search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் மோதி விபத்துக்குள்ளான  லாரி
    X

    கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் மோதி விபத்துக்குள்ளான லாரி

    • பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் கட்டுப்பாட்டை இழந்த காய்கறி லோடு லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது
    • அதிர்ஷ்டவசமாக ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தினர் உயிர்தப்பினர்

    குன்னம்,

    பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பேரளி கிராமத்தில், ரியல் எஸ்டேட், தனியார் பேருந்து அதிபர் மனோகரன் என்பரின், சகோதரி வசந்தா என்பவரின் வீடு உள்ளது. வசந்தாவின் கணவர் சிதம்பரம் இறந்து விட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். வழக்கம்போல இவர்கள் இரவு நேரத்தில் உணவு உண்டபின்னர் தூங்கி உள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இடி விழுந்தது போல சத்தத்துடன் வீடு அதிர்ந்துள்ளது. அலறி அடித்து எழுந்த வந்து பார்த்தபோது காய்கறி ஏற்றிய லோடு லாரி ஒன்று அவர்களது காம்பவுண்ட் சுவரை உடைத்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையையும் உடைத்துக்கொண்டு உள்ளே நின்றதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அரியலூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×