என் மலர்
பெரம்பலூர்
- அ.தி.மு.க. மாநாடு பிரச்சார வாகனம்- தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
- அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்
பெரம்பலூரில் அதிமுக சார்பில் வரும் 20-ம்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் வரும் 20-ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாநாட்டின் டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனமும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டமும் சென்னையிலிருந்து துவங்கி மாநில முழுவதும் சுற்றி வந்து நாளை (19ம்தேதி) மதுரை சென்றடைகிறது. இந்த மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனம் மற்றும் மாநாடு தொடர் ஜோதி ஓட்டம் நேற்று பெரம்பலூர் வந்தது.
பெரம்பலூரில் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சாரம் வாகனம் மற்றும் ஜோதி ஓட்டம் நகர் முழுவதும் வலம் வந்தது. முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரம்பலூரில் சிலை வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது
- பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் நான்குமேம்பாலம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாய்பாய்க்கு சிலை வைக்கவேண்டும் என நகர பாஜக வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நான்கு ரோடு கட்சி கொடிகம்பம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் -யின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு நகர தலைவர் சுரேஷ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட பொது செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ஜெயபால், ராமச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், மாவட்ட தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் உதயகுமார் ,வர்த்தக அணி மாவட்ட தலைவர் அருள், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் தங்க நாற்கரச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாய்பாய்-க்கு பெரம்பலூர் நான்குரோடு மேம்பாலம் பகுதியில் உருவ சிலை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பெரம்பலூர் மாவட்டம் தேனூர் அருகே கார் மோதி சாலையோரம் நின்றிருந்த விவசாயி பலியானார்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 65). விவசாயியான இவர் தனது வயலில் இரவு காவல் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். திருச்சி எதுமலை ரோடு, டி.களத்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவர், பிடாரி அம்மன் கோயில் அருகே சிறிது நேரம் நின்றுள்ளார். அவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற மாருதி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அவர் மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாடாலூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. மணிவேல், பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் கட்டுப்பாட்டை இழந்த காய்கறி லோடு லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது
- அதிர்ஷ்டவசமாக ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தினர் உயிர்தப்பினர்
குன்னம்,
பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பேரளி கிராமத்தில், ரியல் எஸ்டேட், தனியார் பேருந்து அதிபர் மனோகரன் என்பரின், சகோதரி வசந்தா என்பவரின் வீடு உள்ளது. வசந்தாவின் கணவர் சிதம்பரம் இறந்து விட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். வழக்கம்போல இவர்கள் இரவு நேரத்தில் உணவு உண்டபின்னர் தூங்கி உள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இடி விழுந்தது போல சத்தத்துடன் வீடு அதிர்ந்துள்ளது. அலறி அடித்து எழுந்த வந்து பார்த்தபோது காய்கறி ஏற்றிய லோடு லாரி ஒன்று அவர்களது காம்பவுண்ட் சுவரை உடைத்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையையும் உடைத்துக்கொண்டு உள்ளே நின்றதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அரியலூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு புகார் மனு முகாம் நடைபெற்றது
- மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு மனு முகாம் நடந்தது.
பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கனை பெற்று விசாரணை நடத்தினார். முகாமில் பெறப்பட்ட 31 மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் அனைத்து போலீஸ்ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையும் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இம்முகாமினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வருவதற் பாலக்கரையிலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் புது பஸ்ஸ்டாண்ட் செல்லவும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என எஸ்பி ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்.
- கருப்பட்டங்குறிச்சியில் புதிய நியாய விலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிக்கு ஆளாவாதாக வேதனை தெரிவிக்கின்றனர்
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.
அகரம்சீகூர் ஊராட்சியில் திட்டக்குடி பார்டர், வயலூர் கருப்பட்டங்குறிச்சி கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் கருப்பட்டங்குறிச்சியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் இங்குள்ள மக்கள் சுமார் 60- வருடங்களாக வயலூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
கருபட்டங்குறிச்சியில் இருந்து வயலூரில் அமைந்துள்ள ரேசன் கடைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் எனவே கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை புதிய நியாய விலை கடை அமைக்கப்படவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கருப்பட்டங்குறிச்சி பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கோவில்பாளையத்தில் 3 முறை பாம்பு கொத்தியதில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி சாவு
- குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மலர்கொடி (வயது 60). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இவர்களுடைய மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு அவர்கள் தனித்தனியாக கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணாடி விரியன் பாம்பு மலர்கொடியின் கையில் 3 இடங்களில் கடித்துள்ளது. பாம்பு கடித்ததை உணராத மலர்க்கொடி, தனது கணவரை அழைத்து சிறுநீர் கழிக்க அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி அவரை அழைத்து சென்றுவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் மலர்கொடியின் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட பெரியசாமி கட்டிலில் பார்த்தபோது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மலர்கொடியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.சாவு
- பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது
- பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவுக்கு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இதில் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மூர்த்தி, சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலா ளரும், சார்பு நீதிபதியு மான ராஜா மகேஷ்வர் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் அ ட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தி னவிழா கொ ண்டாடப்பட்டது. பெரம்ப லூரில் உள்ள மரகதவ ல்லித்தாயார் சமேத மதனகோ பாலசுவாமி கோவிலில் 77-வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டிய ராஜகோபுரம் அருகே கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில், கோவில் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன், கோவில் பரிஜாரகர் சம்பத், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து வி.சி.க.வினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது
பெரம்பலூர்,
நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திராதேவி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை நீதிபதியின் முன்பு நிறுத்தி விரைந்து தண்டனை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினவேல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் முன்னிலை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் வீர.செங்கோலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பில் முதல் முன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது
- ஊராட்சி மன்றத் தலைவர் பரிசுத்தொகையை வழங்கினார்
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பின்பு10 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 3000 (ரூபாய்) பரிசு தொகையும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 2000 (ரூபாய்) பரிசு தொகையும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு ஆயிரம் (ரூபாய்) பரிசு தொகையும் வழங்கினார்.
இதேபோல் பள்ளி ஆசிரியை ஹேமலதாவும் பரிசுத்தொகையை வழங்கினார். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் 100% தேர்ச்சியை பெற்றதை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், வார்டு உறுப்பினர் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பூலாம்பாடி அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது
- தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் கொடியேற்றினார்
அரும்பாவூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சர்வதேச தொழிலதிபருமான டத்தோ பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, நான் பயின்ற பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வந்தது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.என்னைப்போல இங்குள்ள பெரும்பாலானோர் பயின்றது இந்த பள்ளிதான்.பெற்றோரிடம் இருப்பதை விட ஆசிரியரிடமே அதிகநேரம் இருக்கிறோம்.நாங்கள் படிக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது என்பையன் நல்லா படிக்கனும் அடிச்சு சொல்லிக்கொடுங்க என்பார்கள்.ஆனால் இன்று அடித்தால் ஏன் என் பையனை அடித்தீர்கள் என பெற்றோர்கள் கேள்விகேட்கிறார்கள் அது பெற்றோர்கள் செய்யும் தவறு.இன்றைய காலக்கட்டத்தில் மரியாதை பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை சொல்லித்தருவது ஆசிரியர்கள் தான்.பெரம்பலூர் மாவட்டத்திலேயேசிறந்த பள்ளி என பூலாம்பாடி மேல்நிலைப்பள்ளி என்ற பெயர் எடுக்க வேண்டும்.அதற்கு என்னால் முடிந்ததை செய்து தருகிறேன்.மாணவர்கள் ஒவ்வொருவரும் சாதிக்ககூடியவர்கள் தான்.உங்களதுவாழ்க்கையை நீங்கள் முடிவுசெய்யனும்.இன்றைய காலத்தில் படிப்புதான் மிக முக்கியம்.படிப்பு இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது.இன்று நீங்கள் கஷ்டப்பட்டால் பின்னால் நன்றாக இருக்க முடியும்.என்னைப்போ லநீங்களும் இதே பள்ளியில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும்.என்னால் முடிந்தது உங்களாலேயும் முடியும்.மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்புநல்க வேண்டும்.மலேசியாவில் அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுவேலை.அதே போல் கூடிய சீக்கிரம் இந்தியாவிலேயும் வரும் என எதிர்பார்க்கிறேன்.அரசுபள்ளி ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்த்தாலே ஊரில் உள்ள அனைவரும் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்ப்பார்கள் என்றார்.
முன்னதாக டத்தோ பிரகதீஸ்குமார் அவர்களுக்கு சாரண சாரணிய இயக்க மாணவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் தொழிலதிபர்கள் இசைபாலு, டிகேஎஸ் ரமேஸ், பள்ளிதலைமை ஆசிரியர் முருகேசன், உள்ளிட்ட ஆசிரியர்களும், பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி செங்குட்டுவன், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூரில் பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் தன்னார்வலருக்கான பயிற்சி நடைபெற்றது
- 200 கல்வியறிவு கிடைக்காதவர்களை தேர்ந்தெடுத்து கல்வி அளிக்க முடிவு
பெரம்பலூர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பில் பெரம்பலூர் அரசு ஆண்கள் மேல்நி லை ப்ப ள்ளியில் கல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 66 பள்ளிகளை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் 15 வயதுக்கு மேல் கையொப்பமிட மற்றும் தமிழ் வாசிக்க தெரியாத ஆயிரத்து 200 கல்லாதவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் கற்பதற்கு ஏதுவாக மையங்களை தேர்வு செய்து நடத்து வதற்கு தன்னா ர்வலர்களை தேர்வு செய்து 20 பேர் கொண்டு ஒரு மையம் என்ற வீதத்தில் 66 மையங்கள் மையங்கள் அமை க்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் கொண்டு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கற்போருக்கு பயிற்சிகள் நடத்தப்படவுள்ளது என தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன், கலைவாணன், ரமேசு ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 66 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.






