search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

    மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழையூர் உப்ப நகர் மாரியம்மன் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழிமறுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ கஞ்சா மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே உள்ள ஹாஜியார் நகரை சேர்ந்த காமராஜர் (வயது 50), தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்நாதன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×