என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்5 Sep 2020 9:49 AM GMT (Updated: 5 Sep 2020 9:49 AM GMT)
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழையூர் உப்ப நகர் மாரியம்மன் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழிமறுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ கஞ்சா மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே உள்ள ஹாஜியார் நகரை சேர்ந்த காமராஜர் (வயது 50), தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்நாதன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X