என் மலர்
நாகப்பட்டினம்
நாகை அருகே சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த இறையான்குடி கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் ஒற்றுமையால் இந்த பகுதியில் கள்ளச் சாராயம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சட்டவிரோதமாக கள்ளச்-சாராயம் கடத்தி வரப்பட்டு பாக்கெட் சாராயம் இறையான்குடி மற்றும் சிங்கமங்கலம் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் வலிவலம் காவல் நிலையத்தில் புகாரளிக்க இறையான்குடி கிராமத்-தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம பொது-மக்கள் திரண்டனர்.
அப்பொழுது சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன முழக்கங்களை எழுப்பியபடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் நிலையத்தில் யாரும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் அவ்வழியே செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களது நலன் கருதி உடனடியாக விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி கிராம மக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர்.
பொதுமக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்திய வலிவலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் நீண்ட விடுப்புக்கு பிறகு பணிக்குச் சேர்ந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சாராய விற்பனை தொடர்பான புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
புகார் அளிக்க வந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை ஆழியூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் நாகை ஒன்றியம் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை சார்பாக, ஆழியூர் ஊராட்சி மற்றும் தேமங்கலம் ஊராட்சி பகுதியில் வசிக்கக்கூடிய மாற்றுத் திறனாளிக்கான நல உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆழியூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில், நடைபெற்றது.
இதில், தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வட்டார அணி தலைவர் ரவிச்சந்திரன் மாற்றுத்திற னாளிகளுக்கு மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். சொந்த தொழில் தொடங்கிடவும் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுபடுத்திடவும் ஊராட்சி குழு அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக கடனுதவி பெறும் திட்டம். தொழில் குழு திட்டம் 10 பேர் முதல் 30 பேர் வரை ஒன்றிணைந்து துவக்க நிதி பெற்று தொழில் குழு செய்ய கடனுதவி திட்டம்.
உற்பத்தியாளர்கள் குழு திட்டம் 30 முதல் 150 பேர் வரை ஒன்றிணைந்து உற்பத்தியாளர்கள் குழு தொழில் தொடங்க கடனுதவி திட்டம் சுயதொழில் பயிற்சி கம்ப்யூட்டர் சாம்பிராணி, மெழுகு வர்த்தி, அழகு நிலையம் போன்ற பல்வேறு தொழில்கள் கற்றுக் கொள்ள இலவச பயிற்சி திட்டம் பல்வேறு தகவல்களை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளின் முழு விபரங்களுடன், தனிநபர் பயிற்சி தேவையா எந்தவிதமான பயிற்சி வேண்டும் மாதஉதவித்தொகை பெறுகிறாரா. தனிநபர் (அல்லது) குழுவின் வாயிலாக வங்கி கடன் பெற்றவரா உபகரணங்கள் தேவையா வேறு உதவிகள் இருப்பினும் அதுபற்றிய முழு விபரங்களையும் விண்ணப்பங்களாக பெறப்பட்டது.
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சம்பத்குமார் மாற்று திறனாளிகளுக்கு உதவியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும், சரி பார்த்தும் உதவினார். பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாழ்ந்து காட்டுவோம் அலுவலகத்தின் வாயிலாக, மாவட்ட கலெக்டர் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
முன்னதாக, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பிரதிநிதி கலையரசன் வரவேற்றார். மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நாகப்பட்டினம் ஒன்றியத்தின் நிர்வாகியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க செயலாளருமான ஹாஜா நன்றி கூறினார்.
ஆழியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம், ஆர்த்தி, மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் சம்பத்குமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பொருள்வை கண்ணுவாப்பா, ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி, அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கணேஷ், ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட தேமங்கலம் ஊராட்சி ஆழியூர் ஊராட்சியை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் தடுப்பு உலோக தகடுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தாமரைபுலம்- நாகக்குடையான் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் விபத்துகளை தடுப்பதற்கு உலோக தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளை உடைத்து சுமார் 3 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோவை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மதன்குமார் வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான உலோக தகடுகளை திருடிய தாமரைபுலம் மேற்கு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
திருப்புகலூர் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் திருப்புகலூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் சார்பில் மண் மாதிரி சேகரித்தல் முகாம் நடைபெற்றது.
முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் கலந்து கொண்டு மண் மாதிரி எடுத்தல் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடல் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
முகாமில் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சுதா, மண் எடுத்தல் தருணம், சேகரம் செய்யும் முறை, கார் பங்கீட்டு முறையில் மண் மாதிரி சேகரித்தல், மண் மாதிரி எடுத்தல் குறித்து விவசாயிகளின் வயல்களில் செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
நெல், நிலக்கடலை, சிறு தானிய பயிர்களுக்கு அரை அடி ஆழத்திலும், பருத்தி, எள், காய்கறி பயிர்களுக்கு ஒரு அடி ஆழத்திலும் மண் மாதிரி எடுக்க வேண்டும், மண் மாதிரி ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10 இடங்களில் ஆங்கில எழுத்து ‘வீ’ வடிவில் குழி எடுத்து அதன் பக்கவாட்டில் மண்ணை சுரண்டி எடுத்து கார் பங்கீட்டு முறையில் பிரித்து இறுதியில் அரை கிலோ மண் மாதிரியை துணிப்பையில் சேகரம் செய்ய வேண்டும்.
துணி பையோடு விவசாயிகளின் பெயர், தகப்பனார் பெயர், முகவரி, புல எண், உட்பிரிவு எண், அலைபேசி எண், முன் சாகுபடி செய்த பயிர், பின் சாகுபடி செய்ய போகும் பயிர், பாசன ஆதாரம் போன்ற விவரங்கள் அடங்கிய விபரத்தை அனுப்பப்பட வேண்டும். முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் மண் பரிசோதனை நிலைய அலுவலர்கள், திருப்புகலூர் கிராமத்திற்கு உட்பட்ட உதவி வேளாண் அலுவலர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பவித்ரா செய்திருந்தார்.
கீழ்வேளூர் கடைவீதியில் பசுமைப்படை வேன் மூலம் மது, கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கல்வித்துறை தேசிய பசுமைப்படை வேன் மூலம் மது, கள்ளச்சாராயம் பிளாஸ்டிக் இவற்றிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டனர். கீழ்வேளூர் கடைவீதியில் இந்த
பிரச்சாரத்தை முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் துவக்கி வைத்தார்.மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவக்குமார் ஓய்வு பெற்
தலைமையாசிரியர் மணிமாறன், கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் ரஞ்சித் மற்றும் நாகலூர் பசுமைப்படை ஆசிரியர் அருள் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நெல்மணி கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை
வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.
வேதாரண்யத்தில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசு கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி சுகன்யா. இவர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை
சார்பில் நாகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் 2ம் இடம் பெற்று அதற்கான ரொக்கப் பரிசுக்கும் தேர்வானார். இதையடுத்து, அவருக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் அர்ச்சுணன், பேராசிரியர் ராஜா, முனைவர்கள் பாரதிஸ்ரீ, ரெஜித்குமார், பார்த்தீபன், செந்தில்குமார், தனபால்,
ஞானக்கபிலன் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்று மாணவி சுகன்யாவை பாராட்டினர்.
நாகையிலிருந்து திருக்குவளைக்கு பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கிராமத்திலிருந்து மேலப்பிடாகை, பாப்பாகோவில் வழியாக நாகப்பட்டினத்திற்கு சுமார் 30 கி.மீட்டர் செல்லும் வழி தடத்தில் 10ம்நம்பர் டவுன் பஸ் மட்டுமே
இயங்கி வருகிறது. தினந்தோரும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், பணிக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானவர்கள் நாகப்பட்டினத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்தும், வேலை முடிந்தும் வீட்டுக்கு செல்வோர் இந்த பஸ்சிலேயே செல்வதால் மாணவர்கள் படிக்கட்டில்
தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பஸ்சை இயக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி நடந்தது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு வனத்துறை, அன்பு டிரஸ்ட் ஆகியவை சார்பில் மூலிகை கண்காட்சி நாகை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
தமிழக பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மணிவாசகம் தலைமை வகித்தார்.
அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். நாகை பாரதிதாசன் அரசு கல்லு£ரி பேராசிரியர் சிவக்குமார், அன்பு டிரஸ்ட் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சித்த மருத்துவம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், சித்த மருத்துவம் தயார் செய்யும் முறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்-கப்பட்டது.
நேற்று நடந்த கண்காட்சியில் நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருமருகல் அருகே சேதமடைந்த அங்காடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார்450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்-திற்கு உட்பட்ட சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடம் சுமார் 1 ஆண்டுக்கு மேல் எந்தவித பராமரிப்பும் இன்றி தரைகளில் உள்ள காரைகள் பெயர்ந்தும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து உள்ளது.இதனால் இதற்கு மாற்றாக அருகில் உள்ள
ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் பழைய கட்டிடத்தை புதுபிக்க எவ்வித நடவடிக்கையும்
எடுக்காமல் உள்ளது எனவும் இதனால் ஊராட்சி சேவை மையம் மூடக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்
அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்களின் அவதியை புரிந்து உடன் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேதாரண்யத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க கோரியும், தேர்தல் வாக்குறுதியை நடப்பு
சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிடவும் காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திற்கு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு ஊழியர் சங்க இணை
செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
நாகை புதிய பஸ் நிலையத்தில் கள்ளச்-சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டுப்புற கலை மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள்,
கரகாட்டம் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. முன்னதாக டி.எஸ்.பி ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம்
வழங்கினார். அதனை தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய கரகாட்டம், தப்பாட்டம் கிராமிய பாடல்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து மது பழக்கத்தினால் சமுதாயத்தில் மரியாதை குறைவு. உறவுகள் இடையே விரிசல். அதிகரிக்கும் கடன் தொல்லை. நினைவாற்றல் இழக்கும் சூழ்நிலை. தவறுகள் செய்ய தூண்டும்.
எனவே மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்று நாடகம் மூலம் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பஸ் நிலையத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள்
கண்டு-களித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்துவது, வைத்திருப்பது, விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டவருக்கும், கள்ளச்சாராய
விற்பனையினை விட்டு மறுவாழ்வு பெறுவதற்கும் உதவி செய்யப்படும்.நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை 04365-247430 அல்லது கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 10581 ஆகிய
எண்களில் தெரிவிக்-கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியம் பாதுகாக்-கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் 2 கார்களையும் சோதனையிட்டனர்.
அப்போது கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் 7 பேரும் வேதராண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து நள்ளிரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கீட்டமைன் என்ற போதை பொருளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
7 பேரும் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை பொருளை எடுத்து வந்தனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் 2 கார்களையும் சோதனையிட்டனர்.
அப்போது கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் 7 பேரும் வேதராண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து நள்ளிரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கீட்டமைன் என்ற போதை பொருளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
7 பேரும் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை பொருளை எடுத்து வந்தனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.






