என் மலர்
ராமநாதபுரம்
- குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும் வகையில் பணி இருக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
- முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தஹீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக்கல்வி துறை யின் மூலம் 'எண்ணும் எழுத்தும்" திட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
'எண்ணும் எழுத்தும்' என்னும் மாபெரும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப் பட்டு 1-ம் முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு அவர்க ளின் மனநிலைக்கேற்ப நாடக வடிவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் வாயி லாகவும், நடன வடிவிலும், கருத்தரங்கம் மூலமாக என பல்வேறு நிலைகளில் குழந்தைகள் எளிதாக கல்வியை கற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உள்ளது. அதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனம் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய திட்டம் குழந்தைக ளிடமும், பெற்றோர்களி டமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஆரம்ப கல்வி யில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது.
அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடப்பாண்டிற்கு 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டத்தை விரிவுப்ப டுத்தி எளிய முறையில் மாணவ, மாணவிகளின் மனநிலைக்கேற்ப கல்வி கற்பிக்க இத்திட்டம் தொடங்கி உள்ளது.
இதன் நோக்கம் சுற்றுச்சூழலை அறிந்து குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கி எதிர்காலத்தின் நிலையை உணர்ந்து கல்வியை கற்பதற்கு ஏது வாக உங்களுடைய பணி இருந்திட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் இந்த பணியால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும். அதற்கேற்ப உங்கள் பணி அமைந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மீன் விலை உயர்ந்துள்ளது.
- ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிமுறையின்படி மீன்களின் இனப்பெருக்கத் திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப் படும். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் ஏப்ரல் 15-ந்தேதி முதல் விசைப்ப டகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட் டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப் படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளி முனை, காரங்காடு, வட்டா ணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட
20-–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை.
இதனால் மீன் மார்க் கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடற்கரை பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர்.
மேலும் நகரை மீன், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ
ரூ.600-க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும், அசைவ பிரியர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
- மலேரியா கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.
- கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலி நோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.
அதன்படி மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், டாக்டர் செல்வ விநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் இந்திரா ஆகியோரின் உத்தரவுப் படி ஏர்வாடி தர்கா பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தலைமையில் ஏர்வாடி தர்ஹா கமிட்டி தலைவர் முகமது பாக்கீர் சுல்தான் தொடங்கி வைத்தார்.
30 நாட்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர். அவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியா ளர்களும் வீடு வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள னர்.
நேற்று தொடங்கிய இப்பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுனர்கள், கண்ணன், பாலசுப்பிர மணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத் துரை, ராஜசேகரன், சுப்பிர மணியன், இஜாஜ் முகமது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மத்திய அரசின் திட்டங்கள் மக்களை தற்போது நேரடியாக சென்றடைகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்தார்.
- கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பி னரும், நாடா ளுமன்ற பொறுப்பா ளருமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
பிரதமர் மோடி தலைமை யில் பா.ஜ.க. அரசு பொறுப் பேற்று 9 ஆண்டுகள் நிறை வடைகிறது. இந்த 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒருமாத காலம் அனைத்து பா.ஜ.க. பொறுப் பாளர்களும் தீவிர பிரசா ரத்தில் ஈடுபட தேசிய தலைவர் நட்டா உத்தர விட்டுள்ளார்.
அதன்படி அனைத்து பொறுப்பாளர்களை கொண்ட குழுக்கள் அமைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களை நோக்கி பிரசாரம் செய்ய உள்ளோம். இந்த பணியில் 16 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். உலகின் வழி காட்டியாக பிரதமர் மோடி வரவேண்டும் என்று அனைத்து நாடுகளும் அவரை பாராட்டுகின்றன.
கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வில்லை. தற்போது மத்திய அரசின் திட்டம் நேரடியாக மக்களை சென்றடைகிறது. இதனால் உலகில் உயர்ந்த நாடுகள் வரிசையில் முதல் 5 இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சியை நோக்கிய பாதையில் இந்தியாவை பா.ஜ.க. செல்ல வைத்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழகத்தில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மீது தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மத்திய அரசின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.
இவ்வாறு கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாய அணி மாநில செயலாளர் பிரவீன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் ஆத்மா கார்த்திக், மணிமாறன், நாகேந்திரன், கணபதி, ஊடக பிரிவு மாநில செயலாளர் ஜெய குரு, மாவட்ட பார்வை யாளர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஆதி திராவிடர்-பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
- இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட் டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவ-மாணவியர் விடுதிகள் மாணவர் விடுதி 22, மாணவியர் விடுதி 13 என மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ-மாணவிகள் கீழ்கண்ட அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.
விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி நூல்கள் இலவசமாக வழங்கப்படும். விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 4 இணை சீருடைத்துணிகள் தைத்து வழங்கப்படும்.
அரசாணைப்படி 85 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10சதவீதம்), பிற வகுப்பி னர்கள் (5சதவீதம்) என்ற விகிதத்தில் புதிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மாணவர்கள் விடுதியில் சேர அவர்களது பெற்றோர், பாதுகாவலரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தூரம் குறைந்த பட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.
மேற்படி நிபந்தனை மாணவிக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தாது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாண வர்கள் இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளி தலைமை யாசிரியர் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு EMIS எண் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். புதிய மாணவர்கள் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 7-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
விண்ணப்பத்துடன் மாணவ-மாணவிகள் புகைப்படம், சாதிச்சான்று, ஆதார் அடையாள அட்டை, பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் விண்ணப் பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட காப்பாளர், காப்பாளினி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
- சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில், மேலத் தெரு மற்றும் கிழக்குத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் ஒரு வாரமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.
குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி மேற்கண்ட பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய தயாராகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணி மேகலை மற்றும் மண்டல அதிகாரி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட போவதாக கூறி அதிகாரி களுடன் வாக்குவாத்தில் னஈடுபட்டனர்.
ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டும், அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நாளை (3-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு வைத்து கட்சித் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்திடவும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியம், நகர, பேரூர் கழகம், கிளைக் கழகம், வார்டு கழகம் தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகள், மாணவ- மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.
"என்றென்றும் கலைஞர்" என்ற தலைப்பில், கருத்தரங்கம், பொதுக் கூட்டங்களும் வெகு நடத்தப்பட வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக, வார்டு கழக செயலா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வினை தீர்க்கும் வேலவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான வினை தீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 29-ந் தேதி விக்னேசவர பூஜை, தன பூஜை உடன் தொடங்கி கணபதி ஹோமம் வாஸ்து சாந்திகள் நடைபெற்று, நேற்று முன்தினம் அதிகாலை பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை கடம் புறப்பாடாகி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலஸ்தான கும்பாபிஷேகம், மகிஷாபிஷேகம் ஆகியவை நடந்தன.
இதில் பட்டணம்காத்தான் சேதுபதி நகர் பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான புதுப்பட்டிணம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இங்கு புதுப்பட்டிணம், கண்கொள்ளான்பட்டிணம், தோப்பு முள்ளி முனை, காரங்காடு ஆகிய கடலோர கிராமங்களைச் சேர்ந்த வர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ள தால் செவிலியர்கள் அங்கு தங்கி பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி கடலோர மீன வர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மேலும் கட்டிடம் பழுது காரணமாக செவிலியர்கள் இங்கு தங்க முடியாத காரணத்தால் அவசர சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்க ளில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வயதான வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்த துணை சுகாதார நிலையத்திற்கு பதிலாக புதிதாக துணை சுகாதார நிலையம் கட்ட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களில் ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.362 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
15-வது நிதிக்குழு மானிய சுகாதாரப்பணிகள் திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதையும், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
- இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா, புகையிலை பொருட்கள், கடல் அட்டை போன்றவை கடத்தலின்போது அதிக அளவில் சிக்கி உள்ளன. ஆனால் அண்மை காரணமாக தங்க கட்டிகளை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு தங்க கட்டிகளை கடத்தி வருபவர்கள் கடலில் அதிகாரிகள் ரோந்துவரும்போது பார்சலை அவர்களுக்கு தெரியாமல் கடலில் வீசி விடுகிறார்கள். கடத்தல்காரர்கள் வீசும் பார்சலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது.
எனவே தைரியமாக கடலில் அதனை வீசும் கடத்தல்காரர்கள், அதிகாரிகள் சென்ற பின் ஆழ்கடலில் குதித்து ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் எடுத்து செல்கிறார்கள். ஆனால் இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 4 மாதங்களில் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி கடத்தல்காரர்கள் 100 கிலோவுக்கும் மேல் தங்க கட்டிகளை கடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
+2
- ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர்.
- நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக 30 கிலோ மீட்டர்தூரத்தில் இலங்கை நாட்டின் தலைமன்னாரை சென்றடைய முடியும்.
இதன் காரணமாக 2 நாடுகளுக்கும் இடையே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இங்கிருந்து கடல் அட்டை, மஞ்சள் கிழங்கு, வலி நிவாரண மாத்திரைகள், பீடி இலைகள் மற்றும் அந்த நாட்டில் தட்டுப்பாடுடைய பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இலங்கையில் இருந்து கஞ்சா, தங்க கட்டிகள் உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. தற்போது மதுரை, திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களில் சுங்கத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை அதிக அளவில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.
கடத்தல்காரர் ஒருவரின் செல்போன் நம்பரை கண்டறிந்து அதனை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த போன் மூலம் நடந்த உரையாடல்களும் சேகரிக்கப்பட்டது. அப்போது கடந்த 31-ந்தேதி பிளாஸ்டிக் படகு மூலம் 3 பேர் தங்க கட்டிகளை கடல் வழியாக கடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினர். இதைத்தொடர்ந்து இரு துறையினரும் கூட்டாக செயல்பட்டு மண்டபம் அருகே உள்ள கடல் வழித்தடத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது மணாலி தீவு அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த 3 பேர் ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர். இதை கண்ட அதிகாரிகள் மற்றும் கடலோர போலீசார் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததும், அதிகாரிகளை கண்டதும் அந்த பார்சல்களை கடலில் வீசியதும் தெரியவந்தது.
மேலும் 3 பேர் கொடுத்த தகவலின்பேரில் அதே நாள் இரவு மற்றொரு படகில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 21.26 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்தனர்.
இதற்கிடையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். கடந்த 2 நாட்களாக மணாலி தீவு அருகே இரவும், பகலுமாக கடற்படை வீரர்கள், நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் ஆகியோர் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டி பார்சல்களை தேடினர்.
கடலுக்கு அடியில் சென்று தேடும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் நவீன எந்திரங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட முயற்சிக்கு பிறகு நேற்று மதியம் கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சல் கண்டெடுக்கப்பட்டது. மண்டபம் கடற்கரை முகாமுக்கு கொண்டு வரப்பட்ட பார்சல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அப்போது அதில் 11.60 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.இந்த கடத்தல் சம்பவத்தில் மட்டும் மொத்தம் 32.80 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ20.20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தன.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை 2 படகுகளில் கடத்தி வந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த முகமது நாசர் (வயது 35), சாதிக் அலி (32), முகமது அசார் (30), அப்துல் அமீது (33), தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ரவிக்குமார் (46) என தெரியவந்தது.
அவர்களை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மதுரையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு இன்று அழைத்து வந்தனர். அங்கு தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்பாக 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? யாருக்காக தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பண பரிமாற்றங்கள் அதிகளவில் நடந்து வந்தன. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடு பிடியால் ஹவாலா பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் கடத்தல்காரர்கள் அரபுநாடுகளில் இருந்து ஹவாலா பணம் மூலம் தங்க கட்டிகளை வாங்கி இலங்கைக்கு கொண்டு வருகின்றனர். அந்த நாட்டில் கெடுபிடிகள் குறைவு காரணமாக கடத்தல்காரர்களுக்கு தங்க கட்டிகளை கொண்டு வருவது எளிதாக உள்ளது.
அங்கிருந்து படகுகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி கொண்டு வந்து இங்குள்ள சிலரிடம் கொடுத்து பணமாக மாற்றி வருவதாக தெரிகிறது. அது தொடர்பாக கைதான வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






