என் மலர்
நாகப்பட்டினம்
- விஜய் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது.
- புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு சென்று விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.
நாகப்பட்டினம்:
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று(சனிக்கிழமை) நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
விஜய் பிரசாரம் மேற்கொள்ள கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் அந்த கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.
இந்த நிலையில் புத்தூர் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் அந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்வதால் பாதுகாப்பு கருதி அந்த இடத்தை தவிர்த்த தமிழக வெற்றி கழகத்தினர் அண்ணா சிலை பகுதியில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டனர்.
இதற்கு காவல்துறை போக்குவரத்து காரணங்களை காட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் பிரசார இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.
இருந்தும் அந்த கட்சியினரின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட போலீசார், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கினர். குறிப்பாக விஜய் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது. பயண வழிப்பாதை மற்றும் பிரசாரம் நடைபெற உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது.
பிற கட்சிகளின் அலுவலகங்கள் இருப்பின், அந்த இடங்களில் தங்கள் கட்சியின் தன்னார்வலர்களை நியமித்து பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் ஏற்பட்டால், பொறுப்பேற்க வேண்டும். சிலைகள் இருக்கும் இடங்களில் ஏறக்கூடாது என்பது உள்பட 20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
குறிப்பாக நண்பகல் 12.25 மணி முதல் 1 மணி வரை 35 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
தொடர்ந்து நாகூர், நாகை கலெக்டர் அலுவலகம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் வழியாக கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கிருந்து புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு சென்று விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.
நாகையில் பிரசாரத்தை முடித்து விட்டு சிக்கல், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூர் வரும் விஜய். திருவாரூர் தெற்கு வீதியில் பிரசாரம் செய்கிறார். மதியம் 3 மணி முதல் 5 மணி வரை அவர் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். திருவாரூரில் பிரசாரம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு விஜய் சென்னை செல்கிறார்.
இதனையொட்டி விஜய் பிரசாரம் செய்யும் வாகனம் நேற்று அதிகாலையே நாகைக்கு வந்தது. தற்போது அந்த வாகனம் நாகையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய், அங்கிருந்து சாலைமார்க்கமாக பிரசார வாகனத்தில் நாகை வருகிறார். நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் விஜய் பேச உள்ளார்.
- நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
- விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், நாகையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரைப் பயணம் செல்லும் வழியில் மின்சாரத்தை நிறுத்தம் செய்ய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், மின் வாரியத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் அல்லது, மின் ஊழியர்களை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாகூர், புத்தூர் பகுதியில் விஜய் செல்லும்போது மின் விநியோகம் இருக்காது என மின்துறை தெரிவித்துள்ளது.
- மீனவர்கள் நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகபட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செருதூர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பை சேர்ந்த இடும்பன் (47), ரெத்தினம் (25) பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (55) ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். நேற்று நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் செல்போன் மற்றும் தொழில் நுட்ப கருவிகளை கேட்டனர். அவர்கள் தரமறுத்ததால் மீனவர்களை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலையில் அவர்கள் கரை திரும்பினர். கடற்கொள்ளையர்களால் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் ஆகிய 3 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
இதைப்போல் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரகதீஸ் (வயது 25), திரிசெல்வம் (44), சுந்தரவேல் (30), மீனவர் காலனி வெல்லப்பள்ளத்தை சேர்ந்த சாந்தகுமார் (28), அந்தோணிராஜ் ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து 200 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை, செல்போன்கள், பேட்டரி, டார்ச் லைட், சார்ஜர், பெட்ரோல் கேன், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.
இன்று காலை கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைப்போல் செருதூரில் இருந்து சென்ற மற்றொரு பைபர் படகில் இருந்து 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடமிருந்து மீன்பிடி வலை மற்றும் தொழில் நுட்பபொருட்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.
- பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடந்து வருகிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
- வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளா ங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள்.
விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனா்.
சிலர் தென்னங்கன்றுகளை வாங்கி ஆலயத்தில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
- உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பானது தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் நேற்றிரவு திடீரென பெய்த மழையால் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தியான உப்பை விற்பனை செய்தது போக, மீதமுள்ள உப்பை பாதுகாப்பாக தார்பாய் கொண்டு தொழிலாளர்கள் மூடி வைத்துள்ளனர்.
இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் கூறுகையில்:-ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை வரையிலான 6 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக அவ்வப்போது பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டு உற்பத்தி இலக்கான 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தியை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இந்த திடீர் மழையால் உப்பு பாத்திகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 4 படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். திடீரென அவர்கள் 3 படகையும் வழிமறித்து மீனவர்களை சரமாரியாக தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடன் வந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்கு திரும்பி நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
- சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக "நாகை வாசிக்கிறது" எனும் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்கள் புத்தகம் வாசிப்பதை ஆர்வமுடன் பார்வையிட்டார்.
பின்னர் அவரும் மாணவர்களோடு சேர்ந்து புத்தகம் படித்து மகிழ்ந்தார்.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு "நாகை வாசிக்கிறது" எனும் நிகழ்வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நம்பியார் நகர் நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் மணி, விமலா, கண்ணன், தலைமை ஆசிரியை உலகாம்பிகை உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின்.
- பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "4 ஆண்டுகளாக திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றம் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி கேட்கிறார்கள். கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின். கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது. கொரோனா காலத்தில்கூட விலைவாசி உயராமல் அதிமுக ஆட்சியில் பார்த்துக் கொண்டோம்" என்று கூறினார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை அறிவிக்கும் பாங்கு ஒலித்த சத்தம் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களிடம் உரையாற்றினார்.
பாங்கு ஓதப்பட்டு முடிந்த பிறகு தொண்டர்கள் அவரிடம் நினைவு படுத்தியதை அடுத்து மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கேட்டார்.
- விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
- மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கீழ்வேளூர்:
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் மற்றும் திருவாரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அமோக வரவேற்பு கொடுத்த கீழ்வேளூர் தொகுதி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், '
'விவசாயத்தை நம்பித்தான் உங்கள் வாழ்க்கை உள்ளது. உங்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டுவந்தோம். பார்த்து பார்த்து செய்துகொடுத்தோம். ஆனால், ஸ்டாலின் அரசோ மீத்தேன் எடுப்பதற்கு விளை நிலங்களை பறிக்க கையெழுத்து போட்டது. அப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம். இனி எவராலும் உங்கள் நிலத்தைப் பறிக்க முடியாது. விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
எல்லா துறையிலும் ஊழல். டாஸ்மாக்கில் ஊழல் முதலில் 1000 கோடி என்றார்கள். இப்போது 40 ஆயிரம் கோடி என்கிறார்கள். இந்த ஆட்சியின் ஒரே சாதனை கொள்ளை அடித்ததுதான். சபரீசனும் உதயநிதியும் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்ததாக திமுக அமைச்சரே சொன்னார். உண்மைதான். டாஸ்மாக்கில் மட்டும் வருஷத்துக்கு 5,400 கோடி ஊழல், யாரு வாங்குறது செந்தில் பாலாஜி, இப்பவும் கூட வாங்குறார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் பல பேர் எங்கே இருக்கணுமோ அங்கே இருப்பாங்க. அதிமுகவை அவதூறாக பேசுறீங்க, எம்ஜிஆர் தொடங்கிய அம்மா கட்டிக்காத்த புனிதமான இயக்கம். எங்க கட்சியில் வாரிசு அரசியல் இல்லை. இந்தியாவில் மன்னராட்சி ஒழித்தாச்சு, திமுகவில் கொண்டுவந்துட்டாங்க. பதவியை உங்களுக்கு யாரும் பட்டா போட்டு கொடுத்தாங்களா? அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி. விசுவாசமாக உள்ள யார் வேண்டுமானலும் வரலாம். திமுகவிலும் அப்படி யாராக இருந்தாலும் முதல்வராக முடியும் என்று ஒருவார்த்தை சொல்லுங்கள் பார்ப்போம். குடும்பம்தான் கட்சி, கட்சிதான் குடும்பம்.
ஸ்டாலினே இதனை ஒப்புக்கொண்டார். திமுகவில் இருக்கும் எல்லோரும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திடுவாங்க, இன்பநிதி வந்தாலும் ஏத்துபாங்க அப்படி இருந்தாத்தான் பதவி கொடுப்பாங்க. திமுக கம்பெனியில் கோடி கோடியா பணம் குவியுது.
அதிமுக ஆட்சியில் ஆடு, மாடு, கோழி இலவசமாகக் கொடுத்தோம். பசுமை வீடு கொடுத்தோம். ஆனால், எங்களை எப்படியெல்லாம் எங்களை துன்பப்படுத்தினீங்க..? சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது என்னுடைய டேபிளில் வந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகர் இருக்கையில் அவரை எழுப்பிவிட்டு திமுகவினர் அமர்ந்தனர். ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே போனார்.
அடுத்த ஆண்டு அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். முன்பு சட்டையை கிழிச்சீங்க… அடுத்து எதை கிழிப்பீங்கனு தெரியலை. எங்க கட்சி நல்லாத்தான் இருக்கு, இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. எங்க ஆளுங்களை எட்டப்பன் மாதிரி விலைக்கு வாங்கி தொல்லை கொடுத்தீர்கள்.
டிஎன்பிஎஸ்சியில் ஊழல். இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் ஊழல். 5.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். ஆனால் வெறுமனே 50 ஆயிரம் பேர் தான் நிரப்பினாங்க. ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் ஓய்வு, 4 வருடத்தில் 70 ஆயிரம் பேர் ஓய்வு. 5 லட்சத்து 75 ஆயிரம் பணியிடம் இன்னும் காலியாக இருக்கு. சொல்வதெல்லாம் பொய். அதிமுக ஆட்சியில் நிச்சயம் விசாரணை நடத்தப்படும். அதிகாரிகள் தவறு செய்தால் அவ்வளவுதான்.
விலைவாசி ஒப்பிட்டுப் பாருங்க. பச்சரிசி அரிசி 77, புழுங்கல் அரிசி 72, இட்லி அரிசி 48, கடலை எண்ணெய் 190, நல்லெண்ணை 400, துபருப்பு 130, உபருப்பு 120, ஆக இப்படி விலைவாசி அதிகமாக இருந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? கட்டுமானப் பொருள்கள் விலையும் விண்ணைத் தொட்டுவிட்டது. கனவில்தான் வீடு கட்ட முடியும். இத்தொழில் ஈடுபட்டவங்க வேலையில்லாமல் இருக்காங்க.
அதுமட்டுமல்ல, கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி ஆரம்பிச்சாங்க, இதுவரை கட்டடமே கட்டலை, அதனால் மாணவர்கள் வெவ்வேறு இடத்துல படிக்கிறாங்க. அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செய்தோம். மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், சட்டக் கல்லூரி என நிறைய கொடுத்தோம். கிராம மக்கள் ஆங்காங்கே சிகிச்சை பெற அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம், அது பொறுக்க முடியலை. மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கல்வித்துறை அமைச்சர் சொல்றார், எடப்பாடி நிறைய மேல்நிலைப் பள்ளி திறந்துவிட்டார் என்கிறார். மாணவர் குறைவாக இருந்தாலும் மேல்நிலை பள்ளி துவக்கினோம். கல்வி கற்கத் தானே திறந்தோம், மக்களுக்குத் தேவை, கேட்டாங்க கொடுத்தோம் இதுல என்ன தப்பு? கிராம மாணவர்கள் பயன்பெறுவதற்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்தோம், 2818 பேர் மருத்துவர் ஆகிட்டாங்க. ஏழைகளுக்காக கொடுத்தோம். முதல் செட் மாணவர்கள் மருத்துவர் ஆகிட்டாங்க, அவங்க என்கிட்ட வந்து நன்றி சொன்னார்கள்.
நிறைய விவசாயக் கருவிகள் கொடுத்தோம், அதிலேயும் இந்த ஆட்சியில் ஊழல். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு டிராக்டர் கொடுக்குறாங்க. இதையெல்லாம் விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி வயிற்றில் அடிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். 20 துறைகளில் இருந்து எடுத்து வேளாண் என்று தனி பட்ஜெட் படிக்கிறார். மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இன்று உங்களுடன் ஸ்டாலின் என்று வருகிறார். 46 திட்டங்களை 45 நாட்களில் நிவர்த்தி செய்வாராம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து, மனுக்களை வாங்கி ஆட்சிக்கு வந்து தீர்ப்பேன் என்றார். நாலு வருஷம் ஏன் தீர்க்கவில்லை? அப்புறம் எதுக்கு இந்த புதிய திட்டம்? ஸ்டாலின் ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்.
ஒரு முதல்வரே நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். இப்படி ஒரு முதல்வர் தேவையா? கீழ்வேளூர் அதிமுகவுக்கு கொடுக்கச் சொல்கிறார் ஓ.எஸ்.மணியன், உங்கள் எண்ணம் நிறைவேறும். அதிமுகவை நேசிக்கும் மக்கள் இருக்கிறீர்கள்.
கீழ்வேளூர் தொகுதியில், தடுப்பணைகள், குடிமராமத்து திட்டம், பிரமாண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே ஆர்டரில் 11 மருத்துவக் கல்லூரி கொடுத்த ஆட்சி அதிமுகதான். இப்ப அந்த மருத்துவமனைகள் சரியில்லை, மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அப்போலோ மருத்துவமனையின் சிகிச்சை இதிலும் அளிக்கப்படும்.
அதிமுக அரசு மக்கள் அரசு. முடியட்டும் திமுக ஆட்சி, மலரட்டும் மக்கள் ஆட்சி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்".
இவ்வாறு அவர் பேசினார்.
- டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
- இறந்து கரை ஒதுங்கிய ராட்சத டால்பினை மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பாாத்து சென்றனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்பரப்பில் ஏராளமான டால்பின் மீன்கள் உள்ளன. இவை ஆழமான கடற்பரப்பில் மட்டுமல்லாமல் கரையோர பகுதிகளுக்கும் வந்து மீன்களை உண்பது வழக்கம்.
அந்த வகையில், மீன்பிடி சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரத்தில் அதிகளவில் டால்பின் மீன்கள் காணப்படும். இந்நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே ராட்சத டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் டால்பின் மீனை கடலோரத்தில் இருந்து கரைக்கு இழுத்து வந்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் கூறுகையில், இந்த டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
- மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
- படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில், சுரேஷ் ஆகிய இருவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






