என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசு கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி சுகன்யா. இவர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை

    சார்பில் நாகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் 2ம் இடம் பெற்று அதற்கான ரொக்கப் பரிசுக்கும் தேர்வானார். இதையடுத்து, அவருக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் அர்ச்சுணன், பேராசிரியர் ராஜா, முனைவர்கள் பாரதிஸ்ரீ, ரெஜித்குமார், பார்த்தீபன், செந்தில்குமார், தனபால்,

    ஞானக்கபிலன் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்று மாணவி சுகன்யாவை பாராட்டினர்.
    நாகையிலிருந்து திருக்குவளைக்கு பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி செல்கின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கிராமத்திலிருந்து மேலப்பிடாகை, பாப்பாகோவில் வழியாக நாகப்பட்டினத்திற்கு சுமார் 30 கி.மீட்டர் செல்லும் வழி தடத்தில் 10ம்நம்பர் டவுன் பஸ் மட்டுமே

    இயங்கி வருகிறது. தினந்தோரும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், பணிக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானவர்கள் நாகப்பட்டினத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த சூழ்நிலையில் இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்தும், வேலை முடிந்தும் வீட்டுக்கு செல்வோர் இந்த பஸ்சிலேயே செல்வதால் மாணவர்கள் படிக்கட்டில்

    தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பஸ்சை இயக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகை அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி நடந்தது.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு வனத்துறை, அன்பு டிரஸ்ட் ஆகியவை சார்பில் மூலிகை கண்காட்சி நாகை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. 

    தமிழக பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மணிவாசகம் தலைமை வகித்தார். 

    அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். நாகை பாரதிதாசன் அரசு கல்லு£ரி பேராசிரியர் சிவக்குமார், அன்பு டிரஸ்ட் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    சித்த மருத்துவம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், சித்த மருத்துவம் தயார் செய்யும் முறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்-கப்பட்டது. 

    நேற்று நடந்த கண்காட்சியில் நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    திருமருகல் அருகே சேதமடைந்த அங்காடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார்450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்-திற்கு உட்பட்ட சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது. 

    இந்த கட்டிடம் சுமார் 1 ஆண்டுக்கு மேல் எந்தவித பராமரிப்பும் இன்றி தரைகளில் உள்ள காரைகள் பெயர்ந்தும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து உள்ளது.இதனால் இதற்கு மாற்றாக அருகில் உள்ள

    ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் பழைய கட்டிடத்தை புதுபிக்க எவ்வித நடவடிக்கையும்

    எடுக்காமல் உள்ளது எனவும் இதனால் ஊராட்சி சேவை மையம் மூடக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்

    அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்களின் அவதியை புரிந்து உடன் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    வேதாரண்யத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க கோரியும், தேர்தல் வாக்குறுதியை நடப்பு

    சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிடவும் காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திற்கு

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு ஊழியர் சங்க இணை

    செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

    நாகை புதிய பஸ் நிலையத்தில் கள்ளச்-சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டுப்புற கலை மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள்,

    கரகாட்டம் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. முன்னதாக டி.எஸ்.பி ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம்

    வழங்கினார். அதனை தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய கரகாட்டம், தப்பாட்டம் கிராமிய பாடல்கள் இடம்பெற்றன. 

    தொடர்ந்து மது பழக்கத்தினால் சமுதாயத்தில் மரியாதை குறைவு. உறவுகள் இடையே விரிசல். அதிகரிக்கும் கடன் தொல்லை.  நினைவாற்றல் இழக்கும் சூழ்நிலை. தவறுகள் செய்ய தூண்டும்.

    எனவே மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்று நாடகம் மூலம் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பஸ் நிலையத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள்

    கண்டு-களித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்துவது, வைத்திருப்பது, விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டவருக்கும், கள்ளச்சாராய

    விற்பனையினை விட்டு மறுவாழ்வு பெறுவதற்கும் உதவி செய்யப்படும்.நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை 04365-247430 அல்லது கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 10581 ஆகிய

    எண்களில் தெரிவிக்-கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியம் பாதுகாக்-கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் 2 கார்களையும் சோதனையிட்டனர்.

    அப்போது கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் 7 பேரும் வேதராண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து நள்ளிரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கீட்டமைன் என்ற போதை பொருளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    7 பேரும் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை பொருளை எடுத்து வந்தனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    திருமருகல் அருகே மத்தளங்குடி-பில்லாளியில் ஆபத்தான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, அனவாசநல்லூர், பில்லாளி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    மேற்கண்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை உள்ளது.இந்த சாலை 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை.மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாக பில்லாளி வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பயத்தாங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர்.

    அதேபோல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். 

    அதேபோல் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த வழியாக சென்று திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில் பில்லாளி செல்லும் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் ஜல்லிகற்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
    கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சாமி கோவில் அமைந்துள்ளது. 

    இது மாடக் கோவில் ஆகும். சமய குரவர்களால் பாடல் பெற்ற இவ்வாலயத்தில் சித்திரை விழா கடந்த 14ம் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது

    நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக அட்சயலிங்க சுவாமி அம்பாளுடன் மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    முன்னதாக சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் மீனாட்சிசுந்தரம் மாவட்ட துணைத்தலைவர்கள் உலகநாதன், ராஜமாணிக்கம் மாவட்ட இணைச் செயலாளர்கள் வேதரத்தினம், வெங்கடாசலம் சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன், கிராம உதவியாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ஒய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், வட்டச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப் படாத சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7800 வழங்க வேண்டும் மற்றும் பணியாளர்களை காப்பீட்டு திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும். 

    புதிய ஒய்வுதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்பீட்டு நிலவை தொகை வழங்காமல் உள்ளது சிகிச்சைக்கான பெற்று நிலுவை தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
    நாகூரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
    நாகப்பட்டினம்:

    ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்கள் பசித்திருந்து நோன்பு இருந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்த நாகூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.

    நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு திறந்தனர். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நாகை நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்றனர்.
    பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். பா.ஜனதா கட்சியினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப் படக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர்.

    அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு முயல்கிறது. அந்த அடிப்படையில்தான் எச்.ராஜாவை கேரள கவர்னராக நியமிக்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை உதவி செய்துள்ளது. அந்த உதவி இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... ராஞ்சி பெண்ணிடம் நூதன மோசடி- ரூ.25 லட்சம் லாட்டரியில் வென்றதாக கூறி ரூ.3.45 லட்சம் அபேஸ்

    ×