என் மலர்
நாகப்பட்டினம்
நாகை புது கடற்கரையில் திருத்துறைப்பூண்டி நாட்டியாஞ்சலி குழு நடன கலைஞர்களை ஒருங்கிணைத்து நாகை சங்கமம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டரால் நடத்தப்படும் நாகை சங்கமம் என்ற நடன நிகழ்ச்சியை திருத்துறைப்பூண்டி நாட்டியாஞ்சலி குழு நடன கலைஞர்களை ஒருங்கிணைத்து அரசு விழாவாக நாகை புது கடற்கரையில் நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் நடன-மாடிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். நாட்டியாஞ்சலி குழு செயலாளர் மருத்துவர் தா.ராஜா, அமைப்பாளர் எடையூர் மணிமாறன், துணைச் செயலாளர் முனைவர் நா.துரைராயப்பன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் துணை அமைப்பாளர் பசுபதி ஆகியோர் நாட்டியாஞ்சலி குழு சார்பாக கலந்து கொண்டு விழாவை ஒருங்கிணைத்தனர்.
விழாவில் சிறப்பாக நடனம் ஆடிய தொல்காப்பியா மணிமாறனை கலெக்டர் பாராட்டினார்.
இதில் 150-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குகொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையால் பரிசு பெற்றவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
சிம்காஸ் அமைப்பின் சார்பாக பனை கிழங்கால் செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிலக்கரி தட்டுப்பாடு, மின்தடை ஏற்பட காரணம் மத்திய பா.ஜனதா அரசுதான் என நாகையில் துரை.வைகோ பேட்டியளித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அடுத்த புத்தூரில் ம.தி.மு.க செயல்-வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் நகர செயலாளர் ராஜேந்திர சோழன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறியதாவது:
தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மின்தடை இருப்பதற்கு காரணம் நிலக்கரி தட்டுப்பாடு, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படு-வதற்கு காரணம் மத்திய பாஜக அரசுதான்.
நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு தடைகளை போட்டது, அதுவே தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணம். பருவமழை பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்ட நெற்பயிர் பாதிப்புகளுக்கு இதுவரை ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒன்றிய குழு தமிழகத்தில் வந்து ஆய்வு செய்து சென்று 6 மாதங்கள் ஆகிய நிலையிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட 7400 கோடி நிவாரண தொகையை இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா-மலை ஒரு படித்த இளைஞர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. ஆனால் அவரு-டைய தொலைக்காட்சி பேட்டிகள் அதிர்ச்சி அளிக்கிறது. மின்தடை தொடர்பாக அண்ணாமலை கொடுத்த விளக்கங்கள் அனைத்தும் பொய். பொய்-யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அண்ணாமலை கூறி வருகிறார்.
பா.ஜனதா போன்ற வலதுசாரி அமைப்புகளின் மூலதனமே பொய்தான். பொய்யான தகவல்களை பரப்பி மக்களை மொழியால், இனத்தால் பிரித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் கற்பனைக்கு எட்டாத வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தவறான பிரச்சாரத்தில் பா.ஜனதா ஈடுபடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எரவாஞ்சேரியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு இணைந்து பொதுநல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் அனுராக் தலைமை தாங்கினார். மேலாளர்கள் மாறன், ரவிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் வரவேற்றார். முகாமில் பொது மருத்துவம், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி, கண் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் மருந்து மாத்திரைகள், தேவைப்படுபவர்களுக்கு மூக்குக்கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இதில் முதியோர் அமைப்பு இயக்குனர் இளங்கோ, சி.எஸ்.ஆர் மேலாளர் விஜயகண்ணன், துணைத்தலைவர் சுபைதா ராஜேஷ், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நரிமணத்தில் பழுதடைந்த தொகுப்பு வீட்டை இடித்தபோது காரைகள் பெயர்ந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணம் ஊராட்சி கீழத்தெருவைச் சேர்ந்த தனபதி என்பவருக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடு ஒன்று உள்ளது. வீடு மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் சுமார் 4 ஆண்டுகளாக அந்த வீட்டினை பூட்டி விட்டு அருகாமையில் தகர செட் அமைத்து அதில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான பழுதடைந்த தொகுப்பு வீட்டை பணியாளர்கள் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நரிமணம் கீழத் தெருவை சேர்ந்த அழகு மூர்த்தி, அய்யாக்கண்ணு மற்றும் உத்தமசோழபுரத்தை சேர்ந்த சிங்காரவேல் ஆகிய மூவரும் வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்புற காரை பெயர்ந்து விழுந்தது. இதில் இடர்பாடுகளில் மூவரும் சிக்கினர். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கீழ்வேளூர் கீழத்தெரு இரட்டை மதகடி முகமது ரபிக் (62), மற்றும் சிக்கவலம் மெயின் ரோடு வெங்கடேஷ் என்கிற வெங்கடாஜலபதி (35) ஆகிய இருவர் மீதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது.
இதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தவின்படி 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வேதாரண்யத்தில் மீன்பிடி தடைகாலத்தால் மீன்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்-களில் இருந்து நாள்தோறும் குறைந்த அளவிலான பைபர் படகுகள் 5 கடல்மைல் தொலைவில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
நாள்தோறும் மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடிக்க சென்று காலையில் கரை வந்து சேருகின்றனர். மீனவர்களின் வலையில் வாவல், காலா, பண்ணா, கானாங்-கெளுத்தி, மத்தி மீன்கள், நண்டு இறால் குறைந்த அளவில் கிடைக்கின்றன.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் பைபர் படகுகள் மூலம் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வரும் மீன்கள் நல்ல விலைக்கு போகின்றன.
தற்போது வாவல் மீன் கிலோ 800 ரூபாய்க்கும், காலா மீன் 600 ரூபாய்க்கும், இறால் 400-க்கும், நீலக்கால் நண்டு 700-க்கும், மத்திமீன் 70 ரூபாயக்கும் விற்பனை ஆகிறது.
தற்போது அனைத்து வகைமீன்களும் 100 முதல் 200 வரைவிலை உயர்ந்-துள்ளது. குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததாலும் நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் மீன் விலை உயர்வால் மீன் பிரியர்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன்கள் அதிகம் வரததால் கோழி, ஆட்டு கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இன்னும் ஒரு வார காலத்தில் இப்பகுதியில் ஏரி குளம், குட்ட களில் நாட்டு மீன்கள் பிடிக்க துவங்குவர்கள் அப்பொழுது விரல், கெண்டை சிலேபி நறுவை மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் விலையும் குறையும் என மீன் பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திட்டச்சேரி-திருமருகல் இடையே சாலை சீரமைப்பு பணிகள் உடன் முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நாகை&நன்னிலம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக அன்றாடம் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மிகவும் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான இந்த சாலை திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை சேதமடைந்து இருந்தது.
இச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திட்டச்சேரியில் 5 இடங்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யப்பட்டது.
இன்றுவரை ஜல்லி கற்கள் மேல் தார்சாலை அமைக்கப்-படாமல் அப்படியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படு-கின்றனர். மேலும் இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெயர்ந்து கிடைக்கும் ஜல்லி கற்கள் தெரியாமல் இடறி கீழே விழுந்து விபத்துக்-குள்ளாகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே திட்டச்சேரி-திருமருகல் இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைக்கும் பணியினை உடன் முடிக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அருகே சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த இறையான்குடி கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் ஒற்றுமையால் இந்த பகுதியில் கள்ளச் சாராயம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சட்டவிரோதமாக கள்ளச்-சாராயம் கடத்தி வரப்பட்டு பாக்கெட் சாராயம் இறையான்குடி மற்றும் சிங்கமங்கலம் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் வலிவலம் காவல் நிலையத்தில் புகாரளிக்க இறையான்குடி கிராமத்-தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம பொது-மக்கள் திரண்டனர்.
அப்பொழுது சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன முழக்கங்களை எழுப்பியபடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் நிலையத்தில் யாரும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் அவ்வழியே செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களது நலன் கருதி உடனடியாக விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி கிராம மக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர்.
பொதுமக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்திய வலிவலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் நீண்ட விடுப்புக்கு பிறகு பணிக்குச் சேர்ந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சாராய விற்பனை தொடர்பான புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
புகார் அளிக்க வந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை ஆழியூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் நாகை ஒன்றியம் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை சார்பாக, ஆழியூர் ஊராட்சி மற்றும் தேமங்கலம் ஊராட்சி பகுதியில் வசிக்கக்கூடிய மாற்றுத் திறனாளிக்கான நல உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆழியூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில், நடைபெற்றது.
இதில், தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வட்டார அணி தலைவர் ரவிச்சந்திரன் மாற்றுத்திற னாளிகளுக்கு மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். சொந்த தொழில் தொடங்கிடவும் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுபடுத்திடவும் ஊராட்சி குழு அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக கடனுதவி பெறும் திட்டம். தொழில் குழு திட்டம் 10 பேர் முதல் 30 பேர் வரை ஒன்றிணைந்து துவக்க நிதி பெற்று தொழில் குழு செய்ய கடனுதவி திட்டம்.
உற்பத்தியாளர்கள் குழு திட்டம் 30 முதல் 150 பேர் வரை ஒன்றிணைந்து உற்பத்தியாளர்கள் குழு தொழில் தொடங்க கடனுதவி திட்டம் சுயதொழில் பயிற்சி கம்ப்யூட்டர் சாம்பிராணி, மெழுகு வர்த்தி, அழகு நிலையம் போன்ற பல்வேறு தொழில்கள் கற்றுக் கொள்ள இலவச பயிற்சி திட்டம் பல்வேறு தகவல்களை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளின் முழு விபரங்களுடன், தனிநபர் பயிற்சி தேவையா எந்தவிதமான பயிற்சி வேண்டும் மாதஉதவித்தொகை பெறுகிறாரா. தனிநபர் (அல்லது) குழுவின் வாயிலாக வங்கி கடன் பெற்றவரா உபகரணங்கள் தேவையா வேறு உதவிகள் இருப்பினும் அதுபற்றிய முழு விபரங்களையும் விண்ணப்பங்களாக பெறப்பட்டது.
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சம்பத்குமார் மாற்று திறனாளிகளுக்கு உதவியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும், சரி பார்த்தும் உதவினார். பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாழ்ந்து காட்டுவோம் அலுவலகத்தின் வாயிலாக, மாவட்ட கலெக்டர் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
முன்னதாக, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பிரதிநிதி கலையரசன் வரவேற்றார். மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நாகப்பட்டினம் ஒன்றியத்தின் நிர்வாகியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க செயலாளருமான ஹாஜா நன்றி கூறினார்.
ஆழியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம், ஆர்த்தி, மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் சம்பத்குமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பொருள்வை கண்ணுவாப்பா, ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி, அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கணேஷ், ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட தேமங்கலம் ஊராட்சி ஆழியூர் ஊராட்சியை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் தடுப்பு உலோக தகடுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தாமரைபுலம்- நாகக்குடையான் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் விபத்துகளை தடுப்பதற்கு உலோக தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளை உடைத்து சுமார் 3 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோவை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மதன்குமார் வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான உலோக தகடுகளை திருடிய தாமரைபுலம் மேற்கு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
திருப்புகலூர் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் திருப்புகலூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் சார்பில் மண் மாதிரி சேகரித்தல் முகாம் நடைபெற்றது.
முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் கலந்து கொண்டு மண் மாதிரி எடுத்தல் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடல் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
முகாமில் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சுதா, மண் எடுத்தல் தருணம், சேகரம் செய்யும் முறை, கார் பங்கீட்டு முறையில் மண் மாதிரி சேகரித்தல், மண் மாதிரி எடுத்தல் குறித்து விவசாயிகளின் வயல்களில் செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
நெல், நிலக்கடலை, சிறு தானிய பயிர்களுக்கு அரை அடி ஆழத்திலும், பருத்தி, எள், காய்கறி பயிர்களுக்கு ஒரு அடி ஆழத்திலும் மண் மாதிரி எடுக்க வேண்டும், மண் மாதிரி ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10 இடங்களில் ஆங்கில எழுத்து ‘வீ’ வடிவில் குழி எடுத்து அதன் பக்கவாட்டில் மண்ணை சுரண்டி எடுத்து கார் பங்கீட்டு முறையில் பிரித்து இறுதியில் அரை கிலோ மண் மாதிரியை துணிப்பையில் சேகரம் செய்ய வேண்டும்.
துணி பையோடு விவசாயிகளின் பெயர், தகப்பனார் பெயர், முகவரி, புல எண், உட்பிரிவு எண், அலைபேசி எண், முன் சாகுபடி செய்த பயிர், பின் சாகுபடி செய்ய போகும் பயிர், பாசன ஆதாரம் போன்ற விவரங்கள் அடங்கிய விபரத்தை அனுப்பப்பட வேண்டும். முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் மண் பரிசோதனை நிலைய அலுவலர்கள், திருப்புகலூர் கிராமத்திற்கு உட்பட்ட உதவி வேளாண் அலுவலர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பவித்ரா செய்திருந்தார்.
கீழ்வேளூர் கடைவீதியில் பசுமைப்படை வேன் மூலம் மது, கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கல்வித்துறை தேசிய பசுமைப்படை வேன் மூலம் மது, கள்ளச்சாராயம் பிளாஸ்டிக் இவற்றிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டனர். கீழ்வேளூர் கடைவீதியில் இந்த
பிரச்சாரத்தை முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் துவக்கி வைத்தார்.மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவக்குமார் ஓய்வு பெற்
தலைமையாசிரியர் மணிமாறன், கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் ரஞ்சித் மற்றும் நாகலூர் பசுமைப்படை ஆசிரியர் அருள் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நெல்மணி கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை
வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.






