைக்குடி ஆகிய பகுதிகளில் கோடை மழை பொய்த்தால் விவசாயிகள் ஆர்வத்துடன் கோடை உழவு பணி செய்கின்றனர். கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி கூறுகையில், கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வதால் மண் இறுக்கம் தளர்ந்து சரியாக நிலைப்படுத்தப்படும். மழைநீர் மண்ணின் உள்ளே ஊடுருவதற்கு ஏதுவாக இருக்கும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மக்காத சருகுகள் மக்கி மண்ணில் அங்கக சத்து மேம்படும். கீழ் மண் மேலே புரட்டி விடப்படுவதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், கிருமிகள் போன்றவை சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படுவதால் அழிக்கப்படுகின்றன. மேலும் களைச் செடிகள் களையப்படுவதால் வெயிலில் காய்ந்து பயிரிடும் போது களைகள் குறைவாக இருக்கும். பயிர் பூச்சி,நோய், களை மேலாண்மை செலவுகள் குறைக்கப்படும். இதனால் விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.

    • கோடை உழவு செய்து மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்
    • ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சித்திரைப் பட்டத்தில் பெய்த கோடை மழையினை பயன்படுத்திக் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்குச் செல்லும்பொழுது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும்.

    மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப் படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர்சூழ் மண்டலத்திற்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்தை நன்கு உழவு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும், மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும், வயலிலுள்ள கோரை போன்ற களைகள் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

    ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும். இதனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. மேலும் மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுவினை கட்டுப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது. கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழவு செய்து மண் அரிப்பினை தவிர்க்கலாம்.

    இவ்வாறு பல நன்மைகள் ஏற்படுவதால் கோடை உழவு கோடி நன்மை எனக் கூறப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும், பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்திடவும் கோடை உழவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் விசை உழுவை எந்திரம் வழங்கப்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்களுக்கு பவர் டில்லர் (விசை உழுவை எந்திரம்) மானியத்தில் வழங்கப்பட உள்ளது. பவர் டில்லர் எந்திரம் வழங்க தமிழக அரசால் ரூ.38.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இயந்திரம் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகள், மகளிர் மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயி களுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ.85,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் பொதுஇன விவசாயிகளுக்கு 36 எண்களும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 9 எண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் ரூ.1,19,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

    பெரிய விவசாயிகளை போல சிறு, குறு மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளும், இதர விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், நிலவரைபடம், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் உரிய வருவாய் துறையின் மூலம் பெறப்பட்ட சாதிச்சான்றிதழ் நகல் ஆகிய விபரங்களுடன் ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), ராமநாதபுரம் அலுவலகத்திலும், பரமக்குடி, நயினார்கோயில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பரமக்குடி அலுவலகத்திலும் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-ம் தளத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×