என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் சிறப்பு புகார் மனு முகாம்
- பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு புகார் மனு முகாம் நடைபெற்றது
- மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு மனு முகாம் நடந்தது.
பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கனை பெற்று விசாரணை நடத்தினார். முகாமில் பெறப்பட்ட 31 மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் அனைத்து போலீஸ்ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையும் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இம்முகாமினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வருவதற் பாலக்கரையிலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் புது பஸ்ஸ்டாண்ட் செல்லவும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என எஸ்பி ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்.






