என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குத்தாலம் அருகே தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை
Byமாலை மலர்6 Sep 2020 7:45 AM GMT (Updated: 6 Sep 2020 7:45 AM GMT)
குத்தாலம் அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் சரகம் ஆத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவர், நாகை மதுவிலக்கு பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக சிவக்குமார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் பணியை முடித்து விட்டு மயிலாடுதுறை அருகே அகரக்கீரங்குடி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சிவக்குமாருக்கு துர்கா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X