என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ஓமன் நாட்டு சிறையில் வாடும் கணவரை மீட்டு தரவேண்டும்.
    • கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரசிங்கம். இவரது மனைவி கண்மணி. இவர் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனி டம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் வீரசிங்கம் (வயது39). ஓமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அரபு முதலாளியிடம் 6 மாத வேலை செய்தார். அவர் எனது கணவருக்கு சம்பளமும் எதுவும் கொடுக்காததால் நாங்கள் இந்தியாவில் இருந்து பணம் அனுப்பி அவர் சொந்த ஊருக்கு வர ஏற்பாடு செய்தோம்.

    தொடர்ந்து எனது கணவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத் தில் ஓமன் நாட்டில் மீன்பிடி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 12-ந்தேதி ஓமன் நாட்டில் இருந்து விடுமுறைக்காக இந்தியா புறப்பட்டார்.

    அப்போது எனது கண வரின் முன்னாள் முதலாளி கொடுத்த புகாரின்பேரில் ஓமன் ஏர்போர்ட்டில் ஓமன் போலீசார் அவரை கைது செய்ததாக ஊர் திரும்பிய அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தற்ேபாது வேலை பார்க்கும் முதலாளியை தொடர்பு கொண்டோம். அவரும் எனது கணவரை சிறையில் இருந்து மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். ஆனால் மாதங்கள் பல கடந்த பின்னரும் கணவரை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை மீண்டும் தொடர்பு கொண்ட போது அலட்சியமாக பதில் அளித்தார்.

    எங்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை இந்தியா மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலக ஜப்தி நிறுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
    • இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப் பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்காக 1987-ம் ஆண்டில் ராமநாத புரம் வண்டிக்கார தெருவை சேர்ந்த முருகேசன், உச்சிப் புளி அருகே தாமரைக் குளத்தை சேர்ந்த தனிக்கோடி ஆகியோரின் 97 சென்ட் நிலம் ராமநாத புரம் கோட்டாட்சியர் அலு வலக தனி தாசில்தாரால் கையகப்படுத்தப்பட்டது.

    அப்போது ஒரு சென்டிற்கு ரூ.103 நஷ்ட ஈட்டுத்தொகை அறிவிக்கப்பட்டது. அந்த தொகை குறைவானது என இருவரும் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் 1988-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1993-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு சென்டிற்கு ரூ.900 வட்டி யுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஆனால் இந்த தொகையை கொடுக்காத தால் நில உரிமையாளர்கள் மீண்டும் 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். கோர்ட்டு உத்தரவின்படி ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 402 நில உரிமையாளர்கள் இருவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் 8 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லை.

    இதையடுத்து ராமநாத புரம் சார்பு நீதிபதி கதிரவன் கடந்த ஜூன் 1-ந்தேதி கோட்டாட்சியர் அலுவலக கம்ப்யூட்டர், மேஜைகள், ஜீப் ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டு முதுநிலை கட்டளை பணி யாளர் சரவணன், நில உரிமைதாரரின் வழக்கறி ஞர் ஜெயச்சந்திரன், நில உரிமைதாரர் தனிக்கோடி ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். அவர்களிடம் கோட்டாட்சி யர் கோபு, தாசில்தார் முரு கேசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உடனடி யாக நிலத்திற்கான நஷ்ட ஈட்டுத்தொகை ரூ.4.30 லட்சத்திற்கான காசோலை வழங்குவதாகவும், மீதி தொகையை பின்னர் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப் பட்டது.

    • ஊராட்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,

    பொது மக்களிடம் வரி வசூல் செய்யும் போது ரொக்கமாக பெறாமல் ஆன்-லைன் முறையில் வசூல் செய்ய வேண்டும். தனிநபர் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் தாமதம் இன்றி விரைவில் முடிக்க வேண்டும்.குளங்கள் சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டும் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திற்குள் முடிக்க வேண்டும், என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், மண்டபம் பி.டி.ஓ., க்கள் முரளிதரன், நடராஜன், பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன.
    • சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாட்டால் ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் மீனவர்கள் 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடந்த 3 நாட்களாக அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இரவில் மீண்டும் சகஜ நிலையை அடைந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. மேலும் பாம்பன், சங்குமால் கடல் பகுதிகளிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் தரை தட்டி நின்றன.

    ராமேசுவரம் கோவில் அமைந்துள்ள அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    அமாவாசை, பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வு என்றாலும் இந்த முறை 200 மீட்டருக்கும் அதிகமாக கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை. இதே போல சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    • ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை ஒட்டியுள்ள தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படைகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அரிச்சல் முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மீன்பிடித்தொழில் தடைபட்டுள்ளதால் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலைகளை மணல்கள் மூடின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தனுஷ்கோடியில் இறங்கி குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை கடலோர காவல் படையினர் எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் 24 மணி நேரமும் கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு கடந்த 3 மாத காலமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை முடிந்து தற்போது தான் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறோம். இதனிடையே இலங்கை கடற்படை தொல்லையால் முழுமை யாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடிவதில்லை. தற்போது இயற்கையும் எங்களை வஞ்சித்துள்ளது. இதனால் வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது. வானிலை மாற்றம், புயல் போன்ற காலங்களில் கடலுக்கு செல்லாதபோது மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், பல நேரங்களில் சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 5-ந்தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டுமென மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது. அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 22 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அபிராமம் பகுதியில் பருத்தி விலை குறைவால் அதனை பறிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம். திருப்புல்லாணி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது.

    பருத்தி பணப்பயிர் என்பதால் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை குறைந்துவிட்டது.

    அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய மழை இல்லாததால் பருத்தியில் கொண்டை புழு பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்து வரும் நிலையில் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய விளைச்சலும் இல்லை. கமிஷன் கடை களில் பருத்தி ஒரு கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது. விலை குறைவால் விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, அபிராமம் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செடியில் இருந்து பருத்தி பறிப்பதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பருத்தி செடி வீணாகும் நிலை உள்ளது.

    இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதா வது:-

    கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசா யம் பாதிக்கப்பட்டதுடன் மிகப்பெரிய பொருளாதார கஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பருத்தியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் பருத்தி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள், மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக வாரச்சந்தைக்கு ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் ராமநாத புரம் புதிய பஸ்நிலையத்தை ரூ.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாரச்சந்தை அமைக்க நகராட்சி நிர்வா கம் தடை விதித்திருந்தது. இதனால் வியாபரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று புதன்கிழமை என்பதால் அதிகாலையி லேயே வழக்கமான வாரச் சந்தை நடக்கும் பகுதிக்கு வந்த வியாபாரிகள் அங்கு கடை வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து புதிய பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வாரச்சந்தை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடை அமைக்க வேண்டாம் என கூறினர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நகராட்சி நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து வாரச்சந்தை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென ராமநாதபுரம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்று மட்டும் வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் வாரச்சந்தை வேறு ஒரு இடத்தில் அமைக்க மாற்று இடம் தரப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கமுதி அருகே கணினி திருத்த முகாம் நடந்தது.
    • இந்த முகாம் வருகிற 8-ம் தேதி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் சிறப்பு கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் சேதுராமன் அறிவுரையின் படி, கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில், கிழக்கு வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் தலைமையில், கணினி திருத்த முகம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கணினி யில் விடுபட்ட புழை எண் கள், விஸ்தீரன பிழை உள் பட பல்வேறு திருத்தங்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கமுதி, செங்கப்படை, தவசிகுறிச்சி சம்பகுளம், சடையனேந் தல்பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர் போன்ற கிராமப் பகுதியில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நாகநாதன், அபிராமம் வருவாய் ஆய்வாளர் கலாராணி, கோவிலாங் குளம் வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் அப்பகுதிகளில் சிறப்பு கணினி திருத்த முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு வருவாய் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தொண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக மாற்றப்படுமா?
    • வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது.

    இங்கு உள்ள மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தக் ேகாரி, தமிழக அரசின் சுகாதாரத்துறை வழங்கிய அனைத்து ஆவணங்களுடன் மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதை நீதிபதிகள் வைத்தியநாதன், பரத் சக்கர வர்த்தி ஆகியோர் முன்பு டிவிஷன் பெஞ்சில் விசா ரணை நடந்தது. தொண்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

    மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.அரசு மருத்துவமனையை நம்பியுள்ள தொண்டி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள ஏராளமான கிராம மக்கள் சுகாதார தேவையை அரசு நிறைவேற்றுமா? மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்படுமா? என இப்பகுதி பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ரூ. 30 கோடி செலவில் நடைபெறும் கீழக்கரை ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் -திருப்புல்லாணி ரோடு சக்கரகோட்டை வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ராமநாதபுரம் நகருக்கு வந்து சென்றனர்.

    இந்த நிலையில் சேதுநகர் ரெயில்வே கேட் மூடும் போது ராமேசுவரம் ரோட்டில் பழைய பஸ் நிலையம் வரை போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.30 கோடியில் சேதுநகர் ரெயில்வே கேட் அருகே புதியமேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ல் தொடங்கியது.

    இந்த பாலம் ராமநாத புரத்தில் இருந்து சக்கர கோட்டை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கொரோனா பரவல், நிலம் கையகப்படுத்து வதில் தாமதத்தால் 4 ஆண்டுகளாக பாலப்பணி ஆமை வேகத்தில் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது ரெயில்வே கேட் அருகே மேம்பாலத்தில் கிரேன் மூலம் பெரிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நடக்கிறது. ராமநாதபுரம் - ராமேசுவரம் மார்க்கத்தில் ஒரு வழிப் பாதையாக பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.ராமேசுவரம் மார்க்கத்தில் வரும் பஸ்கள் பட்டணம் காத்தான் டி-பிளாக், கேணிக்கரை ரோட்டில் செல்கின்றன. இதற்காக சேதுநகர் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே கேட்டை நிரந்த ரமாக மூடியுள்ளனர்.

    பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போர்க்கால அடிப்படை யில் பணிகளை துரிதமாக செய்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தில் மின்னொளி கபாடி போட்டி நடந்தது.
    • 2-ம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது.

    கீழக்கரை

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத் தில் 12-ம் ஆண்டு ஃபிரண் ட்ஸ் ஸ்டார் அணியினர் நடத்திய மின்னொளியில் கபாடி போட்டி நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 35 ஆயிரமும் சுழற்கோப்பையையும் எஸ்.பி. பட்டிணம் வி.ஆர். எஸ். ஒய் பிரதர்ஸ் அணி பெற்றது.

    இரண்டாம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது. மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் சுழற் கோப்பையை சோழகன் பேட்டை அணி பெற்றது.

    நான்காம் பரிசான ரூ.20 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் ஸ்பார் டன்ஸ் அணி பெற்றது.

    ஐந்தாம் பரிசு ரூ.15 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் லெஜண்ட் அணி பெற்றது.

    வெற்றி பெற்ற அணி வீரர்களை த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட துணை செயலாளர் நிஸார் அஹமது, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாக்கி, தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜ சேகர், த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ஜின்னா இளையோர் அணி புஹாரி தமிம், ம.ம.க. செயலாளர் பரக்கத் அலி ஆகியோர் வாழ்த்தினர்.

    ×