என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் பொறையாறு நல்ல தண்ணீர் சந்து தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39). இவர், தரங்கம்பாடியில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி காயத்ரி (28). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சரண் (5), கமலேஷ்வரன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக தன்னை வேல்முருகன் அடிக்கடி கொடுமைப்படுத்துவதாகவும் காயத்ரி தனது பெற்றோரிடம் கூறி வந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடவாசலில் உள்ள மாமனார் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், காயத்ரியை சமாதானம் செய்து பொறையாறில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை செல்வராஜ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காயத்ரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகனை கைது செய்தனர்.
இதில் பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவின் காரணமாகவும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை சில நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 2-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்தது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் இன்றி ஆலய வளாகத்தை சுற்றி நடக்கிறது.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழையூர் உப்ப நகர் மாரியம்மன் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழிமறுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ கஞ்சா மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே உள்ள ஹாஜியார் நகரை சேர்ந்த காமராஜர் (வயது 50), தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்நாதன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை சுனாமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) இவருக்கு சொந்தமான படகில் பனங்காட்டுதெருவை சேர்ந்த கோபி (45), வேலவன் (44), சுகுமார் (42), காளிதாஸ் (20) ஆகிய 4 மீனவர்களும், ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே 18 மைல் தொலைவில் மீன்பிடித்தனர். பின்னர் வலைகளை படகில் எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இரண்டு படகுகளில் அங்கு வந்தனர்.
திடீரென அவர்களில் 4 பேர் வாள், இரும்பு ராடுகளுடன் தமிழக மீனவர்கள் படகில் ஏறி அவர்களை தாக்கினர். இந்த கொடூர தாக்குதலில் கோபி, சுகுமாறன், வேலவன், காளிதாஸ் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
மேலும் படகில் இருந்த வலைகளையும் வெட்டி வீசி, செல்போன், டார்ச் லைட், டீசல் கேன் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
தகவல் அறிந்த தமிழக மீனவர்கள் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இலங்கை மீனவர்கள் தமிழக எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்கி வரும் சம்பவம் தொடர்வதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இலங்கை மீனவர்களை தமிழக கடல்பகுதிக்கு வர விடாமல் தடுத்து சம்பந்தப்பட்ட இலங்கை மீனவர்களை கைது செய்ய அரசு நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தனது வீட்டில் இருந்து வந்தார். அப்போது இந்த மாணவியை அவரது உறவினரான தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் சுந்தர்(வயது 20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், சிறுமியையும் தேடி வருகிறார்கள்.






