search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

    நாகை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதனடிப்படையில் கீழ்வேளூர் கீழத்தெரு இரட்டை மதகடி முகமது ரபிக் (62), மற்றும் சிக்கவலம் மெயின் ரோடு வெங்கடேஷ் என்கிற வெங்கடாஜலபதி (35) ஆகிய இருவர் மீதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது.

    இதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தவின்படி 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×