என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி விவசாயி பலி
- பெரம்பலூர் மாவட்டம் தேனூர் அருகே கார் மோதி சாலையோரம் நின்றிருந்த விவசாயி பலியானார்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 65). விவசாயியான இவர் தனது வயலில் இரவு காவல் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். திருச்சி எதுமலை ரோடு, டி.களத்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவர், பிடாரி அம்மன் கோயில் அருகே சிறிது நேரம் நின்றுள்ளார். அவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற மாருதி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அவர் மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாடாலூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. மணிவேல், பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story






