என் மலர்
நாகப்பட்டினம்
திருமருகலில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கூட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு அரசு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி, முன்னாள் ஒன்றிய தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீராசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
வேதாரண்யத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழக அரசு மதுவிலக்கு ஆயத்-தீர்வை மற்றும் விளையாட்டு ஆனணயம் சார்பில் கள்ளச்-சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து துவங்கிய பேரணியை வேதாரண்யம் கோட்டாட்சியர் துரை--முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரணியில் அரசு கலை அறிவியல் கல்லூரி,
ஆர்வி கல்வி நிறுவனங்கள் உட்பட அரசு மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து-கொண்டு முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
பேரணியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கல்லூரி பேராசிரியர் ராஜா உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, மகேந்திரன், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாலிபரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோ-கூர் கிராமத்தில் அதே பகுதிகளை சேர்ந்த சிலர் செங்கல் சூளை போடுவதற்கு மணல் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து
அப்பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் கிராம மக்களோடு சேர்ந்து கடந்த 4ம் தேதி நாகை மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மணல்
கடத்தல் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்-களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய வந்த வருவாய்த்துறை
அதிகாரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கர் மணல் கடத்தல் நடைபெறும் இடத்தை நேரில் சென்று காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பு கும்பல் அம்பேத்கர் மீது தாக்குதலில்
ஈடுபட்டுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அம்பேத்கர் நாகை அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் மீது கீழ்வேளூர் காவல்
நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீகுளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மணல் கடத்தலில் தொடர்புடைய தாக்குதலில் ஈடுபட்ட கோகூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு என்கிற
கோபாலகிருஷ்ணன், மகேஷ், உள்ளிட்ட கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு புரண்டு கதறி அழுது போராட்டத்தில்
ஈடுபட்டனர். இந்நிலையில் இவர்கள் குற்றம் சாட்டும் எதிர்த்தரப்பை சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு, மகேஷ், குஞ்சப்பன், தங்கம் உள்ளிட்டோர் திருவா-ரூர் மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமருகல் ஒன்றியத்தில் மழையால் உளுந்து பயிர்கள் சேதமடைந்தன.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் உளுந்து, பயறு சாகுபடி செய்துள்ளனர். குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் குறைந்த அளவு மகசூல்
கிடைத்தது.இதைதொடர்ந்து உளுந்து மற்றும் பயறு சாகுபடி பணியை திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமருகல்
ஒன்றிய பகுதியில் சாகுபடி செய்து அறுவடை நடைபெறும் வேளையில் மழை பெய்ததால் செடிகள் சேதமடைந்து காணப்படுகிறது.இதனால் ஒரு ஏக்கரில் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டிய
உளுந்து, பயறுகள் ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டாலுக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை, சம்பா,
தாளடி சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உளுந்து, பயிறு சாகுபடியை கடன் வாங்கி மேற்கொண்டு வந்தோம். தற்போது பெய்த மழையால் உளுந்து, பயறு
பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.65 முதல் ரூ.68 வரை கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து, பயறு தற்போது ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால்செலவு செய்ததை விட மிக குறைந்தளவே
கிடைக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
திருமருகல் அருகே மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நாகை வேளாண்மை இணை இயக்குநர் அகண்டராவ் தலைமை தாங்கினார். மண் சேகரிப்பு முகாமை ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் தொடங்கி வைத்து
சிறப்புரையாற்றினார். இதில் திருமருகல் வேளா-ண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் மண்மாதிரி சேகரிக்கும் முறைப்பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி விளக்கி கூறினார். மாவட்ட மண்பரிசோதனை நிலைய
வேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ் மண்மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் செய்து காண்பித்து மண்மாதிரி ஆய்வுக்கு அனுப்பும் முறைப்பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாக்கீர் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்பு தூர்வரும் பணி 2021-யின் கீழ் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பிடாகை, ஆலத்தூர், பனங்காட்டூர், ஆலங்குடிச்சேரி
மற்றும் மானாம்பேட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன்
ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டிலுள்ள பாசன பிரிவு எண் ஒன்று திருமருகல் பராமரிப்பில் இருந்து
வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, நரிமணியார் ஆறு, ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால் பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது. ஆலத்தூர் வடிகால்
வாய்க்கால் 2 ஆயிரம் மீட்டர் வரை, பனங்-காட்டூர் வடிகால் வாய்க்கால் தொலைதூரம் 2 ஆயிரம் மீட்டர், ஆலங்குடிச்சேரி வடிகால் வாய்க்கால் 4 ஆயிரத்து 500 மீட்டர், தென்பிடாகை வடிகால் வாய்க்கால்
3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது. இவ்வடிகால் வாய்க்கால் மூலம் 656 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன் பெறும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காவேரி வடிநில கோட்ட
செயற் பொறியாளார் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, திருமருகல் திருமருகல் ஒன்றிய ஆத்மா குழுத்தலைவர் செல்வசெங்குட்டுவன், உதவிபொறியார்கள் சரவணண்,
செல்வகுமார், ஆலத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் லதா அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருமருகல் ஒன்றியத்தில் உலக புவி தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் செல்லம்மாள் தலைமை தாங்கினார்.
மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.
தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது.
அப்போது மாரியம்மன் மணிமண்ட-பத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்லமுத்து மாரியம்-மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 2-வது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைபட்ட நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். இதற்காக நகரத்தார் மக்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் கிழமையான இன்று காலை இங்கு வந்து சேர்ந்தனர்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் மேற்பார்வையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபட்டது.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சித் தலைவர் பூங்கொடி செயல் அலுவலர் மருதுபாண்டியன் உத்தரவின்படி குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 2-வது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைபட்ட நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். இதற்காக நகரத்தார் மக்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் கிழமையான இன்று காலை இங்கு வந்து சேர்ந்தனர்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் மேற்பார்வையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபட்டது.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சித் தலைவர் பூங்கொடி செயல் அலுவலர் மருதுபாண்டியன் உத்தரவின்படி குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கருப்பம்புலத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் அனுப்பிய வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தமிழக முதல்வர் அனுப்பி வாழ்த்து வாசிக்கப்பட்டது.
அதில் 75-ம் ஆண்டை அமுத பெருவிழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் 9 இனங்களான வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நிலையம், குடிநீர் வசதி, சமூக பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள், பசுமையும் தூய்மையும் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை ஊராட்சி அடைய வேண்டுகிறேன் என தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பின்பு பசுமை கிராமம் தூய்மை கிராமம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கிராம சபா கூட்டத்தில் நாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பெரிய அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை நகர பகுதியில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக அர்ஜூன் சம்பத் பிறந்தநாள் விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம், நீர்மோர், பானகம் மற்றும் முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் ஜெய விஜயேந்திர சுவாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை நகர தலைவர் பிரதீப் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிட்ட நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்-டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரூ.4 கோடி மதிப்புள்ள 400 கிலோ
கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன், நிவாஸ், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார்
கைது செய்தனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலின் தலைவனான சிலம்பரசன் வீட்டில் நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிலம்பரசன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது குறித்த சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் மற்றும் அவருடைய நண்பர்களோடு போலீஸ் சீருடையுடன் நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி பிரியாணி விருந்தில் பங்கேற்று உள்ளார்.
கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய இன்ஸ்பெக்டர் கடத்தல் குற்றவாளிகளோடு சொகுசு ஓட்டலில் பிரியாணி சாப்பிடும் படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கஞ்சா கடத்தல் கும்பலோடு சீருடையுடன் பிரியாணி சாப்பிட்ட இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.






